Main Pages Kathiravan.com

Sonntag, 1. August 2010

சமாதானம் என்று சொல்லிவந்த வஞ்சகன் : எரிக் சொல்ஹைம்


நோர்வேயிலுள்ள சில 'அபிவிருத்தி' அமைப்புகள் புலம்பெயர் தமிழர் அணியை அண்மையில் கவர்ந்திழுத்திருந்தன. சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்புலத்தின் சிங்கள் அரசு சாரா நிறுவனமான இலங்கை பச்சை இயக்கம் (Green Movement of Sri Lanka (GMSL)) என்பதுடன் இணைந்து வடக்கு கிழக்கின் 'அபிவிருத்தி' அற்றி ஆராய்வதற்காக புலம்பெயர் தமிழர்களை அவ்வமைப்புகள் அழைத்துச் சென்றன.

'வடக்குக் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்காக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இலங்கையின் அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து செயற்பட இணங்கி விட்டன என்று இந்த விஜயமானது இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்திருந்தது' என்று இந்த விஜயத்தை மேற்கொண்டு திரும்பிய அணியினர் விடுத்த அறிக்கை கூறியது.

"சிறந்த அனுபவம், வல்லுநர்கள், வலையமைப்பு, வளங்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியவற்றை இலங்கை பச்சை இயக்கமானது கொண்டிருக்கும் என்பதால் ரெக் நோர்வே (TECH Norway), ரெக் ஜேர்மனி (TECH Germany), ரெக் மலேசியா (TECH Malaysia), ஃபோகஸ் (FOKUS) மற்றும் நோர்வே அரசு சாரா நிறுவனமான அபிவிருத்தி நிதி ஆகியவை இலங்கை வடக்குக் கிழக்கில் பணித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உதவக்கூடிய சிறந்த பங்காளராக அந்நிறுவனம் திகழும்" என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்த ஒருங்கிணைந்த பணியை ஏறபாடு செய்தவர்களை புகழ்ந்து தள்ளுகின்ற அந்த அறிக்கை, "தமிழ் புலம்பெயர்வாளர்கள் பச்சை இயக்கத்துடன் சேர்ந்து வடக்குக் கிழக்கு அபிவிருத்திப் பணிகளைப் புரிகிறார்கள் என்று அபிவிருத்தி நிதியின் அலைஸ் என்னல்ஸ் மற்றும் ஐனா ஆகியோர் பரிந்துரைத்தபோது அவர்கள் நன்றாகத் தேர்வு செய்துள்ளார்கள்" என்று கூறியது.

"ஏ9 சாலையூடாக மேற்படி அணி பயணம் செய்ய அனுமதி கிடைத்தபோது பச்சை இயக்கமானது மிகப்பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டது. ஏனெனில் வெளிநாட்டவர்கள் ஏ9 சாலையூடாக பயணிக்க அனுமதிக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும். இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு பச்சை இயக்கத்துக்கு உள்ளதால் இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கான செயற்குழுவாக அவ்வியக்க்ம் இருக்கலாம். ஆகவே, கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லுதல், ஜனாதிபதியின் சிறப்பு அதிரடிப் படையின் அனுமதி மற்றும் அரச அதிபரின் அனுமதி ஆகியவற்றைப் பெறுதல் என்பவற்றை அவ்வியக்கம் இலகுவாகவும் விரைவாகவும் செய்யும்" என்று அந்த அறிக்கையில் வாதிடப்பட்டுள்ளது.

பணித்திட்டங்களைக் கண்காணிக்கும் சலுகை பச்சை இயக்கத்துக்கே என்பதையும் புலம்பெயர் அணி முன்மொழிகின்றது. இந்த திட்டத்தில் ஈடுபட்ட நேர்வேயைச் சேர்ந்த நிதியுதவி நிறுவனங்கள் தமது கணக்கறிக்கை நோக்கத்துக்காக நிதியை தாம் அங்கீகரித்த அரசு சாரா நிறுவனங்கள் ஊடாக மட்டுமே விடுவிக்க முடியும் என்று ஆரம்பத்தில் வலியுறுத்தின.

பொருளாதார ஆலோசனை இல்லம் என்னும் TECH (இது தமிழீழ ஆலோசனை இல்லம் என்பதையும் குறிக்கும்) என்பது யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் அ. துரைராஜாவின் உள்ளார்வக் கொள்கையாகும். தமிழீழ உருவாக்கத்துக்கான மிக முக்கிய அபிவிருத்தி நிறுவனமாக இது அமையும் எனக் கருதப்பட்டது.

இதேவேளை, இலங்கை பச்சை இயக்கம் பற்றி சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்கள் எண்ணியவை பின்வருமாறு:

"பச்சை இயக்கமானது ஜாதிக ஹெல உறுமயவுடன் நன்கு தொடர்புபடுகிறது.

"பச்சை இயக்கத்தின் தலைவர் சுரஞ்சன் கொடிதுவக்கு.

"சம்பிக்கா ரணவக்க (ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்) ஜாதிக ஹெல உறுமயவைத் தோற்றுவிக்க முன்னர் குறைந்தபட்சம் 90 ஆம் ஆண்டுகளில் இருந்து சுரஞ்சன் கொடிதுவக்கு அவரது அரசியலில் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

"89 ஆம் ஆண்டில் ஜே.வி.பி படுகொலைக்குப் பின்னர், 1992 இன் சம்பிக்கா தனது முதலாவது அரசியல் அமைப்பான "ஜனதா மித்துரோ" (மக்களின் நண்பர்கள்) என்பதை உருவாக்கினார். அவர்களின் அதிகாரபூர்வ விஞ்ஞாபனத்தின்படி, 'ஜனதா மித்துரோவின் போக்கு "பச்சை சமத்துவம்" என்பதாகும். அந்த நாட்களின் ஜனதா மித்துரோவினைப் பின்பற்றியவரே இப்போதைய பச்சை இயக்கத்தின் தலைவர் சுரஞ்சன் ஆவார்.

"ஆகவே பச்சை இயக்கம் என்பது ஜாதிக ஹெல உறுமயவின் அதிகாரபூர்வமற்ற அமைப்பு என்பதை ஒருவராலும் நிரூபிக்க முடியாது. ஜாதிக ஹெல உறுமய இவ்வாறான பல அமைப்புகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் அவர்கள் இதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, பச்சை இயக்கம் தவிர, பாலசக்தி சன்சதயா (சக்தி மன்றம்) என்ற ஒன்றும் உள்ளது. இது 80 ஆம் ஆண்டுகளில் இருந்து சம்பிக்காவின் நீண்டகால நண்பர்களான இருவரால் கொண்டுநடத்தப்படுகிறது (அஷோக அபேகுணவர்த்தன மற்றும் பந்துல சந்திரசேகர).

"இவையனைத்திலும் பொதுவான தன்மை உள்ளதை ஒருவரால் எளிதாகக் காணமுடியும்: இரு அமைப்புகளும் சுற்றுச்சூழல் சிக்கல் குறித்தே பணியாற்றுகின்றன. அண்மைக் காலம் வரை சம்பிக்கா ரணவக்க சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார்.

"மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால்: சிங்கள உறுமய கட்சியின் வழிவந்தவர்களாக 2004 பெப்ரவரியில் ஜாதிக ஹெல உறுமய கட்சியை அதிகாரபூர்வமாக உருவாக்கிய பின்னர், தனது ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக ஒரு தொகுதி நபர்களை அது நியமித்தது. அவர்களில் பச்சை இயக்கத்தின் சுரஞ்சன் கொடிதுவக்குவும் ஒருவராவார். சக்தி மன்றத்தின் அச்ஜோக அபேகுணவர்த்தன இன்னொருவர் ஆவார்."

"பச்சை இயக்கமானது ஜாதிக ஹெல உறுமயவிடமிருந்து விலகி நடக்கத் தீர்மானித்துள்ளதாகக் கூறும் ஒரு செய்தி அண்மையில் குறிப்பிட்ட சில வலைத்தளங்களில் உலாவியது. தாம் ஜாதிக ஹெல உறுமயவுடன் கொண்டிருந்த உறவை முறித்துவிட்டதாகக் காண்பிக்க பச்சை இயக்கம் விரும்பியது. இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்ட நாடகம். அவர்கள் ஜாதிக ஹெல உறுமயவிடமிருந்து பிரிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றால், அரசு சாரா நிறுவனங்கள் அதற்கு நிதியுதவி செய்வதில் சிக்கல் இருக்கும்".

"ஒன்று மட்டும் நிச்சயம், சுரஞ்சன் கொடிதுவக்கு சம்பிக்காவுடன் ஒருபோதுமே உறவை முறிக்க மாட்டார். அவர்கள் சுற்றுச்சூழல் குறிக்கோளைச் சாட்டாக வைத்து தமிழ்ப் பகுதிகளில் ஊடுருவத் திட்டமிடுகிறார்கள்".

பச்சை இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்த நோர்வே நிறுவனத்தின் அலைஸ் என்னல்ஸுடன் தொடர்பு கொண்டபோது, அவர் கூறியவையாவன:

"அபிவிருத்தி நிதியின் ஒரு பங்காளராக பச்சை இயக்கமானது 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது, இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் சுற்றுச்சூழல் ஆலோசனை அமைப்புக்கு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. அரசியல், இனம் மற்றும் புவியியல் தடைகள் முழுவதுமாக இலங்கையர்களை சுற்றுச்சூழலானது பாதிக்கின்றதால், பச்சை இயக்கமானது இலங்கையிலுள்ள பல்வேறுதரப்பட்டவர்களுடன் செயற்படுவதாக நாங்கள் அறிகிறோம்.

"அபிவிருத்தி நிதியானது அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துன்ற விதமாக தற்போது இலங்கை முழுவதும் பல இடங்களில் 11 உள்ளூர் பங்காளர்களைக் கொண்டுள்ளது".

புலம்பெயர் அணியானது கடுந்துன்பத்திலுள்ள மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பச்சை இயக்கத்தின் ஆதிக்கமிக்க கூட்டுச்சேர்க்கையை மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு அதிரடிப்படையுடனான கூட்டுறவையும் கூட ஏற்றுள்ளார்கள். அவர்கள் இலங்கைக்கு செய்த பயணம் முழுவதுமே நோர்வேயிலுள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் கொண்டுநடத்தப்பட்டுள்ளது.

தற்போது, ரெக் மலேசியாவிலிருந்தான புலம்பெயர் அணியின் தலைவர் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் 2010 ஓகஸ்ட் அல்லது செப்ரம்பரில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

ரெக் நோர்வே, ரெக் ஜேர்மனி மற்றும் ரெக் மலேசியா ஆகியவை "தொடர்பாடல் செயற்பாட்டில்" இறங்குகின்றன. இவை வடக்குக் கிழக்கு அபிவிருத்தித் திட்டத்துக்காக புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் ஆதரவைப் பெறுவதற்கு உழைக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளாக நடந்த போர் நிறைவடைந்து விட்டதாக வழக்கமாகக் கூறுவது போல தவறான இடத்தில்தான் இந்த அறிக்கையும் ஆரம்பிக்கிறது. ஆனால் எந்தவொரு போருமே சமாதான ஒப்பந்தம் மற்றும் அரசியல் இணக்கப்பாடு எதுவுமின்றி ஓயவே மாட்டாது. இதுவே உலக நியதி.

அரசியல் தீர்வு இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வெறித்தனமிக்க சிங்கள அமைப்புகளின் ஆதிக்கத்தை தமிழர்ளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்பதிலுள்ள பெரிய திட்டம் என்ன என்பதைக் கேட்பதற்கு தமிழ் அபிவிருத்தியாளர்கள் முதுகெலும்பு உள்ளவர்களாக இருப்பது அவசியமாகும்.

எதற்காக பயனற்ற உதவியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசியல் நன்மையானது கொடுமைக்காரர்களுக்கும் செல்லவேண்டும்?

மேற்குலக நாடுகளில் உள்ள நிதி மூலங்கள் நிதியுதவியை அளித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிரீதியான தேவைகளுக்கு அர்த்தமே இல்லாமல் இருக்கப் போகும் ஒன்றுக்கு புலம்பெயர் தமிழர்கள் கூட்டுச் சேர்வது நன்மையானதா?

குற்றச்செயல்களில் இருந்து இலங்கை மக்களை விடுவிக்க இயலாத ஒரு பயங்கரவாத நாட்டுக்கு தமிழர்கள் விட்டுக்கொடுக்கின்ற பொருத்தமற்ற அரசியல் நன்மை மூலமாக, சிங்களவர்களும் தாங்களாகவே இதை வெளிப்படையாகக் கூறும்போது,

சிங்களவர்களுடன் ஈழத் தமிழர்களுக்கு என்ன நேர்மையான அரசியல் தீர்வு அமையும் அமையும்?

ஆனால், மஹிந்தவின் அரசு சாரா நிறுவனத்தின் கீழ் 'தோற்கடிக்கப்பட்ட' தமிழர்களைப் பணியாற்ற வைப்பதன்மூலம் அரசியல் சமரசம் மற்றும் அவர்களது நடவடிக்கைகளுக்குச் சாதகமான சர்வாதிகாரமான நாடு இரண்டுமே சாத்தியமானவை என மேற்குலக நாடுகளிலுள்ள அமைப்புகள் நினைக்கின்றன.

வழக்கமாக நடப்பதுபோல அபிவிருத்தித் தரகர்களின் வழக்கமான விளையாட்டுக்கு இரையாகுவது தவிர வேறொன்றை எம்மால் சிந்திக்க முடியாதா? முகாம்களுக்கு சாப்பாட்டுப் பொதி வழங்கவேண்டும் என்று கூறி நிதியுதவி பெற்றுவந்த சிங்கள அரசு சாரா நிறுவனம் ஒன்று, தான் முன்னரே சேமித்து வைத்த பணத்திலிருந்து தற்போது மூன்றடுக்குக் கட்டடம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தில் கட்டியுள்ளது.

இலங்கையிலுள்ள தனது மக்களை அணுகுவதற்கான மாற்று வழிகள் பற்றி உலகநாடுகளைச் சமாதானப்படுத்தி ஆக்கபூர்வமாகச் சிந்திக்க புலம்பெயர் தமிழர்களால் ஏன் முடியவில்லை?

ஆக்கபூர்வமாக சிந்திக்க முடியவில்லை என்றால், ஆனால் தமது இனசனத்துக்கு உதவிசெய்ய விரும்பினால், அதை நேரடியாக அல்லது தனிநபர் தனிநபராகக் கூடக் கொடுக்க விடலாம். நாட்டிலுள்ள மக்கள் அபிவிருத்தித் தரகர்கள் என்ற பெயரில் ஒருவரும் இல்லாமலே தம்பாட்டில் தமது வாழ்க்கையைக் கட்டிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆக்கபூர்வமானவர்களாக உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழர்கள் இதைச் செய்து வருகிறார்கள், இப்போதும் கூட அவர்களால் இது முடியும்.

இவையே புலம் பெயர் தமிழர்கள் வட்டாரங்களிலிருந்து கிடைத்த அபிப்பிராயங்கள் ஆகும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen