
நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.
நமது தாய் மண்ணில் ஒரு தமிழீழ அரசை நிறுவுவதன் மூலம்தான் ஈழத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிம்மதியோடும் பூரணமான சுதந்திரத்தோடும் வாழ முடியும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நமது ஈழ விடுதலைப் போராட்டம், உலக நாடுகள் செய்த சதியால் நசுக்கப்பட்டு, நமது சுதந்திரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாத, எழுத முடியாத பாவிகளாக, அடக்கப்பட்டவர்களாக நமது மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் புலம் பெயரந்து வாழுகின்ற நமது உறவுகளின் ஆழ்ந்த தேசியப்பற்று காரணமாகவும் தீவிரமான ஈடுபாடு காரணமாகவும் கற்பனையில்லாத ஒரு அமைப்பாக உருவாகியுள்ளதே அந்த நாடு கடந்த தமிழீழ அரசு ஆகும்.
நமது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள திரு விசுவநாதன் உருத்திரகுமார் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து இந்த அமைப்பை மேலும் வளர்த்தெடுக்க அயராது உழைத்து வருகி;ன்றார் என்பதை உலகத் தமிழர்கள் நன்கு கவனித்து வருகி;ன்றனர்.
நாடு கடந்த தமிழீழ அரசானது தற்போது மேற்குலக நாடுகளுக்குள் முடங்கிங்கிடக்காமல் நாடுகளைக் கடந்த செல்லும் புதிய வேகத்தைப் பற்றி குறிப்பிடுவதும் அதற்கான நமது வாழ்த்துக்களை தெரிவிப்பதும்தான் இவ்வார கதிரோட்டத்தின் நோக்கம் என்று நாம் கூறுகி;ன்றோம்.
அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கூட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பல அரசியல் நெருக்கடிகள் மற்றும் காவல்துறையின் எச்சரிக்கை போன்றவற்றையும் சமாளித்து பல ஆர்வலர்கள் கலந்து கொண்டு அந்த நிகழ்வை ஒரு வெற்றிவிழாவாக ஆக்கியுள்ளார்கள். இதுவும் பாராட்டுக்குரியது.
மேலும், மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் திரு உருத்திரகுமார் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக கோலாலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
கோலாலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கனடாவிருந்து சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விடயமானது உலக மக்களைக் கவருகின்ற ஒரு அம்சமாகும்.
அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் தமது சொந்தச் செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் அரசின் உறுதியான எதிர்காலத்திற்கு தேவையான அத்திவாரத்தை அமைக்கும் பணியையும் உதயன் பாராட்டுகின்றது.. வாழத்துகின்றது.
நாடுகளைக் கடந்து செல்லும் நமது தமிழீழ அரசானது மிகவும் அவதானமாக செய்ற்பட வேண்டும் என்ற அக்கறையாக வேண்டுகோளையும் நாம் விடுக்கின்றோம். பிரதமர் தீரு உருத்திரகுமார் கனடாவிலிருந்து தெரிவான அதன் சபாநாயகர் திரு பொன். பால்ராஜன் போன்றவர்களும் வௌ;வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கத்தவர்களும் பலமான குழுவாக செயற்பட்டு “உள்ளேயும்” “வெளியேயும்” இருந்து வரும் ஆரோக்கியமற்ற எதிர்ப்புக்களைக் களைந்து வெற்றி நடை போடவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
கனடா உதயன் கதிரோட்டம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen