
படைக்குறைப்புக்கான முயற்சிகளில் இறங்கும் சிறிலங்கா! முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை. ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை. ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை. பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும். அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம். எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.
இனி,
போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வாரம் வடக்கிலுள்ள படைத் தலைமையகங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
முதலில் கிளிநொச்சி படைத் தலைமையகம், பின்னர் முல்லைத்தீவு, வன்னி, யாழ்ப்பாணம் என்று வடக்கிலுள்ள நான்கு படைத் தலைமையகங்களுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களின் நோக்கம் படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகும்.
பொதுவாக இராணுவத் தளபதிகள் புத்தாண்டுக்கு முன்னர் இத்தகைய பயணங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்தமுறை இராணுவத் தளபதியின் பயணத்துக்கு வேறு நோக்கங்களும் இருந்தன. இதை அவர் படையினர் மத்தியில் நிகழ்த்திய உரைகளில் தொட்டுக் காட்டியிருந்தார். அதுபற்றி ஊடகங்களில் பெரிதாக எதுவும் வெளிவராது போனாலும், படையினர் மத்தியில் சில விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத்தை நவீன மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக அனைத்துப் படைமுகாம்களையும் வலைப்பின்னல் ஊடாக இணைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இது முக்கியமானதொரு திட்டமாகும்.
போருக்குப் பிந்திய இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதைக் கருதலாம்.
போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வருகின்றது படைத்தரப்பு.
முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன.
குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது.
வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை.
ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை.
ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை.
பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும்.
அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம்.
எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.
இலங்கை இராணுவம் இப்போது 2 இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்டுள்ளது. இலங்கை போன்றதொரு சிறிய அதுவும் எல்லைப் புறமோதல்களுக்கு சாத்தியமேயில்லாத ஒரு நாட்டுக்கு இது அளவுக்கும் மீறிய படைபலமாகும்.
போர் நடைபெற்ற காலங்களில் படைபல அதிகரிப்புக் குறித்து கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்றன.
இந்தநிலையில் தொடர்ந்தும் பெரியதொரு படைக் கட்டமைப்பைப் பேணுவது சுலபமான காரியமல்ல.
அரசாங்கம் முன்னர் படைக்குறைப்புச் சாத்தியமில்லை என்றே கூறி வந்தாலும், இப்போது அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு காலத்தில் உலகின் பல நாடுகளையும் தமது படைபலத்தினால் கட்டியாண்ட பிரிட்டனே படைக்குறைப்பில் இறங்கியுள்ள போது, இலங்கையின் நிலை ஒன்றும் விதிவிலக்காக இருக்க முடியாது.
பொருளாதார நெருக்கடிகளால் தான் பிரிட்டன் அண்மையில் 5000 படையினரை இராணுவத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் 17 ஆயிரம் பேர் நீக்கப்படவுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையின் நிலை எம்மாத்திரம்.
இப்போது பிரிட்டனின் இராணுவ ஆட்பலத்தை விடவும் இலங்கையில் படையினரின் எண்ணிக்கை அதிகம் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப் படைத் தலைமையகத்தில் படையினர் மத்தியில் உரையாற்றும் போது, இதுபற்றி மேலோட்டமாகப் பேசியுள்ளார்.
இராணுவத்தில் இருக்கும் வரை அதற்குரிய தொழில்தேர்ச்சியுடன் இருப்பதற்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும், ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் மாற்று வேலையை செய்யும் திறனைப் படையினர் இப்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
22 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியத்தைப் பெறுவர். அவர்கள் பின்னர் வேறு வேலைகளில் இணைந்து கொள்ளலாம் இணைந்து கொள்ளாமல் ஓய்வூதியத்தைப் பெற்றும் காலத்தை கழிக்கலாம். ஆனால் இராணுவத் தளபதி கூறியுள்ள கருத்தின் உட்பொருள் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை.
படைக்குறைப்புக்கான சாத்தியத்தை சூசகமான முறையில் வெளிப்படுத்துகிறாரா என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
படைக்குறைப்பு ஒன்று நிகழ்ந்தால் விலக்கப்படும் படையினருக்கு ஒய்வூதியம் முழுமையாக வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான்.
ஒரு குறிப்பிட்டளவு நட்டஈட்டுத் தொகையுடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
இதற்காகவே இராணுவத் தளபதி ஓய்வுக்கு பின்னர் மாற்றுவேலை தேடுவது குறித்தும், அதற்கான தொழிற்திறன் குறித்தும் கருத்து கூறியிருக்கலாம்.
படைக்குறைப்பு என்று வரும்போது இராணுவத்துக்குள் பல பிரச்சினைகளை அது உருவாக்கும்.
படைக்குறைப்பை மேற்கொள்ளும்போது அதை மேற்கொள்ளும் முறை,படையினரின் நலன்கள் என பல விடயங்களில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.
ஆனால் அதையெல்லாம் சமாளித்தேயாக வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும்.
இப்போது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதும், அது வருங்காலத்தில் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இப்போது ஆயுததளபாடத் தேவைகள் இல்லை என்பதால் அந்த நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
அதைப் படையினரின் நலன்களுக்குச் செலவிட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் போர்க்காலத்தில் ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்டளவு நிதியை படையினரின் நலன்களுக்காக தொடர்ந்து ஒதுக்க, சர்வதேச நிதி நிறுவனங்கள் இடம் கொடுக்குமா என்பது சந்தேகம்.
சர்வதேச நிதி நிறுவனங்கள் தான் அரசுக்கு கடன்களை வழங்கி தூக்கி நிறுத்தி வைத்திருக்கின்றன. அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது நிபந்தனைகளை இறுக்கினாலோ படைக்குறைப்பையும், படையினருக்கான செலவுக் குறைப்பையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டி வரலாம்.
போர் இல்லாத சூழலில் படைபலப் பேணலுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்வதை அரசினால் நியாயப்படுத்த முடியாது. இந்தநிலையில் தான் இராணுவத் தளபதியின் வடபகுதிப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
கட்டுரையாளர் சுபத்ரா





