<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924</id><updated>2012-02-16T10:46:07.188-05:00</updated><title type='text'>கதிரவனின் ஆய்வு தொகுப்புகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>137</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-4166332586502350380</id><published>2011-04-17T04:46:00.002-04:00</published><updated>2011-04-17T04:50:04.590-04:00</updated><title type='text'>பாதுகாப்பு நிலவரம்: போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வரும் படைத்தரப்பு..............?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-xim8QViuoXg/TaqpPbuhnOI/AAAAAAAAAg0/eXHLcj2s-Ds/s1600/mahinda_ghotabaya_new.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-xim8QViuoXg/TaqpPbuhnOI/AAAAAAAAAg0/eXHLcj2s-Ds/s400/mahinda_ghotabaya_new.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596471569567292642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படைக்குறைப்புக்கான முயற்சிகளில் இறங்கும் சிறிலங்கா! &lt;/strong&gt;முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை. ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை. ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை. பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும். அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம். எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வாரம் வடக்கிலுள்ள படைத் தலைமையகங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கிளிநொச்சி படைத் தலைமையகம், பின்னர் முல்லைத்தீவு, வன்னி, யாழ்ப்பாணம் என்று வடக்கிலுள்ள நான்கு படைத் தலைமையகங்களுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களின் நோக்கம் படையினருக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இராணுவத் தளபதிகள் புத்தாண்டுக்கு முன்னர் இத்தகைய பயணங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்தமுறை இராணுவத் தளபதியின் பயணத்துக்கு வேறு நோக்கங்களும் இருந்தன. இதை அவர் படையினர் மத்தியில் நிகழ்த்திய உரைகளில் தொட்டுக் காட்டியிருந்தார். அதுபற்றி ஊடகங்களில் பெரிதாக எதுவும் வெளிவராது போனாலும், படையினர் மத்தியில் சில விடயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தை நவீன மயப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக அனைத்துப் படைமுகாம்களையும் வலைப்பின்னல் ஊடாக இணைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது முக்கியமானதொரு திட்டமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;போருக்குப் பிந்திய இராணுவ மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதைக் கருதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வருகின்றது படைத்தரப்பு. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் புலிகள் சார்ந்த, போர் சார்ந்த விபரங்களைத் தேடுவதிலேயே படைத்தரப்பு ஈடுட்டிருந்தது. ஆனால் இப்போது அரசியல், சமூகம்,குற்றங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு வகைப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சியை தடுக்க வேண்டுமாயின் அதற்கு வெறுமனே படை சார்ந்த புலனாய்வுகள் உதவாது என்று உணரப்பட்ட நிலையில் தான் இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகள் பரவலாக்கம் பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக வடக்கில் இத்தகைய புலனாய்வு நடவடிக்கைகளின் அவசியத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டது தொடக்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி வேட்பாளர்களின் பட்டியல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் வரை வெளிப்படையானவை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரகசியமாக திரட்டப்படும் தகவல்கள் பலரும் அறிந்து கொள்ளாதவை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவை தான் மிகவும் முக்கிமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;பிரதேச ரீதியாக இராணுவத்தினர் திரட்டும் புலனாய்வுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலையமைப்பின் மூலம் வழிசெய்து கொடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் சந்தேகப்படும் படியான ஒவ்வொரு செயல்களும் பல்வேறு கண்களால் உற்று நோக்கப்படும் துருவி ஆராயப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அது இன்னொரு ஆயுத மோதலைத் தடுக்க உதவும் என்று கருதுகிறது அரசாங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான், அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டுள்ள மற்றொரு கருத்து, படைக்குறைப்புக்கான சாத்தியங்கள் குறித்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவம் இப்போது 2 இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்டுள்ளது. இலங்கை போன்றதொரு சிறிய அதுவும் எல்லைப் புறமோதல்களுக்கு சாத்தியமேயில்லாத ஒரு நாட்டுக்கு இது அளவுக்கும் மீறிய படைபலமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;போர் நடைபெற்ற காலங்களில் படைபல அதிகரிப்புக் குறித்து கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் தொடர்ந்தும் பெரியதொரு படைக் கட்டமைப்பைப் பேணுவது சுலபமான காரியமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் முன்னர் படைக்குறைப்புச் சாத்தியமில்லை என்றே கூறி வந்தாலும், இப்போது அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் உலகின் பல நாடுகளையும் தமது படைபலத்தினால் கட்டியாண்ட பிரிட்டனே படைக்குறைப்பில் இறங்கியுள்ள போது, இலங்கையின் நிலை ஒன்றும் விதிவிலக்காக இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார நெருக்கடிகளால் தான் பிரிட்டன் அண்மையில் 5000 படையினரை இராணுவத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் 17 ஆயிரம் பேர் நீக்கப்படவுள்ளனர். &lt;br /&gt;இந்தநிலையில் இலங்கையின் நிலை எம்மாத்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பிரிட்டனின் இராணுவ ஆட்பலத்தை விடவும் இலங்கையில் படையினரின் எண்ணிக்கை அதிகம் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப் படைத் தலைமையகத்தில் படையினர் மத்தியில் உரையாற்றும் போது, இதுபற்றி மேலோட்டமாகப் பேசியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தில் இருக்கும் வரை அதற்குரிய தொழில்தேர்ச்சியுடன் இருப்பதற்கு வசதிகள் செய்து தரப்படும் என்றும், ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் மாற்று வேலையை செய்யும் திறனைப் படையினர் இப்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;22 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியத்தைப் பெறுவர். அவர்கள் பின்னர் வேறு வேலைகளில் இணைந்து கொள்ளலாம் இணைந்து கொள்ளாமல் ஓய்வூதியத்தைப் பெற்றும் காலத்தை கழிக்கலாம். ஆனால் இராணுவத் தளபதி கூறியுள்ள கருத்தின் உட்பொருள் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;படைக்குறைப்புக்கான சாத்தியத்தை சூசகமான முறையில் வெளிப்படுத்துகிறாரா என்று ஐயப்பட வேண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;படைக்குறைப்பு ஒன்று நிகழ்ந்தால் விலக்கப்படும் படையினருக்கு ஒய்வூதியம் முழுமையாக வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குறிப்பிட்டளவு நட்டஈட்டுத் தொகையுடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே இராணுவத் தளபதி ஓய்வுக்கு பின்னர் மாற்றுவேலை தேடுவது குறித்தும், அதற்கான தொழிற்திறன் குறித்தும் கருத்து கூறியிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;படைக்குறைப்பு என்று வரும்போது இராணுவத்துக்குள் பல பிரச்சினைகளை அது உருவாக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;படைக்குறைப்பை மேற்கொள்ளும்போது அதை மேற்கொள்ளும் முறை,படையினரின் நலன்கள் என பல விடயங்களில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதையெல்லாம் சமாளித்தேயாக வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதும், அது வருங்காலத்தில் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஆயுததளபாடத் தேவைகள் இல்லை என்பதால் அந்த நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். &lt;br /&gt;அதைப் படையினரின் நலன்களுக்குச் செலவிட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போர்க்காலத்தில் ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்டளவு நிதியை படையினரின் நலன்களுக்காக தொடர்ந்து ஒதுக்க, சர்வதேச நிதி நிறுவனங்கள் இடம் கொடுக்குமா என்பது சந்தேகம். &lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச நிதி நிறுவனங்கள் தான் அரசுக்கு கடன்களை வழங்கி தூக்கி நிறுத்தி வைத்திருக்கின்றன. அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலோ அல்லது நிபந்தனைகளை இறுக்கினாலோ படைக்குறைப்பையும், படையினருக்கான செலவுக் குறைப்பையும் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டி வரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;போர் இல்லாத சூழலில் படைபலப் பேணலுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்வதை அரசினால் நியாயப்படுத்த முடியாது. இந்தநிலையில் தான் இராணுவத் தளபதியின் வடபகுதிப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இரண்டாவது ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்பது, படைத்தரப்புக்கு இது ஒரு கசப்பான செய்தியாகவே இருக்கும். எனென்றால் படைக்குறைப்போ அல்லது படைகளுக்காக செலவினக் குறைப்போத அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரையாளர் சுபத்ரா &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-4166332586502350380?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/4166332586502350380/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post_17.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/4166332586502350380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/4166332586502350380'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post_17.html' title='பாதுகாப்பு நிலவரம்: போர்க்காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான தகவல்களைத் திரட்டி வரும் படைத்தரப்பு..............?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-xim8QViuoXg/TaqpPbuhnOI/AAAAAAAAAg0/eXHLcj2s-Ds/s72-c/mahinda_ghotabaya_new.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-2939204279190674704</id><published>2011-04-16T13:44:00.004-04:00</published><updated>2011-04-16T13:52:19.612-04:00</updated><title type='text'>ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் - சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-ZnVw5Cz-oms/TanXR5gKMZI/AAAAAAAAAgs/_dEAU4w5yro/s1600/ban.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 238px;" src="http://1.bp.blogspot.com/-ZnVw5Cz-oms/TanXR5gKMZI/AAAAAAAAAgs/_dEAU4w5yro/s400/ban.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596240714478006674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு 196 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையை மார்ச் 31ம் நாள் தயாரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையின் பிரதி ஒன்று சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் புத்தாண்டுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முயற்சிகளை நிராகரித்துள்ள இந்த அறிக்கையில், இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசு நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை பணயக் கைதிகள் போன்று தடுத்து வைத்திருந்ததாகவும், தப்பிச் செல்ல முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் கொழும்பு ஊடகம் ஒன்றின் ஊடாக கசிந்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. முழுமையான விபரங்களை விரைவில் தரப்படும். &lt;/strong&gt;“ சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமானப் போரை நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினாலும்,  அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் பாரதூரமான சம்பவங்களில் சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் ஈடுபட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கருதப்படத்தக்கவை. &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக்கட்டத்தில், 2008 செப்ரெம்பர் தொடக்கம் 2009 மே 19 வரையான காலப்பகுதியில், சிறிலங்காப் படையினர் வன்னியில் முன்னேறிச் சென்ற போது மேற்கொண்ட பரவலான எறிகணைத் தாக்குதல்களில் ஏராளமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை வாகனங்களில் ஆட்கள் கடத்தப்பபட்டது, காணாமற்போனது போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் மூன்று தாக்குதல் தவிர்ப்பு வலயங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களின் மூலம் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான இழப்புகளுக்கு சிறிலங்கா அரசின் பீரங்கித் தாக்குதல்களே காரணம்.  மருத்துவமனைகளின் மீதும் சிறிலங்கா அரசு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகளும் மோட்டார் மற்றும் ஆட்டிலறி போன்ற பீரங்கிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல மருத்துவமனைகள் திரும்பத் திரும்பத் தாக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலத்தில் பல பத்தாயிரம் உயிர்கள் பலியாகின. இதில் போரின் இறுதி நாட்களில் அடையாளம் காணப்படாமல் பெருமளவானோர் இறந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் போராளிகள் தனியாக பிடித்துச் செல்லப்படனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட்டிருக்கக் கூடும். ஏனையோர் காணாமற் போயுள்ளனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. அநாவசியமாக பலர் உயிரிழக்க நேரிட்டது. பலர் சித்திரவதை செய்யப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கு வசதிகள் மறுக்கப்பட்டன. அவர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னேறி வந்த சிறிலங்கா படையினரைத் தடுக்க பொதுமக்களை புலிகள் மனித கவசங்களாகப் பயன்படுத்தினர். கட்டாய ஆட்சேர்ப்பை நடைமுறைபடுத்தினர். இளவயது சிறார்களையும் படையில் சேர்த்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;2009 பெப்ரவரியில் தமது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;அதிகளவு பொதுமக்கள் தங்கியிருந்த- அவர்களுக்கான விநியோகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்து பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டனர். போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசு மீது ஐந்து விதமான குற்றச்சாட்டுகளை இந்த நிபுணர்கள் குழு சுமத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;1. பரந்தளவிலான பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைப் படுகொலை செய்தமை. &lt;br /&gt;&lt;br /&gt;2. மனிதாபிமான இலக்குகள், மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;3. பொதுமக்களுக்கு மனிதமாபிமான உதவிகள் கிடைப்பதை தடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;4. போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் மனிதஉரிமைகளை மீறியது. &lt;br /&gt;&lt;br /&gt;5. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், போர் நடைபெற்ற பகுதிகளுக்கு வெளியே மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது. &lt;br /&gt;1. பொதுமக்களை மனிதகவசங்களாக பயன்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;2. தமது பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது. &lt;br /&gt;&lt;br /&gt;3. பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து படைக்கருவிகளை இயக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;4. சிறுவர்களைக் கட்டாயமாக படைகளில் சேர்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;5. பொதுமக்களிடம் கட்டாயமாக வேலைவாங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;6. போர் நடைபெறாத பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களைக் கொன்றது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதற்கு பொறுப்புக் கூறுவது உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் படியான கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலுவான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சிறிலங்கா இராணுவத் தளபதிகள், மூத்த அரச அதிகாரிகள், குறிப்பாக இராணுவ, குடியியல், மற்றும் புலிகளின் தலைவர்கள் மீது அனைத்துலக குற்றங்களில் ஈடுபட்டதற்காக முன்னிறுத்தப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசு நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அனைத்துலக தரத்துக்கு அமைவானதல்ல. அதில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அதிபரும் ஐ.நா பொதுச்செயலரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு ஏற்ப அது திருப்திகரமானதாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிநாட்களில் ஐ.நாவின் அரசியல் அங்கங்களோ அல்லது அமைப்புகளோ வன்னியில் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரிந்துரை: 1 &lt;/strong&gt;&lt;br /&gt;அ. ஆயுதப்போரின் போது இருதரப்பினாலும் மீறப்பட்ட அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆ. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் உடனடியாக சுதந்திரமான அனைத்துலக பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரிந்துரை: 2 &lt;/strong&gt;&lt;br /&gt;கீழ் குறிப்பிடும் விடயங்கள் குறித்து சிறிலங்கா அரசு குறுகிய காலநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;பரிந்துரை: 3 &lt;/strong&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையிலான நீண்டகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பரிந்துரை: 4 &lt;/strong&gt;&lt;br /&gt;சிறிலங்கா தொடர்பாக 2009 ல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அழைப்பது குறித்து ஐ.நா மீளாய்வு செய்ய வேண்டும்.“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பரிந்துரைகளில் ஐ.நாவும் சிறிலங்காவும் செய்ய வேண்டியவை தொடர்பாக விரிவான விளக்கக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்வண்ணன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-2939204279190674704?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/2939204279190674704/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/5-6.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2939204279190674704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2939204279190674704'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/5-6.html' title='ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் - சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6 குற்றச்சாட்டுகள்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ZnVw5Cz-oms/TanXR5gKMZI/AAAAAAAAAgs/_dEAU4w5yro/s72-c/ban.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-2429075013227641003</id><published>2011-04-15T06:30:00.003-04:00</published><updated>2011-04-15T06:39:21.327-04:00</updated><title type='text'>போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்: இலங்கை அமெரிக்கா இடையிலான உறவுகளில் அதிகரிக்கும் விரிசல்கள்..................?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-6au4RxD1HiY/Tagel_hfXgI/AAAAAAAAAgU/b_PELdCju5Y/s1600/US_SriLanka.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://1.bp.blogspot.com/-6au4RxD1HiY/Tagel_hfXgI/AAAAAAAAAgU/b_PELdCju5Y/s400/US_SriLanka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5595756175063735810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது. &lt;/strong&gt;போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் இலங்கைக்கு இருந்து வந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் இப்போதைக்குக் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் ஒருவித முறுகல் நிலை இப்போதைக்குத் தீர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், இந்த முறுகல்நிலை தீவிரமாகும் அறிகுறிகளே இப்போது அதிகமாகத் தென்படுகின்றன. இதன் அடிப்படைக் காரணம், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரமே என்பதில் சந்தேகம் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமாக மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அதுபற்றி விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் அமெரிக்கா, மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் இந்த விவகாரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுப்பின்றி வலியுறுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தவர். எனவே இலங்கையைப் பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக அறிந்து வைத்திருப்பவர். இலங்கை விவகாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவராகக் கருதப்படும் றொபேட் ஓ பிளேக் பொறுப்புக்கூறுதல் பற்றி அடிக்கடி வலியுறுத்தி வருவதால் அரசாங்கத்திடம் அவருக்கு ஏகப்பட்ட கடுப்பு இருப்பது உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை இராஜதந்திர வழிகளிலும், பகிரங்கமாகவும் இவர் மீது அரசாங்கம் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. ஆனாலும் றொபேட் ஓ பிளேக் இலங்கை விவகாரத்தில் கடும் போக்குடனேயே இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவிடம் பேசியபோதும், அவர் பொறுப்புக்கூறதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மனிதஉரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே இலங்கையுடனான அமெரிக்காவின் உறவுகள் அமையும் என்று அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள மனிதஉரிமை நிலைமைகள் கவலையளிப்பதாகவும், அதனால் இலங்கையுடன் இறுக்கமான உறவைப் பேண முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ள கருத்து அமெரிக்கா, சிறிலங்கா இடையிலான உறவில் உள்ள விரிசலை வெளிப்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணைகளை அரசாங்கம் நடத்தத் தவறினால் அனைத்துலக விசாரணைகளுக்கு இழுத்து வரும் நிலை ஏற்படும் என்று அவர் சில வாரங்களுக்கு முன்னர் விடுத்த எச்சரிக்கையை இலங்கை அரசினால் அவ்வளவு இலகுவாக மறந்து போக முடியாது. இதைப் பாரதூரமானதொன்றாக கருதினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தது இலங்கை அரசு. இந்தநிலையில் இலங்கைக்கு வரவிருந்த றொபேட் ஓ பிளேக்கை அரசாங்கம் தந்திரமான முறையில் தற்காலிகமாகத் தடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;றொபேட் ஓ பிளேக்கின் கொழும்பு வருகை மிகவும் முகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்பட்டது. மனிதஉரிமை நிலைமைகள் குறித்த அமெரிக்க அரசின் இறுக்கமான செய்தி ஒன்றை அவர் எடுத்து வரவிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல் கடந்தவாரம் ஊடகங்களுக்கு கசிய முன்னரே அரசாங்கத்துக்குத் தெரிந்திருந்தது. பிளேக் வரவிருக்கும் செய்தியையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அரசாங்கம் அவரை எப்படியாவது வரவிடாமல் செய்வதற்குப் புதியதொரு வழிமுறையைப் பின்பற்றியது. பொதுவாக வெளிவிவகார அமைச்சர்கள் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதுஇ அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம்.  அது கிடைக்காமல் போனால் பெரும்பாலும் பயணம் மேற்கொள்ளப்படுவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் இப்போது பிரித்தானியாவில் இருப்பதால்இ அதைக் காரணம் காட்டி அவர் வந்த பின்னர் வருமாறு பிளேக்கிடம் கூறியுள்ளது அரசாங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வேறு வழியின்றி கொழும்பு வருகையைப் பிற்போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிளேக். &lt;br /&gt;&lt;br /&gt;இது அவராக விரும்பி எடுத்த முடிவு இல்லை. வேறு வழியின்றி எடுக்க வைக்கப்பட்ட முடிவு. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் செக் குடியரசுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா சென்றிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்திக்க வாய்ப்புக் கேட்டபோதும், அது நிராகரிக்கப்பட்டது. அவரது ஒப்புதலைப் பெறாமலேயே பிரித்தானியா சென்ற அமைச்சர் பீரிஸ், பிரித்தானிய வெளிவிவகார துணை அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் போன்றோருடன் மட்டும் பேசியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அவரது பிரித்தானிய அதிகாரபூர்வ பயணம் முடிந்தாலும்இ அங்கேயே ஒரு வாரத்துக்குத் தங்கவுள்ளதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அது தனிப்பட்ட பயணமாக அறிவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பீரிஸ் நாடு திரும்பினால் கொழும்பு வரும் பிளேக்கை தடுக்க முடியாது. எனவே தான் அவர் பிரித்தானியாவில் தனது பயணத்தை நீட்டிக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ பிளேக்கின் வருகை பிற்போடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இலங்கைக்கு வராதது தற்காலிக நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஆனால் இந்தப் பயணத்தை அவர் கைவிட்டு விடவில்லை. எனவே அமைச்சர் பீரிஸ் கொழும்பில் இருக்கும் பிறிதொரு தினத்தில் அவர் கொழும்பு வருவார் என்கிறது அமெரிக்க அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிளேக்கின் கொழும்பு வருகை இலங்கை அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுப்பதற்கு என்றே தெரிகிறது.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கடந்தமாத இறுதியில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஒன்றேகால் மணிநேரமாக பிளேக்குடன் பேசியுள்ளனர். இது இலங்கை அரசுக்கு கடும் எரிச்சலை உருவாக்கியுள்ளது. உலகத் தமிழர் பேரவையைப் புலிகளின் ஒரு எச்சமாகவே பார்க்கிறது அரசாங்கம். ஒரு பக்கத்தில் சர்வதேச அளவில் புலிகளை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளால் இலங்கை அரசு மனம் ஒடிந்து போகிறது. இந்தச் சந்திப்பின் போது போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை ஒப்புக் கொள்ள வைப்பதற்கான தந்திரோபாயங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கம் கருதுவதாக தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது போனாலும், இந்தச் சந்திப்பை சாதாரணமானதொன்றாக அரசு எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் ஐ.நா நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையும் வெளியாகவுள்ள நிலையில் பிளேக் வருவதை அரசாங்கம் முற்றாகவே விரும்பவில்லை. அதன் காரணமாகவே அவரது பயணத்தைப் பிற்போடும் முடிவை எடுக்க வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற தந்திரோபாயங்களை அரசாங்கம் நீண்டகாலத்துக்கோ அல்லது இன்னொரு முறையோ பிரயோகிக்க முடியாது. அப்படிச் செய்தால் தங்களை இலங்கை அரசு ஏமாற்றுவதாக அமெரிக்கா உணர்ந்து கொள்ளும். இப்போது கூட அமெரிக்காவுக்கு அது தெரிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மீண்டும் ஒருமுறை இப்படிச் செய்தால் அது இருதரப்பு உறவுகளுக்கிடையில் மேலும் விரிசலை உருவாக்கும். அனைத்துலக நாடுகளுடனான உறவுகளை தந்திரமாகக் கையாள்வதில் இலங்கை அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை தடுமாறவே செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுடனான உறவுகளில் கூட சில வேளைகளில் சிறியளவிலான சிராய்ப்புகள் ஏற்படவே செய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது பலவீனமான இராஜதந்திரம் ஒன்றின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் விவகாரம், இப்போது இலங்கையின் கையை மீறிச் செல்வது போலவே உணரப்படுகிறது. இலங்கை அரசு பக்கச்சார்பற்றதொரு விசாரணையை மேற்கொண்டிருந்தால் அல்லது மேற்கொள்ள அனுமதித்திருந்தால் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்,போர்க்குற்ற விசாரணைகள் இலங்கை அரசின் கையை மீறி செல்லப் போவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கை அரசுக்கும் போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மேலும் விரிசலை உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் கபில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-2429075013227641003?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/2429075013227641003/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post_15.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2429075013227641003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2429075013227641003'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post_15.html' title='போர் முடிவுக்கு வந்து இரண்டாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில்: இலங்கை அமெரிக்கா இடையிலான உறவுகளில் அதிகரிக்கும் விரிசல்கள்..................?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6au4RxD1HiY/Tagel_hfXgI/AAAAAAAAAgU/b_PELdCju5Y/s72-c/US_SriLanka.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7409219424166366792</id><published>2011-04-09T15:26:00.002-04:00</published><updated>2011-04-09T15:30:34.793-04:00</updated><title type='text'>எவ்வளவு விலை கொடுத்தும்:புலிகள் கேட்டதை "பிரபாகரன் கோரியதை" எவருக்கும் கொடுக்க முடியாது: சொல்பவர் யார்........?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-ECQQsZnfPiY/TaCzy84DCNI/AAAAAAAAAgM/Pyw8Gaht7RA/s1600/ltte_norway__meet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-ECQQsZnfPiY/TaCzy84DCNI/AAAAAAAAAgM/Pyw8Gaht7RA/s400/ltte_norway__meet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5593668425110194386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது. அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசதரப்பின் இழுத்தடிப்பு வியூகங்களை உடைக்குமா தமிழ் தேசிய கூட்டமைப்பு?&lt;/strong&gt; &lt;br /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கடந்தவாரம் தனித்தனியாக இந்தச் சந்திப்புகள் அலரி மாளிகையில் நடைபெற்றன. நெருக்கடிகள் அதிகமாகின்ற போது. ஊடகங்களின் ஆதரவைத் தன் பக்கம் திருப்புவதற்கான ஒரு தந்திரோபாயமாக இந்தச் சந்திப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பயன்படுத்தி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உள்நாட்டு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பின்னர், கொழும்பைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களையும் அவர் சந்தித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சந்திப்பில் அவரது நோக்கம் உள்ளூர் விவகாரங்களை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு, அதிகாரப்பகிர்வு பற்றிய கலந்துரையாடல்கள் அதில் அதிகமாக இருந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு ஊடகங்களுடனான சந்திப்பில், அனைத்துலக விவகாரங்களை குறிப்பாக இலங்கை மீதான அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாமாட்டாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு சந்திப்புகளின் போதும் ஐ.நா நிபுணர்கள் குழு பற்றிய விவகாரம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணைகளை நடத்த முடியாது வேண்டுமானால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்கலாம் என்று மீண்டும்இ மீண்டும் அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;strong&gt;அதேவேளை, இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றித் தாம் கவலை கொள்ளவில்லை என்றும் அதை பகிரங்கப்படுத்தினாலும் சரி விட்டாலும் சரி அதுபற்றித் தாம் அலட்டிக் கொள்ளவில்லை என்றும் உள்நாட்டு ஊடகங்களிடம் அவர் கூறியிருந்தார். &lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;ஆனால் வெளிநாட்டு ஊடகங்களிடம் அப்படிக் கூறியதாக தகவல் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதியில்லை என்று கூறியிருந்தாலும், அதன் அறிக்கையைத் தாம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது போன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்துக் கொண்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இது இருவேறுபட்ட ஊடகப் பரப்புகளை வேறு வேறு கோணங்களில் அணுகும் போக்கில் ஜனாதிபதி மகிநத ராஜபக்ஸ இருப்பதை வெளிப்படுத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உள்நாட்டு ஊடகங்களுடனான சந்திப்பின் போது கொழும்பில் அதிகளவில் வாழ்ந்து வந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பின் சனத்தொகை மாற்றம் குறித்து எதற்காகத் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார் என்பது கேள்விக்குரியதொன்றாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து எவரும் பிரச்சினை எழுப்பவில்லை என்று கூறிக்கொள்ளும் ஜனாதிபதியே இதைப் பிரச்சினையாக்கி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தை மகிந்த ராஜபக்ஸவைத் தவிர வேறெவரும் தூக்கிப் பிடிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ஸ மட்டுமே இதை எதற்காகத் தூக்கிப் பிடித்து அடிக்கடி கூறி வருகிறார் என்பது தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, உள்ளூர் ஊடகங்களுடனான சந்திப்பின் போது மீண்டும் அவர் ஒரு விடயத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் கேட்டதை பிரபாகரன் கோரியதை எவருக்கும் கொடுக்க முடியாது என்பதே அது. &lt;br /&gt;&lt;br /&gt;இது அவர் அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒரு விடயம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரப்பகிர்வு யோசனைக்காகத் தாம் காத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்று வரும் பேச்சுக்களின் போது முன்வைக்கப்படும் தீர்வு யோசனை குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆராய்ந்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றே நிறைவேற்ற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாவது சுற்றுப்பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக கூறியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் வகையிலான யோசனையே இது என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக காணி, பொலிஸ்,வனங்களைப் பராமரிக்கும் அதிகாரங்களைக் கூட்டமைப்புப் கோரவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்று கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அதுபற்றிக் கூட்டமைப்புக்கும் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் வகையிலேயே கூட்டமைப்பு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;13வது திருத்தத்தை மக்கள் நிராகரித்து விட்டதாகக் கூறும் கூட்டமைப்பு, இப்போது தான் இந்தப் பிடியை இறுக்குவதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை அரசுடனான பேச்சுக்களின் போது 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட தீர்வு பற்றி அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவே ஆலோசனை அவரகளுக்கு கூறியுள்ளதாம். &lt;/strong&gt;இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கடந்தமுறை பேச்சுக்கள் முடிந்த பின்னர் கூட, 13வது திருத்தம் பற்றிப் பேசவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமைப்பு என்ன தான் யோசனையை முன்வைத்தாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் அதை நேரடியாக எதிர்க்காமல் மறைமுறைமாக தோற்கடிப்பதற்குப் பல்வேறு காய்களைத் தயார் நிலையில் வைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகவே அவர் எந்தவொரு அதிகாரப்பகிர்வு –அரசியல்தீர்வு யோசனையையும் அனைத்துக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று எப்போதும் கூறி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை தாமே தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாக கூறிவந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் இப்போது கூட்டமைப்பின் தீர்வுத் திட்டத்தை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்க விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் இப்போதாவது தனது கையில் எந்தத் தீர்வுத் திட்டமும் கிடையாது என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பிடம் இருந்து எதிர்பார்ப்பதாக அது கூறுவதும் கூட ஒரு இழுத்தடிப்பு நாடகமே என்பதில் சந்தேகமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழு கூட அரசியல்தீர்வை இழுத்தடிப்தற்கான ஒரு நாடகம் தான் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கம் அரசியல் தீர்வை இழுத்தடிப்பதற்கு புதிய பல வியூகங்களை வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளது என்றே உணர முடிகிறது. &lt;br /&gt;அரசதரப்பின் இந்த வியூகங்களை உடைத்துத் தான் அதிகாரப்பகிர்வு ஒன்றை பெற வேண்டிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் கபில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-7409219424166366792?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/7409219424166366792/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7409219424166366792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7409219424166366792'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/04/blog-post.html' title='எவ்வளவு விலை கொடுத்தும்:புலிகள் கேட்டதை &quot;பிரபாகரன் கோரியதை&quot; எவருக்கும் கொடுக்க முடியாது: சொல்பவர் யார்........?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ECQQsZnfPiY/TaCzy84DCNI/AAAAAAAAAgM/Pyw8Gaht7RA/s72-c/ltte_norway__meet.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-8407304527331419520</id><published>2011-03-26T09:39:00.001-04:00</published><updated>2011-03-26T09:43:43.063-04:00</updated><title type='text'>தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-TS2OM4_1UNI/TY3texPnczI/AAAAAAAAAgE/xUtzdLmnsvk/s1600/sonia-gandhi2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 370px;" src="http://2.bp.blogspot.com/-TS2OM4_1UNI/TY3texPnczI/AAAAAAAAAgE/xUtzdLmnsvk/s400/sonia-gandhi2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588383825507349298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது என்பதனால் தமிழர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியேனும் கிடைக்க வேண்டும் என்கிற காரணம்தான் சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.&lt;br /&gt;சிறிலங்காவில் சிங்கள அரசை தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டுப் பெரும் இன அழிப்பை நடாத்தியது சோனியா தலைமை தாங்கும் காங்கிரஸ் அரசுதான். இதனைப் பல தரப்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். விடுதலைப்புலிகள் மீது அதீத விரோதம் கொண்டவர்தான் சோனியா. தனது கணவரை கொன்ற புலிகளை எப்படியேனும் அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்தவர் இக்கட்டுரையாளருக்கு கூறிய ஒரு வார்த்தை இன்றும் மனதில் உள்ளது. அவரின் கூற்றின்படி ராஜீவைக் கொன்ற புலிகளை அழிக்க நாக பாம்பு எப்படி பழி வாங்குமோ அதைப் போன்றேதான் இந்தியா செய்யும் என்று கூறினார். வாஜ்பாய் தலைமயிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்திலேயேதான் இக்காங்கிரஸ் பிரமுகர் இப்படியாகக் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பிரமுகரின் கருத்தே பல காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களிடம் இருக்கின்றது. இவர்களுக்கே இப்படியான கருத்திருக்குமென்றால், கணவரை பலிகொடுத்த சோனியாவுக்கு எப்படியாக இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும். குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிற மனப்பாண்பு பலரிடத்தில் இல்லை. தலைவர்கள் என்றால் கடவுள்கள் என்று துதிபாடும் மக்களே இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1987-இல் ராஜீவ் அனுப்பிய இந்தியப் படைகள் ஏறத்தாள 10,000 ஈழத்தமிழரை கொன்றனர். பல்லாயிரம் பெண்களை மானபங்கப்படுத்தி கொடுமைப்படுத்தியது இந்தியப் படைகள். பல்லாயிரம் இளைஞர்களை கொடுமைப்படுத்தியது அமைதிகாக்கப் போவதாக சென்ற இந்தியப் படைகள். ஈழத்தமிழர்களின் உயிர்கள் மற்றும் அவர்களிற்கு நிகழ்ந்த அவலங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு துரும்பாகத் தெரிந்துள்ளது போலும். அதனால்தான் என்னவோ சோனியாவினால் சிங்கள கொலைவெறி ஆட்சியாளர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்து 40,000 ஈழத்தமிழரை அழித்தும் லட்சக்கணக்கானவர்களை சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணடையும் நிலைக்கு உருவாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சராசரி இந்திய அரசியல்வாதியாகிவிட்ட சோனியா&lt;/strong&gt;&lt;br /&gt;இத்தாலியில் பிறந்து பெற்றோர்களினால் அன்ரோனியோ மைனோ என்கிற பெயர் சூட்டப்பட்ட சாதாரண பெண்மணி, ராஜீவை திருமணம் செய்து கொண்டதும் மாமியார் இந்திரா காந்தி சூட்டிய பெயரே சோனியா காந்தி. வெள்ளையினத்தினரிடத்தில் பரவலாக இருக்கும் பரந்த மனப்பாங்கு கடுகளவேனும் சோனியாவிடம் இல்லை. இந்திய மக்களிடம் புரையோடிப்போயிருக்கும் பழிக்குப் பழி வாங்கும் குணாதிசயங்கள் சோனியாவையும் அதிகமாக உட்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காரணங்களுக்கு எதனையும் விட்டுக்கொடுத்து எப்படியேனும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடினால் போதும் என்கிற இந்திய அரசியல்வாதிகளிடத்தில் இருக்கும் அதே குணம் சோனியாவிடத்திலும் வந்துவிட்டது போலும். மார்ச் 17-இல் இடம்பெற்ற 14-ஆவது காமன்வெல்த்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற சோனியா லண்டன் சென்றார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகளை உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா? எனக் கேட்டபோது அது குறித்து கருத்து வெளியிட முடியாது என மறுத்தார். எந்த ஒரு இடத்திலும் தான் தமிழர்கள் பக்கம்தான் இருப்பேன் என்று கூறவில்லை என்கின்றனர் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சில தமிழ் அன்பர்கள். இருப்பினும், உலகத் தமிழர் பேரவையோ சோனியா அப்படிக் கூறியதாக அடித்துக் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் சிங்களப் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியாவிடம் வினாவப்பட்டபோது சிறிலங்காவில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், இப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்தார். அவ்வளவுதான். மற்றும்படி அவர் வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர் சிலர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை தாம் சந்தித்தது மிகவும் எதிர்பாராத ஒரு விடயம், ஆனால் தாம் தமிழ் மக்களின் நிலையை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “இந்த சந்திப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்களாகச் சென்ற நாம், கேள்வி நேரத்தில் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நிலை, அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அவருக்கு விளக்கியிருந்தோம். போர்க்குற்ற காணொளியை தான் நேரிடையாக பார்த்ததாக தெரிவித்துள்ள சோனியா காந்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்க இந்தியா உதவும் எனவும், அவர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா தமிழ் மக்களுடன்தான் நிற்கும் என அவர் பல தடவைகள் தெரிவித்தார்."&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா காந்தி சராசரி இந்திய அரசியல்வாதியைப்போலவேதான் செயற்படுகிறார் என்பது இதனூடாகத் தெரிகிறது. ஒன்றைக் கூறுவது பின்னர் பிறர் மூலமாக அதனை மறுதளிப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் இடம்பெறுவதே. யார் சொல்வது உண்மை என்பது காலப்போக்கில் நிச்சயம் தெரியவரும். அப்போது பொய் சொல்லுபவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும். ஆனால், ஓன்று மட்டும் நிச்சயம் என்னவெனில் தமிழகத்தில் தேர்தல் இடம்பெற இன்னும் மூன்று கிழமைகளுக்கும் குறைவாக இருப்பதனால் சோனியா தமிழர்களின் வாக்கைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் அணியினர் வென்றுவிட வேண்டுமென்கிற போக்கில் எதையேனும் சொல்லியிருப்பார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;காங்கிரஸ் கட்சியின் தொடர்பை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நீலிக்கண்ணீர் வடிக்கும் சோனியா எதனைச் சொன்னாலும் பொய் உண்மையாகாது. சிறிலங்கா அரசு வெறும் கருவியே. அதனை ஏவிவிட்டு ஈழத்தமிழரின் அழிவுக்கு காரணமாக இருந்தது இந்தியாவே என்று அத்தாட்சிகளுடன் உறுதிப்படுத்துகிறது விக்கி லீக்ஸ். ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஊடாக பலர் முயற்சித்தபோது அதற்கு தடை போட்ட இந்திய காங்கிரசினதும் சோனியாவினதும் கூட்டாளி நாராயணன்தான் என்பது தெரியவந்துள்ளது. நாராயணனை ஆட்டிவித்ததே சோனியாதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவருக்கு காங்கிரஸ் கட்சியினால் பல தரப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளதுடன், பல முக்கிய பொறுப்புக்களை இவருக்கு காங்கிரஸ் தலைமயிலான அரசே கொடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர விடுதலைப்புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கி லீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையிலிருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸ{லேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தில் இந்திய சமாதானப் படை நிலைகொண்டிருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன் ஆவார்.&lt;br /&gt;ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் கையாண்டவர்கள் தமிழகத்திற்கு அருகில் இருக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்த நாராயணன் மற்றும் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்தக் காலப்பகுதியில் இருவருக்கும் மேலதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்திய புலனாய்வுத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசை இந்தியாதான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது என 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு, அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடியும் தருவாயில், ஈழத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, காங்கிரஸ் தலைமயிலான இந்திய நடுவன் அரசின் பொய் முகத்திரையை விக்கி லீக்ஸ் கிழித்தெறிந்துள்ளது. இதனை மறைத்து தமிழ்நாட்டு மக்களை மென்மேலும் முட்டாள்களாக்கி தி.மு.க. தலைமயிலான கூட்டணியை எப்படியேனும் பதவிக்கு கொண்டுவருவதனூடாக, அடுத்துவர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமயிலான ஆட்சியே நியூ டெல்லியிலும் இடம்பெற வேண்டும் என்கிற நட்பாசையுடன் களம் இறங்கியிருக்கிறார் சோனியா. இவைகளே சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசத்திற்கு காரணம். தமிழர்கள் விழிப்பாக இருந்தால் யாராலும் அவர்களை ஏமாற்ற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்--&lt;br /&gt;&lt;br /&gt;இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய &lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-8407304527331419520?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/8407304527331419520/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_26.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/8407304527331419520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/8407304527331419520'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_26.html' title='தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-TS2OM4_1UNI/TY3texPnczI/AAAAAAAAAgE/xUtzdLmnsvk/s72-c/sonia-gandhi2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7677048446850197016</id><published>2011-03-20T08:10:00.001-04:00</published><updated>2011-03-20T08:14:59.411-04:00</updated><title type='text'>"பொறியில் சிங்களம்": "புலிகள் பற்றிய மதிப்பீடும்" : "அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்"</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-3U9EypFkvJc/TYXvsBi-scI/AAAAAAAAAfo/So7X27J0_C4/s1600/raja-paksa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://2.bp.blogspot.com/-3U9EypFkvJc/TYXvsBi-scI/AAAAAAAAAfo/So7X27J0_C4/s400/raja-paksa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586134452431401410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போர்க் கருத்தரங்கு ஏற்பாட்டால் பொறியில் சிக்குமா அரசாங்கம்? &lt;br /&gt;போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி &lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தைத் தோற்கடித்த ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு சர்ச்சைக்குள்ளாகத் தொடங்கியுள்ளது. இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தக் கருத்தரங்கைப் புறக்கணிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று கடந்த பல மாதங்களாகவே இலங்கை இராணுவம் கூறி வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மே 31 ம் திகதி தொடக்கம் ஹோட்டல் கலதாரியில் இந்தக் கருத்தரங்கு நடைபெறும். ஜுலை 2ஆம் திகதி வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு 54 நாடுகளுக்குப் பாதுகாப்புச் செயலர் அழைப்புகளை அனுப்பியுள்ளார். மே 31ம் திகதி காலை 9.10 மணியளவில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்வில், அடுத்ததாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றுவார். &lt;br /&gt;&lt;br /&gt;அதையடுத்து அன்றைய தினம் மூன்று கருத்தமர்வுகள் நடைபெறவுள்ளன. &lt;br /&gt;தீவிரவாத முறியடிப்பின் சவால்களும் எதிர்பார்ப்புகளும்“ என்ற தலைப்பிலானது முதலாவது கருத்தமர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத் தலைமையேற்கப் போகின்றவர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இதில் பங்கேற்கவுள்ள இரண்டு பேச்சாளர்களில் ஒருவர் இந்தியப் பேச்சாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சாளர்கள் இருவரும் யார் என்பது உறுதியாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கருத்தமர்வு “புலிகள் பற்றிய மதிப்பீடும், அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்“ என்ற தலைப்பில் அமையவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் லெப்.கோ்ணல் சாலி ஆகியோர் இந்த அமர்வின் பேச்சாளர்களாக இருப்பர். &lt;br /&gt;ஆனால் தலைமையேற்கவுள்ளவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தீவிரவாத முறியடிப்பு ஒரு பார்வை“ என்ற தலைப்பில் மூன்றாவது கருத்தமர்வு நடைபெறும். &lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் றொகான் குணரட்ணவும் வேறொரு வெளிநாட்டு பேச்சாளரும் இதில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் தலைமையேற்பவர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை. &lt;br /&gt;முதலாம் நாள் இரவு விருந்தில் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் உரை இடம்பெறும். &lt;br /&gt;இரண்டாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “மனிதாபிமான நடவடிக்கைகள்“ என்ற தலைப்பில் இடம்பெறும். மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த இதற்குத் தலைமை தாங்குவார். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும், வடக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோரும் பேச்சாளர்களாக பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கருத்தமர்வு “தீவிரவாத முறியடிப்பில் படைப்பெருக்கம்“ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இந்தக் கருத்தமர்வுக்குப் பேராசிரியர் ஜோன் ஹில் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தமர்வில் புலிகளின் முன்னரங்குகளுக்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விசேட படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் தர்மரட்ணவும், கவசப்படைப்பிரிவின் பங்களிப்புத் தொடர்பாக பிரிகேடியர் ரணசிங்கவும், ஆட்டிலறிப் படைப்பிரிவின் பங்கு தொடர்பாக பிரிகேடியர் நாபாகொடவும், பொறியியல் படைப்பிவின் சார்பில் பிரிகேடியர் விக்கிரமசூரியவும், சமிக்ஞைப் படைப்பிரிவின் சார்பில் பிரிகேடியர் றொவெல்லும் உரையாற்றவுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடற்படை மற்றும் விமானப்படை சார்பிலும் இரு பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்று இன்னம் தீர்மானிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாளின் மூன்றாவது கருத்தமர்வு, முறியடிப்புத் தந்திரோபாயம், பயிற்சி மதிப்பீடும் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரிகேடியர் உடவத்த தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தமர்வில், விநியோக உதவிகள் தொடர்பாக பிரிகேடியர் காரியவசம், மற்றும் பிரிகேடியர் ஜெயசூரிய ஆகியோரும், மருத்துவ உதவிகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் முனசிங்கவும் உரையாற்றவுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சி மதிப்பீடுகள் தொடர்பாக பிரிகேடியர் ரால்ப் நுகேரா உரையாற்றுவார். மூன்றாவது நாளின் முதலாவது கருத்தமர்வு “இடம்பெயர்ந்தோர், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, கண்ணிவெடிகள் அகற்றுதல்“ ஆகியன தொடர்பாக இடம்பெறும். இதற்குத் தலைமை தாங்குபவர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, கலாநிதி மல்காந்தி ஹெட்டியாராச்சி, பிரிகேடியர் விஜேரத்ன ஆகியோர் இந்தக் கருத்தமர்வில் பேச்சாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கருத்தமர்வில் தேச நிர்மாணம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும், ஆசியாவின் அதிசயம் என்ற தலைப்பில் லலித் வீரசிங்கவும் உரையாற்றவுள்ளனர் . &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தரங்கில் வெளிநாட்டு பேச்சாளர்களை பங்கேற்க வைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைத் தளபதியை அழைத்து பேச வைக்கப் போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய முன்னர் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்தமர்வில் பங்கேற்குமாறு ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிறேஸில், புரூணை, கம்போடியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்தான், லாவோஸ், மலேசியா, மாலைதீவு, தாய்வான், லக்சம்பேர்க், நியுசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பெரு, போர்த்துக்கல், ருமேனியா, ரஷ்யா, சிங்கப்பூர், செக்கோஸ்லேவேக்கியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், சூடான், சுவீடன், சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உக்ரேன், அமெரிக்கா, வியட்நாம், நேபாளம், ஆகிய நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அழைப்பை எத்தனை நாடுகள் ஏற்கவுள்ளன என்பதே. உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகள் உள்ளன. அவற்றில் தெவு செய்யப்பட்ட 54 நாடுகளுக்கே அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவை அத்தனையும் இலங்கையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவை. ஒன்றில் போருக்காக நிதியுதவி, ஆயுத உதவி செய்தவை. அல்லது அமைதிக்காக, அபிவிருத்திக்காக உதவி செய்தவை. இவற்றில் எத்தனை நாடுகள் இலங்கை அரசின் அழைப்பை ஏற்கவுள்ளன என்பது குறித்து சந்தேகங்கள் தோன்றி விட்டன. இதற்கு ஒரு காரணம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்ட இந்தப் போர் நடவடிக்கையின் பெருமைகளைக் கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதேவேளை அமெரிக்காவும், ஜப்பானும் இந்தக் கருத்தரங்கை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அதிகாரபூர்வ அறிவிப்புக்களாக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானிய அரசியலமைப்பு இதுபோன்ற கருத்தரங்குகளுக்குப் படை அதிகாரிகள் பங்கேற்பதற்குத் தடையாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை அமெக்காவோ போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை மறுத்ததைக் கண்டிக்கும் வகையில் இதைப் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் எதையும் இலங்கை இராணுவம் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்தக் கருத்தரங்குகள் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதற்கு எதிராகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்கா இத்தகையதொரு முடிவை எடுத்து நின்றால் அதற்குப் பின்னால் பல நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அது இந்தப் போர்க் கருத்தரங்கின் அடிப்படை நோக்கத்தைப் பாதிக்கும். அதுமட்டுமன்றி இலங்கைக்கு எதிரான ஒரு அணியை வெளிக்காட்டி அணி திரள வைத்து விட்டதாகவும் அமைந்து விடக்கூடும். குறிப்பாக இலங்கை இராணுவம் இந்தக் கருத்தரங்கிற்கு ஒழுங்குகளைச் செய்துள்ள போதும் வெளிநாட்டு பேச்சாளர்களை அழைப்பதில், அவர்களின் வரவை உறுதி செய்வதில் இன்னமும் வெற்றி பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதை இந்தக் கருத்தரங்கின் நிகழ்ச்சி நிரல் உறுதி செய்கிறது. போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது என்ற பெயரில் அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை அழைப்புகளை முறியடிக்க மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது. &lt;br /&gt;இந்தக் கருத்தரங்கை ஐந்து, பத்து நாடுகள் புறக்கணித்தால் கூட அது பெரியதொரு விவகாரமாக மாறும். இலங்கைக்கு எதிரான நாடுகளின் அணி ஒன்று உருவாகியிருப்பதான தோற்றப்பாட்டையே அது உருவாக்கும். ஜெனிவாவில் தனக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதைச் சாதுரியமாகத் தடுத்த இலங்கை அரசாங்கம், இந்த விடயத்தில் தானாகவே சென்று பொறியில் சிக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரையாளர் சுபத்ரா&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-7677048446850197016?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/7677048446850197016/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_20.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7677048446850197016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7677048446850197016'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_20.html' title='&quot;பொறியில் சிங்களம்&quot;: &quot;புலிகள் பற்றிய மதிப்பீடும்&quot; : &quot;அவர்களின் சர்வதேச வலைப்பின்னலும்&quot;'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3U9EypFkvJc/TYXvsBi-scI/AAAAAAAAAfo/So7X27J0_C4/s72-c/raja-paksa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-6690166060041376106</id><published>2011-03-18T15:22:00.001-04:00</published><updated>2011-03-18T15:24:16.209-04:00</updated><title type='text'>நாடுகளைக் கடந்து செல்லும் “நாடுகடந்த தமிழீழ அரசிற்கு” எமது வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-hvQvmwfV0Fg/TYOxSRGzaGI/AAAAAAAAAfg/yA_0CGXUgNc/s1600/UthYn%2BCa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 201px;" src="http://2.bp.blogspot.com/-hvQvmwfV0Fg/TYOxSRGzaGI/AAAAAAAAAfg/yA_0CGXUgNc/s400/UthYn%2BCa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585502890257246306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது தாய் மண்ணில் ஒரு தமிழீழ அரசை நிறுவுவதன் மூலம்தான் ஈழத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிம்மதியோடும் பூரணமான சுதந்திரத்தோடும் வாழ முடியும் என்பதை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நமது ஈழ விடுதலைப் போராட்டம், உலக நாடுகள் செய்த சதியால் நசுக்கப்பட்டு, நமது சுதந்திரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாத, எழுத முடியாத பாவிகளாக, அடக்கப்பட்டவர்களாக நமது மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புலம் பெயரந்து வாழுகின்ற நமது உறவுகளின் ஆழ்ந்த தேசியப்பற்று காரணமாகவும் தீவிரமான ஈடுபாடு காரணமாகவும் கற்பனையில்லாத ஒரு அமைப்பாக உருவாகியுள்ளதே அந்த நாடு கடந்த தமிழீழ அரசு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள திரு விசுவநாதன் உருத்திரகுமார் தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து இந்த அமைப்பை மேலும் வளர்த்தெடுக்க அயராது உழைத்து வருகி;ன்றார் என்பதை உலகத் தமிழர்கள் நன்கு கவனித்து வருகி;ன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசானது தற்போது மேற்குலக நாடுகளுக்குள் முடங்கிங்கிடக்காமல் நாடுகளைக் கடந்த செல்லும் புதிய வேகத்தைப் பற்றி குறிப்பிடுவதும் அதற்கான நமது வாழ்த்துக்களை தெரிவிப்பதும்தான் இவ்வார கதிரோட்டத்தின் நோக்கம் என்று நாம் கூறுகி;ன்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கூட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பல அரசியல் நெருக்கடிகள் மற்றும் காவல்துறையின் எச்சரிக்கை போன்றவற்றையும் சமாளித்து பல ஆர்வலர்கள் கலந்து கொண்டு அந்த நிகழ்வை ஒரு வெற்றிவிழாவாக ஆக்கியுள்ளார்கள். இதுவும் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், மலரப்போகும் தமிழீழத்தின் முதலாவது தூதரகம் தென் சூடானில் எதிர்வரும் யூலை மாதம் அமையவுள்ளதாக நாடு கடந்த அரசின் பிரதமர் திரு உருத்திரகுமார் தொலைபேசிப் பரிவர்த்தனையூடாக கோலாலம்பூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது இச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோலாலம்பூரில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கனடாவிருந்து சபாநாயகர் பொன் பாலராஜன், உதவிப் பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகர் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை ஒப்புக்கொண்ட திரு உருத்திரகுமார் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விடயமானது உலக மக்களைக் கவருகின்ற ஒரு அம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் தமது சொந்தச் செலவில் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் அரசின் உறுதியான எதிர்காலத்திற்கு தேவையான அத்திவாரத்தை அமைக்கும் பணியையும் உதயன் பாராட்டுகின்றது.. வாழத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடுகளைக் கடந்து செல்லும் நமது தமிழீழ அரசானது மிகவும் அவதானமாக செய்ற்பட வேண்டும் என்ற அக்கறையாக வேண்டுகோளையும் நாம் விடுக்கின்றோம். பிரதமர் தீரு உருத்திரகுமார் கனடாவிலிருந்து தெரிவான அதன் சபாநாயகர் திரு பொன். பால்ராஜன் போன்றவர்களும் வௌ;வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கத்தவர்களும் பலமான குழுவாக செயற்பட்டு “உள்ளேயும்” “வெளியேயும்” இருந்து வரும் ஆரோக்கியமற்ற எதிர்ப்புக்களைக் களைந்து வெற்றி நடை போடவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடா உதயன் கதிரோட்டம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-6690166060041376106?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/6690166060041376106/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_18.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6690166060041376106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6690166060041376106'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_18.html' title='நாடுகளைக் கடந்து செல்லும் “நாடுகடந்த தமிழீழ அரசிற்கு” எமது வாழ்த்துக்கள்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-hvQvmwfV0Fg/TYOxSRGzaGI/AAAAAAAAAfg/yA_0CGXUgNc/s72-c/UthYn%2BCa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7602668242528955096</id><published>2011-03-12T12:29:00.002-05:00</published><updated>2011-03-12T12:35:51.290-05:00</updated><title type='text'>தவிப்பில் தமிழினம்:  "குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும்"</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-5DFh0URRvQ0/TXuu5IP9j0I/AAAAAAAAAfY/B-DG27aimPI/s1600/vannithai_2009.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 224px;" src="http://3.bp.blogspot.com/-5DFh0URRvQ0/TXuu5IP9j0I/AAAAAAAAAfY/B-DG27aimPI/s400/vannithai_2009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583248459546070850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் "குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும்".......................?&lt;br /&gt;த.தே.கூட்டமைப்பு தப்பிப் பிழைக்குமா&lt;/strong&gt;"......................இப்போது தமிழ்த் &lt;br /&gt;&lt;br /&gt;தேசியக் கூட்டமைப்பு வெளியே பலமானதொரு கட்சியாக இருந்தாலும் விரைவில் உடைந்து போகக் கூடியளவுக்கு உழுத்துப் போயுள்ளது என்ற உண்மை இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இத்தகைய மோதல்களையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாகவோ அல்லது அதுப ற்றிக் கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை. முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது. தமிழ் மக்களின் சார்பில் வலுவானதொரு அரசியல் சக்தியாக அவர்களின் குரலை ஒலிக்கச் செய்யும் ஒரு ஊடகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் அமைந்துள்ளன. இது தமிழ்மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது..................."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வடக்கில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள முக்கிய தலைவர்கள் ஒன்றாக இருக்கும்போது சிரித்தபடி இருந்தாலும் யாருடைய காலை எப்போது வாரிவிடலாம் என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். இதை அண்மைய சில சம்பவங்களின் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடங்கப்பட்ட காலம் தொடக்கம் அதற்குள் புகைச்சல்கள் இருந்தே வந்தன. ஆனால் அப்போதெல்லாம் அத்தகைய புகைச்சல்கள் வெளியே தெரிவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புலிகளே இயக்கியதால் முக்கிய தலைவர்கள் கூட, இப்படியான பிரச்சினைகளைச் சமாளித்து நடந்து கொண்டனர். அல்லது அத்தகைய சில பிரச்சனைகளைப் புலிகள் தலையிட்டுத் தீர்த்து வைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது புலிகள் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மோதல்கள் வலுக்கத் தொடங்கி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;யார் பெரியவர் என்ற பிரச்சினை உருவெடுத்து விட்டது. &lt;br /&gt;அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுகவீனம் காரணமாக – சத்திரசிகிச்சை செய்து கொண்டு இந்தியாவில் தங்கி விட்ட பின்னர், நிலைமைகள் இன்னும் மோசமடைந்து விட்டன என்பதே உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு முனைப்பாக பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் வகையில் ஆனந்தசங்கரியையும், சித்தார்த்தனையும் இணைத்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதைவிட ஈபிஆர்எல்எவ்வை சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் மட்டுமே கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் நிலை உருவானது. வேறு கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப்போது உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாகவே போட்டியிட்டாலும் கட்சி ரீதியாகப் பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும், முரண்பாடுகள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டதே இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்மையில் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உரை தமிழரசுக் கட்சியைச் சாடும் வகையில் அமைந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தைப் பயன்பத்திக் கொண்டு தமிழரசுக் கட்சி தாக்குதலில் இறங்கி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐங்கரநேசன் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிவாஜிலிங்கத்தின் கட்சியை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு திடீர் மாற்றமாக சிவாஜிலிங்கம் வல்வை நகராட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அது மாவை சேனாதிராசாவும், வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளரான குலநாயகமும் மேற்கொண்ட முடிவு. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணக்கப்பாடு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும் பிடிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தமிழரசுக் கட்சியின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பதிலடி கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி தருணம் பார்த்துக் காத்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் ஐங்கரநேசன் வாயைக் கிளற அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;கூட்மைப்பைத் தனியான அரசியல் கட்சியாக இயங்க அனுமதிக்க மாட்டோம் என்றும்,தனியான அலுவலகம் திறக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தீர்மானம் பல மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஒற்றுமை கருதி அதை வெளியிடவில்லை என்றும் கூறினர். &lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமன்றி கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதும் ஈபிஆர்எல்எவ் அதற்கு இணக்க கடிதம் சமர்ப்பிக்கவில்லை என்றும் பதிலடி கொடுத்தார் சி.வி.கே.சிவஞானம். &lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து இந்தக் குற்றசாட்டுகளை நிராகரித்து சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியே பலமானதொரு கட்சியாக இருந்தாலும் விரைவில் உடைந்து போகக் கூடியளவுக்கு உழுத்துப் போயுள்ளது என்ற உண்மை இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தரக்கூடிய செய்தியாகவே இருந்தது. ஆனாலும் இத்தகைய மோதல்களையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் கவலைப்பட்டதாகவோ அல்லது அதுப ற்றிக் கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை. முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது. &lt;/strong&gt;தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் உள்ளதென்றால் அதை முக்கியத்துவப்படுத்துவது ஆச்சரியம் இல்லை என்பது அவர்களின் வாதமாக உள்ளது. ஆனால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதலே தலைதூக்குவதாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இந்த மோதல்கள் தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளியே உள்ள சிலரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதற்குள் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்கு இடையிலும் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிக்கான இழுபறிகள் தொடங்கி விட்டன.&lt;/strong&gt; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நிற்கும் கனவுடன் பலரும் இருப்பதால் தான் இந்த மோதல்கள் மேலும் வலுப்படக் கூடும். தமிழ் மக்களின் சார்பில் வலுவானதொரு அரசியல் சக்தியாக அவர்களின் குரலை ஒலிக்கச் செய்யும் ஒரு ஊடகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடக்கும் குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இது தமிழ்மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. &lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கம் தமிழ் மக்களின் சார்பில் செயற்படும் அவர்களின் சார்பில் பேசக் கூடியதொரு அமைப்பாக நிலைக்க வேண்டும். அந்தத் தகைமையை அது உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் நிரூபிக்க வேண்டியுள்ளது. இப்படியான கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்கள், கீழ்நிலைத் தலைவர்களை முன்வைத்து மோதிக் கொள்வது அநாகரிகமானது. இந்த மோதல்களுக்கு முடிவு கட்டி உட்பூசல்களை நிறுத்திக் கொள்ள முன்வராது போனால் தமிழ்மக்கள் மாற்று வழிகளில் புதிய அரசியல் தலைமைகளை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதைப் புரிந்து கொண்டு பொறுப்பை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் நடந்து கொள்வதே புத்திசாலித்தனமானது. &lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே கூட்டமேடைகளிலும், ஒளிப்படங்களிலும் சிரித்துக் கொண்டு நிற்பதை விட்டு, ஒன்றுபட்டு நிற்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கு அவசியத் தேவை. அதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் தமிழ்மக்களிடம் முற்றாக உடைந்து போகவில்லை. அது முற்றாக உடைந்து போகும் நிலையை உருவாக்குவதோ அல்லது தவிர்ப்பதோ தமிழ் மக்களின் கையில் இல்லை. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வெளிப்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும்இ தலைமைகளுக்குமே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் சத்திரியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-7602668242528955096?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/7602668242528955096/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_12.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7602668242528955096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7602668242528955096'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post_12.html' title='தவிப்பில் தமிழினம்:  &quot;குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும்&quot;'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-5DFh0URRvQ0/TXuu5IP9j0I/AAAAAAAAAfY/B-DG27aimPI/s72-c/vannithai_2009.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-3497748485786038711</id><published>2011-03-06T05:58:00.001-05:00</published><updated>2011-03-06T06:05:11.441-05:00</updated><title type='text'>தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர் பாகம் 3: மரணித்தவர்களையும் பழிவாங்கும் சிங்கள அரசு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-nnuJ5Wm20lQ/TXNqNncX_xI/AAAAAAAAAek/5HiQ7JFg_UQ/s1600/4237084779_4089513ce5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-nnuJ5Wm20lQ/TXNqNncX_xI/AAAAAAAAAek/5HiQ7JFg_UQ/s400/4237084779_4089513ce5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580921145401016082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உணர்ச்சிகளுக்கும், கோபங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மக்களாக தமிழகத்தின் மக்கள் இருப்பதனாலேயோ என்னவோ அரசியல்வாதிகளும் இவற்றை காரணமாக வைத்தே அரசியல் நடாத்துகிறார்கள். இராஜீவ் மரணச்செய்தி கேட்டவுடன் துடிதுடித்துப்போன தமிழக மக்கள், ஜெயலலிதாவின் தலைமயிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிகப்படியாக வாக்களித்ததன் காரணமாக அக்கட்சி தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.வின் ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்விதமான விமோசனமும் கிடைக்கவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அ.தி.மு.க.வினர் கோடீஸ்வரரானார்கள். பெரும்பாலான தமிழக மக்கள் இருண்ட வாழ்க்கையையே அனுபவித்தார்கள். ஜெயலலிதாவும் கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்தார். தனது பூர்வீக மாநிலத்தில் திராட்சைத் தோட்டம், ஊட்டியில் வசந்த மாளிகை, பெரும் செலவில் போயஸ் கார்டன் வீடு புனரமைக்கப்பட்டது. இதைவிட பல கோடி சொத்துக்கள் சேர்க்கப்பட்டது. மக்களும் இவற்றை பொருட்படுத்தாமல் தமக்கு நாளுக்கு ஒரு சான் சோறு இருந்தால் போதும் என்கிற நிலையிலையே காலத்தை கழித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். ஜெயலலிதாவின் ஊழலைச் சாட்டாக வைத்து பிரச்சாரம் செய்து முதல்வரானார் கருணாநிதி. ஜெயலலிதாவின் ஊழலிலும் விட அதிகமான சொத்துக்களை சேர்த்துவிட்டார் கலைஞர். சிங்கள அரசின் பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் எழுப்ப வக்கில்லாமல் இருக்கும் தமிழக மூத்த தலைவர்களில் முக்கியமானவர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞர். &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கண்துடைப்பிற்கு உண்ணாவிரதம் இருப்பதும், பின்னர் அறிக்கை விடுவதன் மூலமாக நாட்களை கடத்தினார் கலைஞர். இவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான ஒரு அரசியல் தீர்வை இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவந்திருக்க முடியும். ஈழத்தமிழர்களின் பிணத்தை வைத்து தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டுமென்கிற முனைப்புடனே இருந்தார் கலைஞர். சிங்கள அரக்கர்கள் செய்த அட்டூழியங்களை மூடிமறைக்கவே கலைஞர் பல தந்திரங்களைச் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்களவரை தட்டிக்கேட்க நாதியற்ற தமிழகம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் பண்பாட்டுக்கெதிராக சிங்கள அரச படையினர் செய்த அட்டூழியங்களை அறிந்தும், நாதியற்று வாய்மூடி மௌனியாக இருக்கிறது தாய்த் தமிழகம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மரண நிகழ்வுகள் மற்றும் அவரின் இறுதிக்கிரிகைகளின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தமிழர்களின் கலாச்சார மரபுகளுக்கு விழுந்த பேரடி. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வதி அம்மாளின் சாம்பலை காட்டு மிராண்டித்தனமாக கிளறி அவற்றை அள்ளிக் கொண்டு கடலில் எறிந்துள்ளனர். அத்துடன் நின்றுவிடாமல் அந்தப் பகுதியில் நின்ற மூன்று நாய்களை சுட்டுக்கொன்று அதனை பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்தன. இதனை நடத்தியது சிங்கள அரச படையினர் என்பது பின்னர் ஊர்யிதப்படுத்தப்பட்டது. இப்படியான தரக்குறைவான வேலையை சிங்கள அரச படையினரைத் தவிர இந்த நாகரிக உலகில் வேறு எங்கும் காண முடியுமா? இப்படியான நிகழ்வானது இந்து-தமிழ் மக்களின் கலாச்சாரத்தின் மீது ஏவப்பட்ட போரென்றே கூறவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கென்று ஒரு தனியரசு இருந்திருந்தால், பார்வதி அம்மாளுக்கு நிகழ்ந்த நிகழ்வு இடம்பெற்று இருக்குமா? ஐக்கிய நாடுகள் சபையில் கூட இது சம்பந்தமாக குரல் கொடுக்கப்பட்டிருக்குமே. இந்தியாவின் இறையாண்மையை மதித்து, இழிவு வாழ்க்கை நடாத்தும் தமிழக அரசுக்குக்கூட இப்படியான சம்பவம் பெரிதாக தென்பட்டிருக்காது. இவ்வரசின் கொள்கை என்பது வெறும் சுய பதவியும், மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வதி அம்மாளின் மரணச் செய்தி தெரிந்ததும் சிறிலங்கா காவல்த்துறையினரும், இராணுவத்தினரும் உடல் வைக்கப்பட்டிருந்தவிடத்தில் ஏராளமாக குவிந்தனர். அவர்களின் வருகை, அஞ்சலி செலுத்த வந்த மக்களை அச்சுறுத்தியது. தீருவில் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பார்வதி அம்மாளின் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் சிங்களப் படையின் அட்டகாசம் தொடர்ந்தது. மருத்துவமனையின் முன்பு சீருடையில் இருந்தவர்கள், தீருவில் மைதானத்தில் சாதாரண உடையில் சுற்றித் திரிந்தார்கள். அடக்க முடியாத மனவெழுச்சியில் சிக்கிய மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதபடி அதிக கெடுபிடிகள். &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனைப் பெற்றெடுத்த காரணத்தால், சொந்த மக்களின் அஞ்சலியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதபடி இனவெறிக் கொடுமைக்கு ஆளானது பார்வதி அம்மாளின் சடலமும்! இவர் சிறிலங்காவின் அரசியலில் ஒரு போதும் ஈடுபட்டதில்லை. மகனை ஈன்றெடுத்து ஈழ விடுதலைக்காகவே தத்துக்கொடுத்த அந்தத் தாய்க்கு சிங்கள தேசம் கொடுத்த பரிசு வெட்கக்கேடானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிஞர் வாலியின் கவிதை சற்று ஆறுதலே! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதிகள் தான் தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கும் சிங்கள அரக்கர்களை எதிர்த்து குரல்கொடுக்க வக்கில்லாமல் இருப்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கே சாபக்கேடே. பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஓரளவேனும் ஆறுதலைத் தருகிறது. கவிஞர் வாலியின் பேச்சும் அதன் பின்னர் வாசித்த கவிதையும் பின்வருமாறு: &lt;br /&gt;சொல்லைக் கல்லாக்கி...கவிதையைக் கவண் ஆக்கி...வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி...கடந்த வாரம் கவிஞர் வாலி வாசித்த கவிதை...இல்லை...வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று...அது இது... &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? &lt;br /&gt;மாமனிதனின் மாதாவே! - நீ &lt;br /&gt;மணமுடித்தது வேலுப்பிள்ளை &lt;br /&gt;மடி சுமந்தது நாலு பிள்ளை! &lt;br /&gt;நாலில் ஒன்று - உன் &lt;br /&gt;சூலில் நின்று - அன்றே &lt;br /&gt;தமிழ் ஈழம் &lt;br /&gt;தமிழ் ஈழம் என்றது உன் - &lt;br /&gt;பன்னீர்க் குடம் &lt;br /&gt;உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் &lt;br /&gt;கண்ணீர்க் குடம் &lt;br /&gt;உடைத்துக் காட்டுவேன் என்று... &lt;br /&gt;சூளுரைத்து - சின்னஞ்சிறு &lt;br /&gt;தோளுயர்த்தி நின்றது &lt;br /&gt;நீல இரவில் - அது &lt;br /&gt;நிலாச் சோறு தின்னாமல் - &lt;br /&gt;உன் இடுப்பில் &lt;br /&gt;உட்கார்ந்து உச்சி வெயிலில் - &lt;br /&gt;சூடும் சொரணையும் வர &lt;br /&gt;சூரியச் சோறு தின்றது &lt;br /&gt;அம்மா! &lt;br /&gt;அதற்கு நீயும் - &lt;br /&gt;அம்புலியைக் காட்டாமல் &lt;br /&gt;வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, &lt;br /&gt;தினச் சோறு கூடவே &lt;br /&gt;இனச் சோறும் ஊட்டினாய்; &lt;br /&gt;நாட்பட - &lt;br /&gt;நாட்பட - உன் &lt;br /&gt;கடைக்குட்டி புலியானது &lt;br /&gt;காடையர்க்கு கிலியானது! &lt;br /&gt;'தம்பி! &lt;br /&gt;தம்பி!” என &lt;br /&gt;நானிலம் விளிக்க நின்றான் - &lt;br /&gt;அந்த &lt;br /&gt;நம்பி; &lt;br /&gt;யாழ் வாழ் - &lt;br /&gt;இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி; &lt;br /&gt;அம்மா! &lt;br /&gt;அத்தகு - &lt;br /&gt;நம்பி குடியிருந்த கோயிலல்லவா - &lt;br /&gt;உன் கும்பி! &lt;br /&gt;சோழத் தமிழர்களாம் &lt;br /&gt;ஈழத் தமிழர்களை... &lt;br /&gt;ஓர் அடிமைக்கு &lt;br /&gt;ஒப்பாக்கி; அவர்களது &lt;br /&gt;உழைப்பைத் தம் உணவுக்கு &lt;br /&gt;உப்பாக்கி;&lt;br /&gt;செம்பொன்னாய் இருந்தோரை - &lt;br /&gt;செப்பாக்கி; அவர்கள் வாழ்வை &lt;br /&gt;வெட்டவெளியினில் நிறுத்தி &lt;br /&gt;வெப்பாக்கி;&lt;br /&gt;மான உணர்வுகளை&lt;br /&gt;மப்பாக்கி;&lt;br /&gt;தரும நெறிகளைத் &lt;br /&gt;தப்பாக்கி - &lt;br /&gt;வைத்த காடையரை &lt;br /&gt;வீழ்த்த...&lt;br /&gt;தாயே உன் &lt;br /&gt;தனயன் தானே - &lt;br /&gt;தந்தான் &lt;br /&gt;துப்பாக்கி!&lt;br /&gt;&lt;br /&gt;'இருக்கிறானா?&lt;br /&gt;இல்லையா?”&lt;br /&gt;எனும் அய்யத்தை &lt;br /&gt;எழுப்புவது இருவர் &lt;br /&gt;ஒன்று - &lt;br /&gt;பரம்பொருள் ஆன பராபரன்;&lt;br /&gt;இன்னொன்று &lt;br /&gt;ஈழத்தமிழர்க்கு - &lt;br /&gt;அரும்பொருள் ஆன &lt;br /&gt;பிரபாகரன்! &lt;br /&gt;அம்மா! இந்த &lt;br /&gt;அவல நிலையில் - நீ...&lt;br /&gt;சேயைப் பிரிந்த &lt;br /&gt;தாயானாய்; அதனால் - &lt;br /&gt;பாயைப் பிரியாத &lt;br /&gt;நோயானாய்!&lt;br /&gt;வியாதிக்கு மருந்து தேடி &lt;br /&gt;விமானம் ஏறி -&lt;br /&gt;வந்தாய் சென்னை; அது - &lt;br /&gt;வரவேற்கவில்லை உன்னை!&lt;br /&gt;வந்த &lt;br /&gt;வழிபார்த்தே - &lt;br /&gt;விமானம் திரும்பியது; விமானத்தின் &lt;br /&gt;விழிகளிலும் நீர் அரும்பியது! &lt;br /&gt;இனி &lt;br /&gt;அழுது என்ன? தொழுது என்ன?&lt;br /&gt;கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் &lt;br /&gt;கன்ன வயல்களை உழுது என்ன?&lt;br /&gt;பார்வதித்தாயே! - இன்றுனைப்&lt;br /&gt;புசித்துவிட்டது தீயே!&lt;br /&gt;நீ - &lt;br /&gt;நிரந்தரமாய் &lt;br /&gt;மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் &lt;br /&gt;தங்க இடம்தராத - எங்கள் &lt;br /&gt;தமிழ்மண் -&lt;br /&gt;நிரந்தரமாய்த்&lt;br /&gt;தேடிக்கொண்டது பழி!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனலை நிதிஸ் ச. குமாரன் &lt;/strong&gt;--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும்--&lt;br /&gt;&lt;br /&gt;இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய: nithiskumaaran@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-3497748485786038711?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/3497748485786038711/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/3.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3497748485786038711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3497748485786038711'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/3.html' title='தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர் பாகம் 3: மரணித்தவர்களையும் பழிவாங்கும் சிங்கள அரசு'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-nnuJ5Wm20lQ/TXNqNncX_xI/AAAAAAAAAek/5HiQ7JFg_UQ/s72-c/4237084779_4089513ce5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-6813743146358901774</id><published>2011-03-04T06:58:00.003-05:00</published><updated>2011-03-04T07:04:41.858-05:00</updated><title type='text'>விமானப்படை: முற்றாகவே அழிக்கப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியின் ஆபத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை விமானப்படை …………..?புலிகளின்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-tDrIpgfTV4Q/TXDUW4kNCXI/AAAAAAAAAeM/xg2Cvdf3QwM/s1600/poddu22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/-tDrIpgfTV4Q/TXDUW4kNCXI/AAAAAAAAAeM/xg2Cvdf3QwM/s400/poddu22.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580193427918489970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை, புதிய தளபதியின் கீழ் மேலும் பலத்தைப் பெருக்கவே முனைகிறது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போரின் முடிவில் புலிகளின் விமானப்படை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால் இலங்கை விமானப்படை இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது. 2007ம் ஆண்டில் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகள் விமானப்படைக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர். இந்தத் தாக்குதலில் விமானப்படையின் கணிசமான கண்பாணிப்பு ஆற்றலும், பயிற்சி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்து ஒரே வாரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை நடத்தி விமானப்படை இழந்து போன மனோபலத்தை மீளக்கட்டியெழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;.இனி, &lt;br /&gt;&lt;br /&gt;புதிய தளபதியின் கீழ் பலம் பெறும் விமானப்படை &lt;br /&gt;இலங்கை விமானப்படை இந்த வாரம் இரு முக்கிய நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. &lt;br /&gt;விமானப்படையின் புதிய தளபதியாக எயர் வைஸ் மார்சல் ஹர்ஷ அபேவிக்கிரம பதவியேற்கவுள்ளார் என்பது முதலாவது விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை விமானப்படையின் 60 வது ஆண்டு நிறைவு இன்று 2ம் திகதி கொண்டாடப்படுவது இரண்டாவது விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவமும் கடற்படையும் 60 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளைப் பெருமெடுப்பில் கொண்டாடியிருந்தன. விமானப்படையும் அதுபோலவே பெரியளவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எனினும் நேற்று முன்தினம் விமானப்படை சந்தித்த விபத்து இக்கொண்டாட்டங்களின் சாகசங்களை நிறுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளமை விமானப்படையை பொறுத்தவரை சோகம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று 2ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வரை விமானப்படையின் 60 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;விமானங்களின் சாகச நிகழ்வுகள், கலைநிகழ்வுகள், கண்காட்சி என்று கடந்த 60 ஆண்டுகால சாதனைகளை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவதற்கு விமானப்படை திட்டமிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று கொளும்பு விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக்கை பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அண்மையிலேயே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண், இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அத்துடன் இந்திய விமானப்படையில் உள்ள ரஸ்யத் தயாரிப்பு அதிநவீன போர் விமானங்களான சுகோய்30 போர் விமானங்களின் அணியொன்றையும் இந்த விழாவுக்கு அனுப்பவுள்ளது இந்தியா. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் போர் விமானங்களும், விமானப்படை பிரதித் தளபதியும் இந்த நிகழ்வில் பங்கேற்கக் கூடாதென்று தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் இந்திய விமானப்படைப் பிரதித் தளபதி எயர் மார்ஷல் பிறவுண் சுகோய் போர் விமானங்களின் அணியுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றமை உறுதியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டத்திலேயே இலங்கை விமானப்படையில் தளபதி மாற்றமும் நிகழ்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விமானப்படையின் 13வது தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் 12 வது விமானப்படைத் தளபதியாக விளங்கிய எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக கடந்த திங்கட்கிழமை 55 வயதை நிறைவு செய்துள்ள நிலையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக விமானப்படைத் தளபதி பதவியில் இருந்த ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அவர் கூட்டுப்படைகளின் பதில் தளபதியாகப் பதவியேற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதி பதவியை விட்டு விலகிச் சென்ற பின்னர் எயர்சீவ் மார்ஷல் றொசன் குணதிலக பதில் கடமையைப் பொறுப்பேற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஒய்வுபெற்ற பின்னர் இப்போது கூட்டுப்படைகளனின் பதில் தளபதியாக இருக்கும் எயர்சீவ் மார்ஷல் றொசான் குணதிலக கூட்டுப்படைகளின் தளபதியாக பதவியேற்றுள்ளார். இவருக்கு அரசாங்க உயர்மட்டத்தில் நன்மதிப்பு அதிகம் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2006 ஜுன் மாதம் விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற இவர் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் முழுமையாகப் பணியாற்றியவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடன் கூட இருந்து போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் ஏற்கனவே ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். ஆனாலும் போர் முடிந்து சுமார் இரண்டு வருடகாலத்துக்கு எயர் சீவ் மார்ஷல் குணதிலக விமானப்படைத் தளபதி பதவியை தக்க வைத்திருந்தார். இவரது காலத்தில் விமானப்படை அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்த அதேவேளை பெரும் பலமும் பெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்களை நடத்தி விமானப்படைக்கு நெருக்கடி கொடுத்தன. இது இலங்கை விமானப்படையின் வேறெந்தத் தளபதியும் சந்திக்காத நெருக்கடி. இதுபோன்ற நெருக்கடியை இனிவரப் போகும் தளபதிகளும் சந்திப்பதற்கு வாய்ப்பில்லை. &lt;br /&gt;வான் தாக்குதல் முறியடிப்பு மட்டுமன்றி புலிகளின் விமானங்களைத் துரத்தும் வான் சண்டைகளை நிகழ்த்த வேண்டிய நெருக்கடியான கட்டத்தையும் எயர் சீவ் மார்ஷல் குணதிலகவின் காலத்தில் விமானப்படை எதிர்கொண்டது. இறுதிப் போரின் முடிவில் புலிகளின் விமானப்படை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதால் இலங்கை விமானப்படை இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டில் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகள் விமானப்படைக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தினர். இந்தத் தாக்குதலில் விமானப்படையின் கணிசமான கண்பாணிப்பு ஆற்றலும், பயிற்சி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்தத் தாக்குதல் நிகழ்ந்து ஒரே வாரத்தில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதலை நடத்தி விமானப்படை இழந்து போன மனோபலத்தை மீளக்கட்டியெழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற போது சுமார் 900 அதிகாரிகளும் 19,000 படையினருமே விமானப்படையின் ஆட்பலமாக இருந்தது. இவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் போது 1500 அதிகாரிகளையும் 35,000 படையினரையும் கொண்ட பலம்வாய்ந்த படையாக அது மாறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவரது சுமார் ஐந்து வருட பதவிக்காலத்தில் விமானப்படையின் ஆட்பலம் சுமார் 16.000 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மடங்கிலும் சற்றே குறைவானது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விமானப்படை 110 விமானங்களையும் கொண்டுள்ள பலம் கொண்ட படையாக மாற்றம் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விமானப்படையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம முன்பு விமானப்படையின் தலைமை அதிகாரியாக இருந்தவர். இந்தப் பதவிக்கு இவர் வந்து இரண்டொரு வாரங்கள் தான் ஆகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பெப்ரவரி 1 ம் திகதி வரை இந்தப் பதவியில் இருந்தவர் எயர் வைஸ் மார்ஷல் பி.பி.பிறேமச்சந்திரா. &lt;br /&gt;&lt;br /&gt;இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு தமிழர். &lt;/strong&gt;சேவை மூப்பு அடிப்படையில் இவரே அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் 55 வயதை அடையும் முன்னரே கடந்த 1ம் திகதி ஓய்வுபெற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இப்போது பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அடையும் முன்னர் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள சூழலில் அவர் ஓய்வுபெற்றது ஏன் என்பது மர்மமே.  &lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஓய்வுபெற்றதை அடுத்தே சேவை மூப்பு பட்டியலில் இரண்டாவது நிலைக்கு வந்தார் எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம. &lt;br /&gt;&lt;br /&gt;விமானப்படையின் 13வது தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள எயர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம முன்னர் 5வது ஜெட் ஸ்குவாட்ரனின் தளபதியாக இருந்தவர். &lt;br /&gt;அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அவர் விமானப்படையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் இவரது வழிநடத்தலிலேயே மேற்கொள்ளப்பட்டது. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VC3e_CqT2xw/TXDVCb9faFI/AAAAAAAAAeU/YW237xfc4Xw/s1600/lead24.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 298px;" src="http://3.bp.blogspot.com/-VC3e_CqT2xw/TXDVCb9faFI/AAAAAAAAAeU/YW237xfc4Xw/s400/lead24.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580194176154167378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த விமானப்படை, புதிய தளபதியின் கீழ் மேலும் பலத்தைப் பெருக்கவே முனைகிறது. அண்மையில் தியத்தலாவ முகாமில் 1000 மாணவ கடெற் பயிலுனர்களுக்கு விமானப்படை பயிற்சிகளை வழங்கியதில் இருந்து இது உறுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரையாளர் சுபத்ரா&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-6813743146358901774?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/6813743146358901774/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6813743146358901774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6813743146358901774'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/03/blog-post.html' title='விமானப்படை: முற்றாகவே அழிக்கப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியின் ஆபத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை விமானப்படை …………..?புலிகளின்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-tDrIpgfTV4Q/TXDUW4kNCXI/AAAAAAAAAeM/xg2Cvdf3QwM/s72-c/poddu22.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-1574770359548127228</id><published>2011-02-11T14:46:00.002-05:00</published><updated>2011-02-11T14:50:52.640-05:00</updated><title type='text'>புலிகளின் முதுகெலும்பை முறிக்க:இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக்கொண்டது ஏன்..........</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-ZFkUcGO1kzk/TVWTCrn059I/AAAAAAAAAeE/D2rPB8nqgHM/s1600/Lanakanavy-india-2011_001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-ZFkUcGO1kzk/TVWTCrn059I/AAAAAAAAAeE/D2rPB8nqgHM/s400/Lanakanavy-india-2011_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572521788219647954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"................கடந்த 29 மாதங்களாக கடற்படையில் "சயுரால" என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை கடற்படையின் வெற்றியை இந்தியா அவசியமானதாகக் கருதியது. அதற்காக மூன்று போர்க் கப்பல்களை அனுப்பியது. ஆனால் இப்போது புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கு இந்தக் கப்பல்கள் மீளத் தேவைப்பட்டிக்கின்றன. வழங்கிய கப்பல்களை இந்தியா மீளப் பெறுவது இலங்கை கடற்படைக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செய்தியாக இருக்க முடியாது. ஏனென்றால் இன்னும் பல போர்க்கப்பல்களுடன் இலங்கையின் பொருளாதார கடல் எல்லையைப் பலப்படுத்தும் திட்டத்தை அது கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இந்தியா தான் வழங்கிய போர்க்கப்பல்களை மீளப் பெறுவதை இலங்கை நிச்சயம் வரவேற்காது.................."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக் கடற்படைக்கு இந்தியா வழங்கிய போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகித்திருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு அவர்களுக்கான கடல்வழி விநியோகங்களைத் தடுக்க வேண்டியது அவசியம் என்று 3ம் கட்ட ஈழப்போரிலேயே உணரப்பட்டது. இதனால் கடல் முற்றுகையைத் தீவிரப்படுத்தி கடற்புலிகளின் விநியோகங்களைத் தடுப்பதற்காக இலங்கைக் கடற்படை ஒரு நடவடிக்கையை ஆரம்பித்தது. போர்நிறுத்தத்துக்கு முந்திய காலகட்டத்தில் தான் "ஒப்பரேசன் வருண கிரண" என்ற பெயரில் இலங்கைக் கடற்படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அது போரின் முடிவு வரைக்கும் நீடித்தது. &lt;br /&gt;2000ம் ஆண்டு இலங்கைப் படைகள் புலிகளின் தீவிரமான தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த கட்டத்தில் இந்தியா ஒரு போர்க்கப்பலை கடற்படைக்கு வழங்கியது. அதுவே "சயுர" (பி620) என்ற பெயரில் இயங்குகிறது. இதுதான் "வருண கிரண" நடவடிக்கைக்கான மூலதனமாக இருந்தது. ஆழ்கடல் ரோந்துக் கப்பலான "சயுர"வும், இஸ்ரேலிய ஏவுகணைப் போர்க்கப்பல்களான "நந்திமித்ர", "சுரனிமல" போன்றனவும் இணைந்தே முல்லைத்தீவை மையப்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் "வருண கிரண" நடவடிக்கையை ஆரம்பித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முதலில் வழங்கிய "சயுர" என்ற போர்க்கப்பல் "சுகன்யா" வகையைச் சார்ந்தது. 2000 நவம்பர் 1ம் திகதி இது இலங்கைக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக இது குத்தகைக்கு வாங்கப்பட்டதாக இந்தியா கூறியது பின்னர் அது விற்கப்பட்டதாக கூறியது. இந்தப் போர்க்கப்பலை வைத்துக் கொண்டே கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து பல ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்தப் போர்க்கப்பலின் பங்களிப்பு அபரிமிதமானது என்றால் மிகையாகாது. &lt;br /&gt;நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்குவதற்கு முன்னரே சமாதான காலத்தில் புலிகளின் கப்பல்களில் இரண்டு மூழ்கடிக்கப்பட்ட போதும், கடற்புலிகள் வேறு வழிகளில் ஆயுதங்களைக் கடத்தியே வந்தனர். அவர்கள் தெற்கு கடற்பரப்பையும், மேற்கு கடற்பரப்பையும் தமது ஆயுத விநியோகங்களுக்கான பாதையாக மாற்றினர். &lt;br /&gt;இந்தக் கட்டத்தில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கியது. &lt;br /&gt;அப்போது கடல்வழி விநியோகங்கள் முழுமையாகத் தடுக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்தால் தான் புலிகளின் முதுகெலும்பை முறிக்கலாம் என்று இலங்கை அரசு கருதியது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உதவ இந்தியாவும் முன்வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா போன்ற நாடுகளும் முன்வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதக்கப்பல்கள் புறப்படுகின்ற செய்தி, அதன் பாதையை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சந்தேகத்துக்கிடமான கப்பல்களின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் ஆயுதக்கப்பல்கள் இலங்கையை நெருங்கும் வரை காத்திருந்த கடற்படையினர் அவற்றைத் தாக்கி அழிக்க ஆரம்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்கள் தமது திட்டத்தை மாற்றிக் கொண்டனர். &lt;br /&gt;ஆயுதக்கப்பல்கள் இலங்கையை நெருங்க முன்னரே – அதாவது சுமாத்ரா கடற்பரப்பில் வைத்து அவற்றை அழிக்கத் திட்டமிட்டனர். இலங்கையில் இருந்து சுமார் ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு கிலோ மீற்றர் தொலைவு வரை தேடிச் சென்று அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், 2007ம் ஆண்டில் கடற்புலிகளின் ஆயுத விநியோக வழிகளை அடைப்பதற்காக இந்தியா மற்றொரு போர்க்கப்பலை வழங்கியது. &lt;br /&gt;"விக்ரம்" வகையைச் சேர்ந்த இந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பல் "வரஹா" என்ற பெயரில் இந்திய கடலோரக் காவல் படையில் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் "சுகன்யா" ரகத்தைச் சேர்ந்த "சயுர"வைப் போன்று 22 நொட்ஸ் வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தாலும் நீளமும், எடையும் சற்றுக் குறைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் கடற்புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது கடல் முற்றுகையை மேலும் இறுக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுக்கு இரண்டு வேலைகளைக் கடற்படை செய்ய வேண்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடல்வழியாக வன்னியில் இருந்த புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அது முதலாவது வேலை. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது போர் இடம்பெறும் பிரதேசம் சுருங்கச் சுருங்க புலிகளின் முக்கிய தலைவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக கடற்படை பல சுற்றுப்பாதுகாப்பு வளையங்களை அமைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிய "அரோ" வகைப் படகுகளை முதல் வளையத்தில் நிறுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்து கரையோர ரோந்துப் படகுகள், அதிவேகத் தாக்குதல் படகுகள், பீரங்கிப் படகுகள் அதற்கடுத்து ஆழ்கடல் ரோந்துப் படகுகள் நிறுத்தப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டத்தில் கடைசி வளைத்தில் கண்காணிப்பை மேலும் அதிகமாக்க வேண்டிய தேவை இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கால கட்டத்தில் கடற்புலிகளிடம் சில நீர்மூழ்கிப் படகுகளும், விமானங்களும் இருப்பது உறுதியாகத் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் அவற்றைக் கொண்டு ஆழ்கடல் பரப்புக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஆழ்கடல் கண்காணிப்பை மேலும் நெருக்கமாகப் பேண வேண்டிய தேவை இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக இந்தியா மேலும் ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு வழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கடலோரக் காவல்படையில் "விக்ரஹா" என்ற பெயரில் இடம்பெற்றிருந்த கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;2008 ஓகஸ்ட் 23ம் திகதி இது இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பி 623 என்று இலக்கமிடப்பட்டு போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. &lt;br /&gt;பொதுவாக ஒரு கப்பலை வாங்கியவுடன் அதை ஒரு துறைமுகத்தில் வைத்தே இணைத்துக் கொள்வது வழக்கம். அப்படி ஏதேனும் செய்யாமலேயே இந்தியாவிடம் வாங்கிய "சயுரால" நேரடியாகவே படை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்கு வெறுமனே பி 623 என்று மட்டும் இலக்கமிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்த பின்னர், சரியாக இந்தக் கப்பலை வாங்கி ஒரு வருடம் கழித்து 2009 ஓகஸ்ட் 28ம் திகதி பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஸ இதை திருகோணமலை கடற்படைத்தளத்தில் வைத்து அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்போதே இதற்கு "சயுரால" என்று பெயரிடப்பட்டது. இதுவும் "சாகர" போன்று "விக்ரம்" வகையைச் சேர்ந்ததே. இந்தக் கப்பலின் இணைப்பு விழா திருகோணமலையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்தது. இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து கடல்முற்றுகை மற்றும் ஆழ்கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது. &lt;br /&gt;கடந்த 29 மாதங்களாக கடற்படையில் "சயுரால" என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் 23ம் திகதி கொச்சி கடற்படைத் தளத்தில் இந்தக் கப்பல் அதிகாரபூர்வமாக இந்திய கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கடற்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் தமயந்த தர்மசிறிவர்த்தன இந்தப் போர்க்கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் மேற்குப் பிராந்தியத் தளபதி பஸ்ராவிடம் கையளித்தார். &lt;br /&gt;திடீரென இந்தியா இந்தக் கப்பலை எதற்காக மீளப் பெற்றது என்ற கேள்விகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;மீள ஒப்படைக்க வேண்டிய ஒரு போர்க்கப்பலுக்காக திருகோணமலையில் பாதுகாப்பு செயலர் தலைமையில் ஒரு பெருமெடுப்பிலான நிகழ்வு நடத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இந்தியா வழங்கிய மற்றக் கப்பலான "சாகர" தற்போது கொல்கத்தாவில் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் இலங்கை கடற்படையிடம் மீள வழங்கப்படும் என்றே கூறப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால இப்போது அதைப் பற்றி எந்தத் தெளிவான தகவலும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை கடற்படையின் வெற்றியை இந்தியா அவசியமானதாகக் கருதியது. &lt;br /&gt;அதற்காக மூன்று போர்க் கப்பல்களை அனுப்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதால் இந்தியாவுக்கு இந்தக் கப்பல்கள் மீளத் தேவைப்பட்டிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வழங்கிய கப்பல்களை இந்தியா மீளப் பெறுவது இலங்கை கடற்படைக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற செய்தியாக இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் இன்னும் பல போர்க்கப்பல்களுடன் இலங்கையின் பொருளாதார கடல் எல்லையைப் பலப்படுத்தும் திட்டத்தை அது கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் இந்தியா தான் வழங்கிய போர்க்கப்பல்களை மீளப் பெறுவதை இலங்கை நிச்சயம் வரவேற்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரையாளர் சுபத்ரா&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-1574770359548127228?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/1574770359548127228/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/1574770359548127228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/1574770359548127228'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/02/blog-post.html' title='புலிகளின் முதுகெலும்பை முறிக்க:இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக்கொண்டது ஏன்..........'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZFkUcGO1kzk/TVWTCrn059I/AAAAAAAAAeE/D2rPB8nqgHM/s72-c/Lanakanavy-india-2011_001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7214142897717925342</id><published>2011-01-30T14:16:00.001-05:00</published><updated>2011-01-30T14:19:45.363-05:00</updated><title type='text'>எதைச் செய்யப் போகிறது நல்லிணக்க ஆணைக்குழு?: மகிந்த அரசை நெருக்கடியில் இருந்து மீளவைப்பதோ அல்லது நெருக்கடியில் சிக்கவைப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவின் கைய</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TUW5u1H3SsI/AAAAAAAAAd0/YiLjveNM_lQ/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TUW5u1H3SsI/AAAAAAAAAd0/YiLjveNM_lQ/s400/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568060728498670274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையுமா? &lt;br /&gt;&lt;br /&gt; ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பின்றி அமைய வேண்டுமானால் அனைத்து தரப்பினரதும் சாட்சியங்கள் பெறப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரை இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்தளவுக்கு இது பக்கச்சார்பற்றதாக இருக்கப் போகிறது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்றெல்லாம் பல நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை நிராகரித்துள்ளன. மூன்று தசாப்தப் போரினால் ஏற்பட்ட அழிவுகள், காயங்களுக்கு மருந்திடும் வகையில் தீர்வுகளைக் காண்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு அந்தவகையில் பொறுப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கையில் பிறழ்வுகள். குழப்பங்கள் தென்பட்டால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்பாறையில் நடத்தப்படும் அமர்வின் பின்னர் இந்த மாத இறுதியுடன் சாட்சியங்கள் பதிவு செய்வதை முடிவுக்கு கொண்டு வர நல்லிணக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் வரைக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலஅவகாசம் இருக்கின்ற போதும் அறிக்கை தயாரிப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்பதாலேயே சாட்சியங்கள் பதிவு செய்வதை நிறுத்தப் போவதாக அது கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கானோரிடம் சாட்சியங்களை அது நேரடியாகப் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெருமளவிலானோரின் சாட்சியங்களை எழுத்து மூலமும் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சாட்சியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரை இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது&lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;எந்தளவுக்கு இது பக்கச்சார்பற்றதாக இருக்கப் போகிறது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்றெல்லாம் பல நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை நிராகரித்துள்ளன. மொத்தத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அது முற்றுமுழுதாக நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மீது நம்பிக்கை இல்லை என்றும், பக்கச்சார்பின்றி நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென்றும் அவை கூறியுள்ளன. இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகள் கூட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படை.  இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் யாருக்காவது அநீதி ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிநாடுகள் எதிர்பார்த்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை கொண்டிராத தரப்பினரும் கூட இந்த அறிக்கை எவ்வாறு அமையப் போகிறது என்று ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தெளிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. &lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு 2002 பெப்ரவரி மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்கவே உத்தரவிடப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆணைக்குழு அதற்கு முந்திய சம்பவங்கள் தொடர்பாகவும் சாட்சியங்களைப் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பான சாட்சியங்களையும் பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், &lt;br /&gt;இந்தப் போருடன் அல்லது சமாதானப் பேச்சுகளுடன் சம்பந்தப்பட்ட பலரின் சாட்சியங்களை ஆணைக்குழு இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;அரசாங்கத் தரப்பில், புலிகளுடன் பேசியவர்கள் பெரும்பாலும் எவருமே சாட்சியமளிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்குப் பதில் அளிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஜனாதிபதியாக இருந்தவரும் சமாதான முயற்சிகள் சீர்குலைவதற்கு வெளிப்படையான காரணியாக இருந்தவருமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு பல வாரங்களாகியுள்ளன. இப்போது தான் அவர் தனக்கு அழைப்புக் கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளார். ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பாரா இல்லையா என்று அவர் இன்னும் உறுதி செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவரும் தான் சமாதான கால நடவடிக்கைகள் அனைத்தையும் நன்றாக அறிந்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சமாதான முயற்சிகள் தோல்வியுற்றதற்கான காரணங்களைக் கண்டறிவதும் இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாக உள்ள நிலையில் இவர்களின் சாட்சியங்கள் தவிர்க்கப்படுமானால் அதில் பயனேதும் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் தவிர சமாதான முயற்சிகளுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் பெரும்பாலும் சாட்சியம் அளிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;துணை நிலைப் பாத்திரம் வகித்த எஸ்.எல்.குணசேகர, கோமின் தயாசிறி, எச்.எச்.டி.மகிந்தபால போன்ற சிலர் தான் சாட்சியமளித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட விசாரணைக் காலத்தின் பெரும் பகுதியில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் கூட இந்த ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் நேரடியாகவோ அல்லது தனது செயலாளர் மூலமோ அதைச் செய்திருக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை புலிகள் தரப்பின் சாட்சியங்கள் ஏதும் பெறப்படவும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அது சாத்தியமற்றதென்று கூறப்பட்டாலும் அவர்கள் தரப்பு நியாயங்களைத் தேட வேண்டியதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறுப்பே. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறியிருந்தது. ஆனால் இரா.சம்பந்தன் சுகவீனமடைந்ததால் அது நின்று போனது. இனிமேல் அது சாட்சியங்களை சமர்ப்பிக்குமா இல்லையா என்பது தெளிவாகவில்லை. &lt;br /&gt;மொத்தத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை அது முற்றுமுழுதாக நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பின்றி அமைய வேண்டுமானால் அனைத்து தரப்பினரதும் சாட்சியங்கள் பெறப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துத் தரப்பு வாதங்களும் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் அது நடுநிலையானதாக பக்கச் சார்பற்றதாக அமையும். &lt;br /&gt;மூன்று தசாப்தப் போரினால் ஏற்பட்ட அழிவுகள், காயங்களுக்கு மருந்திடும் வகையில் தீர்வுகளைக் காண்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு அந்தவகையில் பொறுப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதுமட்டுமன்றி இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கையில் பிறழ்வுகள். குழப்பங்கள் தென்பட்டால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் இருந்து மீளவைப்பதோ அல்லது நெருக்கடியில் சிக்கவைப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவின் கையில் தான் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் நல்லிணக்க ஆணைக்குழு எதைச் செய்யப் போகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசை நெருக்கடிகளில் இருந்து மீட்குமா அதைச் செய்ய வேண்டுமானால் அனைத்து தரப்பிடமும் சாட்சிகள் பெற்று நடுநிலையான பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதானால் எதையும் செய்யாமல் மேன்போக்கான ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்து விட்டாலே போதும். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் எதைச் செய்யப் போகிறது நல்லிணக்க ஆணைக்குழு? &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் கபில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-7214142897717925342?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/7214142897717925342/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_30.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7214142897717925342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7214142897717925342'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_30.html' title='எதைச் செய்யப் போகிறது நல்லிணக்க ஆணைக்குழு?: மகிந்த அரசை நெருக்கடியில் இருந்து மீளவைப்பதோ அல்லது நெருக்கடியில் சிக்கவைப்பதோ நல்லிணக்க ஆணைக்குழுவின் கைய'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TUW5u1H3SsI/AAAAAAAAAd0/YiLjveNM_lQ/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-3623816896346954675</id><published>2011-01-14T14:33:00.002-05:00</published><updated>2011-01-14T14:38:48.071-05:00</updated><title type='text'>புத்தாண்டு விண்ணப்பம்: "வரலாற்றுக் கடமையில்" இருந்து விலகி விடாது புலம்பெயர் தமிழ்ச் சமூகம்...............!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TTCmOOjqSrI/AAAAAAAAAds/l2XO8KmDM78/s1600/sanku.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TTCmOOjqSrI/AAAAAAAAAds/l2XO8KmDM78/s400/sanku.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562128303158610610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புலம்பெயர் சமூகம் வலுவானது -அதன் பணியும் காத்திரமானது. &lt;/strong&gt;&lt;br /&gt;அதே போல் தொடர்ந்து வன்னியில் துன்பப்படும் உறவுகளுக்காகக் குரல் கொடுப்பதுடன் நின்று விடாமல் அவர்களைக் கை தூக்கி விடுவதற்கும் உதவ வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் மூலம் புலம்பெயர் சமூகம் தனியே போருக்கே உதவியது- அவர்கள் போரையும் அழிவுகளையுமே விரும்புகிறார்கள் என்று சிங்கள அரசு மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களையும் உடைத்தெறிய முடியும். அதைச் செய்வதற்கு புலம்பெயர் சமூகம் எல்லா வழிகளிலும் துணை நிற்க வேண்டியது இன்றைய தலையாய கடமை. இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து புலம் பெயர் சமூகம் விலகி விடாது என்ற நம்பிக்கை வன்னிப்பகுதி மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(* கனடா நாட்டில் வெளியிடப்பட்ட  சிறப்பு மலருக்கு எழுதப்பட்ட ஆக்கம்  இது.  2010 டிசம்பர் 18 ந் த்கதி நடைபெற்ற  மலர் வெளியீட்டின் பின் இவ் ஆக்கம் இன்போ தமிழில் மீள் பதிப்பு செய்யப்படுகின்றது.)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப் பேரினவாதமும் அதன் விளைவாகத் தோன்றிய தமிழீழ விடுதலைப் போராட்டமும் தான் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை தோற்றுவித்திருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழ்ச்சமூகம் உலகளவில் இன்று வலுவானதொன்றாக மாறியுள்ளது என்றால் அது மிகையான கருத்தல்ல. கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, இத்தாலி, அவுஸ்ரேலியா என்று அமெரிக்க, ஐரோப்பிய அவுஸ்ரேலியக் கண்டங்களில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வலுப்பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மரபுவழிப் போராக மாற்றம் பெற்றபோது அதன் ஆணிவேராக மாறியது புலம்பெயர் தமிழ்ச் சமூகமே. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் நிதி ஆதாரமில்லாமல் நிச்சயமாக விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டத்தை இந்தளவு வீரியத்துடன் நடத்தியிருக்க முடியாது. இந்த மாற்றமானது 1990களின் நடுப்பகுதியில் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால இறுதிப்போர் வரைக்கும்- புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் நிதி ஆதாரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆச்சரியம் மிக்க சாதனைகளையும் அபரிமிதமான ஆற்றலையும் உலகிற்கு நிரூபித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது போரை நிறுத்தும் நோக்கில் புலம்பெயர் சமூகம் வலுவாகக் கிளர்நது நின்று அமைதி வழியில் போராடியது. ஆனால் தமிழரின் துரதிஸ்டம்- முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் பேரழிவுடன் முடிந்து போனது. ஆனாலும் புலம்பெயர் சமூகத்தின் வலு இன்னமும் குன்றிவிடவில்லை என்பதை அண்மையில் பிரித்தானியாவில் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள அரசின் தலைவரையே உரை நிகழ்த்த விடாமல் திருப்பி அனுப்பியது பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் ஒன்றியம். இதற்குக் காரணம் புலம்பெயர் தமிழர்களின் பலம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதே வலுவுடன் புலம்பெயர் சமூகம் ஒன்றுபட்டிருந்தால் வன்னியில் போரின்போது பாதிக்கப்பட்ட மக்களை துயரில் இருந்து மீட்க முடியும் என்பது உறுதி. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அவலங்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீளக்குடியேறியுள்ள போதும் அவர்களின் வாழ்விடங்கள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை. தொழில் வாய்ப்புகள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மிதிவெடி அபாயம், இராணுவ அடக்குமுறை என்று பல்வேறு காரணங்களால்- மீளக்குடியேறிய மக்களால் தமது இயல்பான காரியங்களை செய்ய முடியாதுள்ளது. இதைவிட போதிய உதவிகள் இல்லாமல் தமது தொழில்களை மீள ஆரம்பிக்க முடியாத அவலத்தில் ஏராளமானோர் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பலரும் அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலையில் திண்டாடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;போரின் முடிவு தமிழர்களுக்கு தந்துள்ள சாபக்கேடு இது. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து எமது சமூகம் எப்படி மீளப் போகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தனர். அப்போது பொருளாதார ரீதியாக நெருடிக்கடியில் சிக்கியுள்ள வன்னிப்பகுதி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஸ வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் வங்கி வைப்புக் கணக்குகளைக் காட்டி இவர்களுக்கா உதவி தேவை எள்ளி நகையாடியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து ஒன்றறை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலவாழ்வுக்காக- புனர்வாழ்வுக்காக சிங்கள அரசாங்கம் ஒன்றையுமே செய்யப் போவதில்லை. ஏதோ வெளிநாடுகளும், உதவி நிறுவனங்களும் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு போய்த் தமது கையால் கொடுத்து விட்டு அதைப் பிரசாரப்படுத்தி அரசியல் இலாபம் தேடுகின்ற முயற்சியில் தான் சிங்கள தேசம் இருந்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போரில் பங்கெடுத்த சிங்களப் படையினரின் குடும்பங்களுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபாவை ஒதுக்கிய சிங்கள அரசாங்கம்- அதே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு மில்லியன் ரூபாவையாவது ஒதுக்கவில்லை.அதுமட்டுமன்றி தமிழர்களுக்கு உதவிகளை வழங்கும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களையும் வன்னி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் இருந்து, வெளியேற்றும் முயற்சியிலும் சிங்கள அரசு இறங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவுவாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் அநாதரவான நிலையில் விடப்படவுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசு தானும் செய்யாமல் ஏனைய தொண்டர் நிறுவனங்களையும் செய்ய விடாமல்- வைக்கோல் பட்டடை நாய் போல நிற்கிறது. இது தமிழரை நடுத்தெருவுக்குக் கொண்டு வர சிங்களப் பேரினவாதம் போடும் சதித்திட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் வன்னியிலும் ஏனைய பகுதிகளிலும் போரினால் சீரழிந்து போயுள்ள தமிழர்களின் வாழ்வைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு- முற்றுமுழுதாக புலம்பெயர் சமூகத்தின் மீது விழுந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் சமூகம் வன்னிப் பகுதி மக்களை வாழ வைப்பதற்கு பல்வேறு முறைகளில் உதவ முடியும். அதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படுவதும் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுவதும் முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் சமூகத்தில் ஏராளமான பொருளாதார விற்பன்னர்கள் உள்ளனர். பொறியியல் வல்லுனர்கள், மருத்துவ நிபுணர்கள், திட்டமிடலாளர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் எப்படி எப்படி தமிழரின் மீட்சிக்கு உதவ முடியும் என்று ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வன்னி மீன்பிடியையும் விவசாயத்தையும் அதிகம் நம்பியுள்ள பிரதேசம். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு புதிதாக ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்கப் போவதாக சிங்கள அரசு கூறிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு குறைந்த சம்பளத்தில்- கொத்தடிமைகள் போன்று தமிழ் இளைஞர், யுவதிகள் நடத்தப்படும் ஆபத்து இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிறிலங்காவின் ஆடைத் தயாரிப்புத் தொழில் இப்போது அவ்வளவு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் ஆடை தயாரிப்புத்துறையை நோக்கி தவறாக வழிகாட்டப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வேறெந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லாதால்- அதுவே அவர்களுக்கு சிறந்த வழியாக இப்போது தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கைத்தொழில்துறைகளில் வன்னியில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கலாம் என்பது பற்றிய புதிய சிந்தனைகள் புலம்பெயர் சமூகத்தில் இருந்தே உருவாக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் உள்ள மட்டுப்படுத்தப்பட்டளவு வளங்களும் அங்குள்ள சூழலும் இதுபற்றிய சிந்தனையை செய்வதற்கோ ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி என்ற வகையில் மட்டுமன்றி தமிழரின் தாயகத்தை எப்படி மீளக்கட்டியெழுப்பலாம் என்று திட்டமிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் புலம்பெயர் தமிழர்களால் தான் பெரிதும் உதவ முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார ரீதியாக தமிழர்கள் தலையெடுப்பதன் மூலமே உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் பொருளாதார ரீதியாக நலிந்து போய்க் கிடக்கும் சமூகத்திடம் இருந்து நிச்சயமாக உரிமைக் கோசம் எழும்பப் போவதில்லை. ஏனென்றால் போரினால் அந்தளவுக்கு அவர்கள் அடிபட்டுப் போயுள்ளனர். அவர்கள் எங்கே நிவாரணம் கொடுக்கப்படுகிறது, எங்கே அரிசி கொடுக்கப்படுகிறது என்று அலையும் நிலை தான் இப்போது உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையை மாற்ற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இலவசத்துக்காக அலையும் நிலையில் இருந்து வன்னி மக்களை மாற்றினால் தான் அவர்களை உரிமை கொண்ட மனிதர்களாக மாற்ற முடியும். அதைவிட பொருளாதார ரீதியாகப் பலமாக இல்லாத எந்தவொரு இனத்தையும் உலகம் கண்டுகொள்ளவும் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பொருளாதார ரீதியான புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஓரிரண்டு நாட்களிலோ மாதங்களிலோ ஏற்படக் கூடியதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே போரினாலும் பல்வேறு துயரங்களினாலும் துவண்டு போயுள்ள மக்களைக் கை தூக்கி விடுவதற்கு சில வருடங்கள் பிடிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் பெருந்தொகையான குடும்பங்கள் பிரதான உழைப்பாளரை அல்லது குடும்பத் தலைவரை இழந்த நிலையில் வாழ்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு அல்லது வருமான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லையேல் இதுவே சமூகத்தின் மிகப் பெரிய அவலமாக உருவெடுத்து விடும். &lt;br /&gt;குடும்பத் தலைவர்களைப் போரில் இழந்த அல்லது தொலைத்து விட்ட அல்லது சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் நிலையில் அந்தக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடாதபடி காப்பாற்ற வேண்டியது முக்கியமான கடமை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு விடப்பட்டால் அதன் சாபம் அனைத்துத் தமிழர்களையும் பற்றிக் கொள்ளும்.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏனென்றால் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இன்று நிம்மதியாக வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்று வாழ்வதற்கு இவர்களின் உயிர்க்கொடையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் சமூகம் வலுவானது -அதன் பணியும் காத்திரமானது. &lt;/strong&gt;&lt;br /&gt;அதே போல் தொடர்ந்து வன்னியில் துன்பப்படும் உறவுகளுக்காகக் குரல் கொடுப்பதுடன் நின்று விடாமல் அவர்களைக் கை தூக்கி விடுவதற்கும் உதவ வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் மூலம் புலம்பெயர் சமூகம் தனியே போருக்கே உதவியது- அவர்கள் போரையும் அழிவுகளையுமே விரும்புகிறார்கள் என்று சிங்கள அரசு மேற்கொள்ளும் பொய்யான பிரசாரங்களையும் உடைத்தெறிய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;அதைச் செய்வதற்கு புலம்பெயர் சமூகம் எல்லா வழிகளிலும் துணை நிற்க வேண்டியது இன்றைய தலையாய கடமை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்றுக் கடமையில் இருந்து புலம் பெயர் சமூகம் விலகி விடாது என்ற நம்பிக்கை வன்னிப்பகுதி மக்களிடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் தொல்காப்பியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-3623816896346954675?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/3623816896346954675/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_14.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3623816896346954675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3623816896346954675'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_14.html' title='புத்தாண்டு விண்ணப்பம்: &quot;வரலாற்றுக் கடமையில்&quot; இருந்து விலகி விடாது புலம்பெயர் தமிழ்ச் சமூகம்...............!'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TTCmOOjqSrI/AAAAAAAAAds/l2XO8KmDM78/s72-c/sanku.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7459811375697155976</id><published>2011-01-09T12:49:00.002-05:00</published><updated>2011-01-09T12:53:12.994-05:00</updated><title type='text'>தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழர் பலத்தை நிரூபிக்குமா; இல்லை குழம்புமா.........................?உள்ளூராட்சித் தேர்தல் எந்தக் கூட்டணியில் யார்?:</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSn1VSOhoBI/AAAAAAAAAdk/bTDoLNW2kVc/s1600/tamil-parties-meeting%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 198px;" src="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSn1VSOhoBI/AAAAAAAAAdk/bTDoLNW2kVc/s400/tamil-parties-meeting%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560244960984408082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உள்ளூராட்சித் தேர்தல் எந்தக் கூட்டணியில் யார்? &lt;/strong&gt;ஈபிடிபி, தமிழ் மக்கள் &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் ஆகியனவும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தக் கட்சிகளை அரங்கத்துடன் இணைந்து போட்டியிட வைப்பது குதிரைக் கொம்பான காரியம் தான். ஏனென்றால் இந்தக் கட்சிகள் ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பவை. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் ஈபிடியின் தயவு இல்லாமல் ஆளும்கட்சியால் தலையெடுக்க முடியாது. அது ஏற்கனவே யாழ்.மாநகரசபைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட விடயம். அதுபோலவே மட்டக்களப்பில் ஆளும்கட்சிக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவு தேவை.ஆனால் மடடக்களப்பில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கடசிகளால் அத ன் சிறகுக்குள் இருந்து வெளியே வருவது சிரமமான காரியமாகவே இருக்கும். அப்படி வெளியே வந்து அரங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அது ஆளும்கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கின்ற ஒரு தேர்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்படும்போது தமிழரங்கத்தின் நிலை குழப்பமாகவே இருந்தது இன்று காலை கிடைத்த செய்திகளின் படி  தமிழ் கட்சிகளின் அரங்கம் குழம்பியது - ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி. கட்சிகள் வெளியேறின என அறியமுடிகின்றது &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் கபில் இன்போதமிழ் குழுமம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனி, &lt;/strong&gt;&lt;br /&gt;சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு தேர்தலுக்கு நாடு தயாராகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றதற்குப் பிறகு, எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப் போகிறது. ஏற்கனவே பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் அரசியல் கட்சிகள் இப்போதே இறங்கி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் எந்த அணியில் போட்டியிடுவது, எங்கெங்கு எத்தனை பேரைப் போட்டியில் நிறுத்துவது என்ற கணக்கெடுப்புகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.இந்தக் கட்டத்தில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றினதும் நிலைப்பாடுகள் என்ன, அவை என்ன நிலையில் இருக்கின்றன என்று பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பகுதிகளில் முக்கியமான ஒரு கட்சியாக உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இது இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் போலத் தெரிகிறது. ஏற்கனவே இதுபற்றி ஆராயும் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் இணைத்துப் போட்டியில் நிறுத்தும் திட்டத்துடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இருந்தாலும், அதற்கு கூட்டமைப்பு இணங்குமா என்பது சந்தேகம். ஏனென்றால் தமது பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது. அத்துடன் கூட்டணி சேர்வது தமது தனித்துவத்தைப் பாதிக்கும் என்ற கருத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் உள்ளது. அதேவேளை, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சிவாஜிலிங்கம் கூறிக் கொண்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முயற்சிக்குப் புளொட், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தவுள்ளதாகவும் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளையும் இணைத்துப் போட்டியிட வைக்க முனைவதாகவும் கூறியுள்ளார் சிவாஜிலிங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள மூன்று கட்சிகளும் ஏற்கனவே யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலின் போது இணைந்து கொண்டவை தான். ஆனால் கடைசி நேரப் பிரச்சினைகளால் அவை தனித்தனியே போட்டியிட்டன. இப்போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு ஆச்சரியப்படுத்தும் வகையிலானதாக இல்லாவிட்டாலும் அது நிலைத்து நிற்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியனவும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தக் கட்சிகளை அரங்கத்துடன் இணைந்து போட்டியிட வைப்பது குதிரைக் கொம்பான காரியம் தான். ஏனென்றால் இந்தக் கட்சிகள் ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பவை. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் ஈபிடியின் தயவு இல்லாமல் ஆளும்கட்சியால் தலையெடுக்க முடியாது. அது ஏற்கனவே யாழ்.மாநகரசபைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்ட விடயம். அதுபோலவே மட்டக்களப்பில் ஆளும்கட்சிக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவு தேவை.ஆனால் மடடக்களப்பில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் அத ன் சிறகுக்குள் இருந்து வெளியே வருவது சிரமமான காரியமாகவே இருக்கும். அப்படி வெளியே வந்து அரங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அது ஆளும்கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கின்ற ஒரு தேர்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;இதற்கிடையே தேர்தல் என்று வந்துவிட்டாலே ஆளும்கட்சிக்குத் தலைவலியும் கூடவே வந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் விருப்பு வாக்குகளுக்காக அவர்களது வேட்பாளர்கள் மோதிக் கொள்வது சர்வசாதாரணம். &lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களிலேயே இவை உச்சம் பெற்றிருக்கும் போது உள்ளூராட்சித் தேர்தல் என்றால் கேட்கவா வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் இந்தமுறை முந்திக் கொண்டுள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன. &lt;br /&gt;&lt;br /&gt;விருப்பு வாக்குளைப் பொறுத்து சபைகளின் தலைவர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருத்தமானவர்கள் மட்டுமே அதற்குத் தெரிவு செய்யப்படுவர் என்று அவர் அறிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இது இப்போது மட்டுமல்ல எதிர்காலத்தில் எல்லாத் தேர்தல்களிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;கிலோ கணக்கிலான நகைகளைக் காதிலும், கையிலும் அணிந்து கொண்டு மில்லியன் கணக்கில் பிரசாரத்துக்காக செலவழிக்கும் நிலையை மாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்கட்சியைப் பொறுத்தவரையில் பெரிய பிரச்சினையாக இருப்பது ஏற்கனவே இருந்த பல சபைகளில் காணப்பட்ட மோசமான நிர்வாகம் தான். இதன் காரணமாக ஐந்து உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத் திட்டம் தோல்வியடைந்தது. இதில் மூன்று மாநகரசபைகளும் அடங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஆளும்கட்சிக்குப் பெருத்த அவமானத்தைத் தேடித் தந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் சுத்தமான, நாணயமான அரசியல்வாதிகளை மட்டும் களமிறக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் புதுமுகங்களை அதிகம் தேட வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு, கிழக்கு நிலையைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சி தனியாக நிற்க முடியாது.&lt;br /&gt; கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்தும், வடக்கில் ஈபிடிபியுடன் இணைந்துமே போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது மிகவும் பலவீனமானதொரு நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஆளும்கட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டது இதன் முதற்கட்டம் எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்கட்சி இம்முறை தனித்து நின்று மோதிப் பார்க்க முனைந்தால் தான் அதன் பலம் பலவீனம் தெளிவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது விசப்பரீட்சையாகி விடும் என்பதால் அதைத் தவிர்க்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து,&lt;br /&gt;ஐதேக, இப்போது தன்னிடம் இருந்த அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் இழந்து விட்டுத் தனித்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் அதன் வீராப்புக்குக் குறைச்சலைக் காணவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் சேர்ந்திருந்தன. இப்போது அவை எதுவும் கூட்டணியில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தனித்தே தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது, &lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் உட்கட்சித் தேர்தல் வேறு நடக்கவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிரச்சினையை சரி செய்து கொண்டு ஐதேக முழுவீச்சுடன் தேர்தலைச் சந்திக்குமா என்பதை கணிக்க டமுடியாதுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் வடக்கு,கிழக்கில் தனித்தே போட்டியிடப் போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் இதையே விரும்புவதாக கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஏனைய இடங்களில் அது ஆளும்கட்சியின் தயவை நாட வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லையேல் அங்கெல்லாம் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியாது என்பதும் அதற்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும், ஏனைய இடங்களில் ஆளும்கட்சியுடன் இணைந்தும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கு தனித்துப் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யப் போகிறதாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் கொழும்பில் தனித்துப் போட்டியிட முனைந்தார் மனோ கணேசன். ஆனால் கொழும்பில் இப்போது தேர்தல் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அவருக்குப் பெரிய ஏமாற்றம். &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை வடக்கு,கிழக்கில் ஏனைய பகுதிகளில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்புவதாகவே மனோ கணேசனின் கட்சி கூறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆசை வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் மோதுவதும் ஏனைய இடங்களில் இணைந்து கொள்வதும் சாத்தியமாக இருக்குமா என்பது சந்தேகமே. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இரு கட்சிகளும் கொழும்பில் தனித்தனியாகப் போட்டியிட்டால் அது மாநகரசபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்ற கருத்தும் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜேவிபியோ கூட்டணி ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு மீண்டும் மணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடக் கிளம்பி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகா தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியைக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது ஜேவிபியின் பாரம்பரிய பலத்தைக் காண்பிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெளிவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வழக்கம்போலவே எல்லாக் கட்சிகளையும் முந்திக் கொண்டு தனித்தே போட்டியிடுவோம் என்று திடமாக அறிவித்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எல்லாக்கட்சிகளுமே தமது எங்கு அதிக இலாபம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு இயங்க ஆரம்பித்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான பின்னர் தான் கூட்டணிக் குழப்பங்கள் உச்சம் பெறும். &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இறுதியாக எந்தக் கூட்டணியில் யார் யார் நிற்கப் போவது என்பதும் தெரியவரும். &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகள் பெரும்பாலும் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தனித்தே போட்டியிட விரும்புகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆளும்கட்சியுடன் இணைந்து போட்டியிட அவை விரும்பவில்லை என்பதே உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-7459811375697155976?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/7459811375697155976/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_09.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7459811375697155976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/7459811375697155976'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_09.html' title='தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழர் பலத்தை நிரூபிக்குமா; இல்லை குழம்புமா.........................?உள்ளூராட்சித் தேர்தல் எந்தக் கூட்டணியில் யார்?:'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSn1VSOhoBI/AAAAAAAAAdk/bTDoLNW2kVc/s72-c/tamil-parties-meeting%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-5772201458346931260</id><published>2011-01-07T13:53:00.001-05:00</published><updated>2011-01-07T13:55:27.826-05:00</updated><title type='text'>தமிழர் மீதான: போர்குற்ற ஆடுகளத்தில் களமிறங்கும் இலங்கையும், ஐ.நாவும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhZhjRxhI/AAAAAAAAAdc/P3pFL0Nlu4g/s1600/Aadukalam-01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 195px;" src="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhZhjRxhI/AAAAAAAAAdc/P3pFL0Nlu4g/s400/Aadukalam-01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559519356143126034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கை என்ற ஆடுகளத்தில் இலங்கையும், ஐ.நாவும் இரண்டு முக்கியமான அணிகளைக் களமிறக்க முடிவு செய்து விட்டன. ஆனால் என்ன ஆடுகளம் எங்கு என்பது ஒரு பிரச்சினை. இந்த அணிகள் இரண்டும் மோதலுக்குத் தயாரா என்பது அடுத்த பிரச்சினை. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் தான் இந்த ஆட்டம் நடக்கும். ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதல்ல முக்கியம். இதன் காரணமாகப் பர்வையாளர்களாக உள்ள மக்களுக்குச் சொல்லப்படப் போகும் செய்தி தான் முக்கியமானது. அது தமிழர்களுக்கு ஆறுதலாக அமையுமா அல்லது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையுமா என்பதெல்லாம் இந்த அணிகள் ஆட்டத்துக்குச் சம்மதிக்கும் நிலையில் இருந்தே முடிவு செய்யப்படும்.ஆக, இப்போது சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்பதே முதன்மையான பிரச்சினை. அதன் பின்னர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா நிபுணர்குழு சந்திக்குமா? &lt;br /&gt; இலங்கை என்ற ஆடுகளத்தில் இரண்டு முக்கிய அணிகளைக் களமிறக்க ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆடப் போகின்ற ஒரு அணி உள்ளூர் அணி. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பெரியளவிலான அனைத்துலக அங்கீகாரமோ, ஆதரவோ இல்லாது போனாலும் இலங்கை அரசின் ஆதரவும் பின்புலமும் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;அதனுடன் ஆடுவதற்குக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு அணி அனைத்துலக அங்கீகாரம் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நன்மதிப்பும் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கூறப்படுவது ஒன்றும் கால்பந்தாட்ட அணியோ, கிரிக்கெட் அணியோ அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆணைக்குழுக்கள். &lt;br /&gt;முதலாவது இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ள நிபுணர்கள் குழு. &lt;br /&gt;2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது தொடக்கம் போர் முடிவுக்கு வந்த காலம்வரையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டது தான் நல்லிணக்க ஆணைக்குழு. &lt;br /&gt;&lt;br /&gt;அது விசாரணைகள் நடத்தி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் மே மாதம் அதன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குக் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா நிபுணர்குழுவும் சாட்சியங்களைப் பெற்று விசாரணைகளை நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இந்த மாத இறுதியில் கையளிக்கப்பட வேண்டும். ஐ.நா நிபுணர்குழு அமைக்கப்பட்ட போதே அதை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. நிபுணர்குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தகவல் வெளியிட்டதை அடுத்து, அவசர அவசரமாக ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது அரசாங்கம். இதன் நோக்கம் ஐ.நா நிபுணர் குழுவை வெட்டி விடுவது தான். ஆனால் இலங்கை அரசின் எதிர்ப்புகளை மீறி ஐ.நா நிபுணர்குழு அமைக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு எதிராக விமல் வீரவன்சவைக் கொண்டு அரசாங்கம் எதிர்ப்பைத் தெரிவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர்குழு இலங்கையில் காலடி எடுத்துவைக்கப் போவதில்லை என்று அனைவருமே உறுதியாக நம்பியிருந்த நிலையில் தான் ஐ.நா பொதுச்செயலர் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவை அது சந்திக்கப் போவதாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா நிபுணர்குழு இலங்கை செல்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக வெளியான அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதற்குப் பிந்திய நிகழ்வுகள் இந்த நிபுணர்குழுவின் சந்திப்பு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர்குழு இலங்கை வருவதற்கு அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு முக்கியமானதொரு பிரச்சினை. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து,&lt;br /&gt;அந்தக் குழு இலங்கை வந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திக்குமே தவிர அதற்கு அப்பால் எதையும் செய்ய முடியாது என்பது இலங்கை அரசின் நிலைப்பாடு. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு எதிர்ப்புகள் இருப்பதால் வெளிநாடு ஒன்றில் சந்திக்க வைப்பது பற்றியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். வீசா பற்றிய பிரச்சினையில்லாமல் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்காக சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கலாம் என்றொரு கதை பரவியது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவோ அதை நிராகரித்து விட்டது. வெளிநாடுகளுக்குச் சென்று சந்திப்புகளை மேற்கொள்வதற்கு தமது ஆணைக்குழுவுக்கு எந்த அனுமதியும் கிடையாது என்கிறது அது. அதைவிட நல்லிணக்க ஆணைக்குழு இன்னொரு விடயத்தையும் இறுக்கமாகக் கூறிவருவது கவனிக்கத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா நிபுணர்குழு வேண்டுமானால் எம் முன்தோன்றி சாட்சியமளிக்கலாம். ஆனால் அவர்கள் எம்மிடம் கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்த முடியாது என்பதே அந்த இறுக்கமான நிலைப்பாடு. இங்கே நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒரு விதமான யார் பெரியவர் என்ற ஈகோ தோன்றியுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேவேளை ஐ.நா நிபுணர்குழுவோ, தாம் இலங்கை செல்வது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டும் சந்திப்பதற்கானதாக இருக்காது என்றும், தமது நோக்கம் பரந்தளவினதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதிலிருந்து அவர்கள் இலங்கையில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணைகள் நடத்த விரும்புவது தெளிவாகிறது. ஆயினும் இதுவரையில் இந்த நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம் ஐ.நா நிபுணர்களுக்கு விசா வழங்க முன்வந்துள்ள போதும் அவர்களை விசாரணைகள் ஏதும் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் ஐ.நா நிபுணர்குழு இலங்கை வருவதால் பெரியளவில் பலனேதும் கிடைக்கப் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அவர்கள் இங்கு வர விரும்புவார்களா என்பது சந்தேகம் தான். &lt;br /&gt;இதன் காரணமாக ஐ.நா நிபுணர்குழுவும், நல்லிணக்க ஆணைக்குழுவும் சந்திக்குமா, சந்திக்காதா என்பது தெளிவாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு உள்நாட்டில் நடக்குமா, வெளிநாட்டில் நடக்குமா என்பதும் முடிவாகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இருதரப்பில் இருந்தும் அவ்வப்போது செய்திகள் தான் வெளியாகி மோதிக் கொண்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு தரும் வகையில் நாடாளுமன்றம் கூடும் போது பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் மங்கள சமரவீர. இக் கோரிக்கை சாத்தியப்படுமா என்பது நாடாளுமன்றம் கூடும் போதே தெரியவரும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் அதன் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னமும் ஐந்து மாதங்கள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஐ.நா நிபுணர்குழுவைப் பொறுத்தவரையில் நிலைமை அவ்வாறில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் குறுகியது. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இந்த மாத இறுதிக்குள் அறிக்கையைச் சமர்ப்பித்தாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்ளாக இந்தச் சந்திப்புக்கான ஓழங்குகளைச் செய்வது சாத்தியமாகுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம் இந்தச் சந்திப்பை மட்டுமன்றி, ஐ.நா நிபுணர்குழுவையே விரும்பவில்லை என்பது வெளிப்படை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சில நிர்ப்பந்தங்களுக்காகவே இணக்கத்தை வெளியிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இப்படி இழுபட்டு சந்திப்பு நடக்காது போனாலும் கூட அதையிட்டு இலங்கை அரசாங்கம் கவலை கொள்ளாது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, ஐ.நா நிபுணர்குழு இலங்கை வருவது தடைப்பட்டாலோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவினருடனான சந்திப்பு நடக்காது போனாலோ, அதையிட்டு அனைத்துலக மட்டங்களில் கவலையைத் தோற்றுவிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தனியே தமிழர் தரப்பு மட்டுமன்றி அதற்கும் அப்பால் பல நாடுகள் இதை முக்கிய விவகாரமாகப் பார்க்கின்ற சூழல் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இலங்கையும், ஐ.நாவும் இரண்டு முக்கியமான அணிகளைக் களமிறக்க முடிவு செய்து விட்டன. ஆனால் என்ன ஆடுகளம் எங்கு என்பது ஒரு பிரச்சினை. இந்த அணிகள் இரண்டும் மோதலுக்குத் தயாரா என்பது அடுத்த பிரச்சினை. இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் தான் இந்த ஆட்டம் நடக்கும். ஆட்டத்தில் யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்பதல்ல முக்கியம். இதன் காரணமாகப் பர்வையாளர்களாக உள்ள மக்களுக்குச் சொல்லப்படப் போகும் செய்தி தான் முக்கியமானது. அது தமிழர்களுக்கு ஆறுதலாக அமையுமா அல்லது அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் அமையுமா என்பதெல்லாம் இந்த அணிகள் ஆட்டத்துக்குச் சம்மதிக்கும் நிலையில் இருந்தே முடிவு செய்யப்படும். ஆக, இப்போது சந்திப்பு நடக்குமா, நடக்காதா என்பதே முதன்மையான பிரச்சினை. அதன் பின்னர் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் சத்திரியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-5772201458346931260?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/5772201458346931260/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_07.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5772201458346931260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5772201458346931260'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post_07.html' title='தமிழர் மீதான: போர்குற்ற ஆடுகளத்தில் களமிறங்கும் இலங்கையும், ஐ.நாவும்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhZhjRxhI/AAAAAAAAAdc/P3pFL0Nlu4g/s72-c/Aadukalam-01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-6266721789217150702</id><published>2011-01-07T13:46:00.002-05:00</published><updated>2011-01-07T13:53:31.103-05:00</updated><title type='text'>சிறிலங்கா: தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பேசுகிறார்கள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhGyI0HDI/AAAAAAAAAdU/ZPUpZLlgSXM/s1600/20100610_Defsec2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhGyI0HDI/AAAAAAAAAdU/ZPUpZLlgSXM/s400/20100610_Defsec2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559519034178018354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் பல பகுதிகளிலுமுள்ள தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுடனும் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்களது நெருங்கிய உறவினர்களுடனும் உலக சோசலிசவாதிகளுக்கான இணையத்தளம் World Socialist Web Site அண்மையில் உரையாடியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தடுப்புமுகாம்களில் எவ்வாறு தாங்கள் அடக்குமுறைக்கு உட்பட்டோம் என்பதை மட்டும் அவர்கள் விபரிக்கவில்லை. அத்துடன் ஒருவரது அடிப்படை சனநாயக மற்றும் சட்ட ரீதியிலான உரிமைகளை மீறும் வகையிலேயே தாங்கள் எவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தோம் எனவும் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மே 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளமைப்பு வீழ்ச்சிகண்டதைத் தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்திருந்நத 280,000 தமிழ்ப் பொதுமக்கள் அரச படையினரால் நிர்வகிக்கப்பட்ட 'நிவாரணக் கிராமங்களில்' அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முகாம்களைச் சுற்றி முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்ததோடு ஆயுதம் தாங்கிய படையினர் 24 மணி நேரமும் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு தனியான இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்த இளவயது ஆண்களிடமும் பெண்களிடமும் விசாரணை நடாத்திக்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வாளர்கள் தினமும் நூற்றுக்கணக்கானவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து இரகசியமான இடங்களுக்குக் கொண்டு சென்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஈற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகை 12,000 ஆக உயர்ந்தது. மக்களை அச்சத்திற்குள்ளாக்கி அமைதியாக்குவதே புலனாய்வாளர்களின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிச் 'சந்தேக நபர்கள்' என்ற பெயரில் 11696 பேர் கைதுசெய்யப்பட்டு பல்வேறுபட்ட தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 5586 பேர் புனர்வாழ்வின் பின்னர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க கடந்த திங்களன்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'ஐலண்ட்' பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் அளவில் பெரிய தடுப்பு முகாம்களின் தேசமாக சிறிலங்கா மாறியிருக்கிறது என என கடந்த செப்ரெம்பரில் அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு சிறிலங்காவினைக் குறிப்பிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரச படையினரால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் இந்த இரகசிய தடுப்பு முகாம்களில் உண்மையில் எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுதந்திரமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த மார்க்கமும் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தடுப்பு முகாம்களின் நிலைமை எவ்வாறுள்ளது என்பதும் எவருக்கும் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினர் கூட இந்த முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் கட்டாயக் காணமல்போதல்களுக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் பெயர் போனவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பொலநறுவைக்கு அண்மையில் வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவரும் தடுப்பு முகாமிலுள்ள ஒருவரின் உறவினர்களுடன் நாம் உரையாடினோம். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட இந்தப் பகுதியில் காடழிப்புச் செய்யப்பட்டு மூன்று தொகுதிகளாக பாரிய தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 17 அடி நீளமான கூடாரங்களிலேயே இவர்கள் தடுத்துவைக்கப்ட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1000 பேர் வரை இங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட நபர் எங்களிடம் கூறுகிறார். ஒவ்வொரு கூடாரமும் ஆறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அறைகளுக்கும் ஐந்து பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். காட்டின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்பு முகாமினைச் சுற்றி முட்கம்பிச் சுருள்கள் இடப்பட்டிருப்பதோடு ஆயுதம் தரித்த படையினர் 24 மணி நேரமும் காவல் செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பிலுள்ள ஒரு சிலர் மாத்திரமே தலையணைகளையும் பாயினையும் வைத்திருக்கிறார்கள் என அவர்களது உறவினர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு சவர்க்காரக் கட்டி ஒன்று, சம்பூ பை ஒன்று, பற்பசை ஒன்று என்பன வழங்கப்படுகின்றன. மூன்று நேரமும் சோறு வழங்கப்படுவதாகவும் &lt;br /&gt;ஆனால் அது போதாதிருப்பதாகவும் அதன் தரமும் மோசமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உடுபுடவைகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றோரே பெற்றுக்கொடுக்கிறார்கள். தடுப்பிலுள்ளவர்களது பெற்றோர்களும் திருமணம் செய்தவர்களாயின் மனைவி பிள்ளைகளும் இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பு முகாம்களிலுள்ள நிலைமையினை தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் ஒருவர் இவ்வாறு விபரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள தேசியவாதத்தினை வலுப்படுத்தும் வகையில் செயற்படுமாறும் கொழும்பு அரசாங்கத்திற்கு தங்களது விசுவாசத்தினைத் தடுப்பிலுள்ளவர்கள் வெளிப்படுத்தவேண்டும் என்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவருமே வற்புறுத்தப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் காலையில் அங்குள்ள மைதானங்களில் அணிதிரளும் தடுப்பிலுள்ளவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படமாட்டோன் என உறுதியுரை எடுக்குமாறு பணிக்கப்படுவதோடு சிறிலங்காவினது தேசியக் கொடியினை ஏற்றும் நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தொடர்ந்து தடுப்பு முகாமினைத் துப்பரவாக்கும் பணிகளிலும் தடுப்பு முகாம்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் பண்ணைகளில் கடுமையாக வேலைசெய்யுமாறும் பணிக்கப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெலிக்கந்தை பகுதியிலுள்ள தடுப்பு முகாமில் அளவில் பெரிய பண்ணைகளில் நாள் பூராவும் கடும்பணி செய்யவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மரக்கறிச்செய்கை, நெற்செய்கை என்பன இங்கு இடம்பெறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பண்ணைகளில் வேலைசெய்துவிட்டு மாலையில் திரும்பும்போது கடுமையான உடற்சோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"அரசாங்கமும் தடுப்பு முகாமினை நிர்வகிக்கும் இராணுவத்தினரும் எங்களை அடிமைகள் போலவே நடத்தினர்" என தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட இன்னொருவர் எம்மிடம் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;"எங்களது திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார். அமைப்பிலிருந்து அவர் விலகிய பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் எனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. எமக்கு நான்கு பிள்ளைகள். மூத்த பிள்ளையின் வயது எட்டு. மாணிக்கம் பண்ணை முகாமில் வைத்து எனது கணவனைக் கைதுசெய்த படையினர் சிறிய விசாணையின் பின்னர் விடுவித்துவிடுவோம் என எங்களிடம் அவர்கள் உறுதியளித்தபோதும் இன்னமும் அவரை விடுவிக்கவில்லை" என வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரது மனைவி எமக்குக் கண்ணீருடன் விபரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;போரின் காரணமாக இவர்களது வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் அழிந்துவிட்ட நிலையில் தனது நான்கு பெண் பிள்ளைகளுடனும் தாயாருடனும் இந்த இளம்தாய் சிறிய ஓலைக் குடிசையில் வசித்து வருகிறாள். "என்னிடம் போதிய பணம் இல்லாமையினால் கடந்த இரண்டரை மாதங்களாக நான் கணவனைச் சென்று பார்வையிடவில்லை" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அங்கு சென்றுவருவதற்கு 5000 ரூபாய்களாவது [45 டொலர்] தேவைப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்வையிடுவதற்காக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் 4,000 ரூபாய்களைத் தருகிறார்கள். நான் எனது பிள்ளைகளுடன் சென்றுவரவேண்டுமெனில் இந்தத் தொகை எமது பயணத்திற்குப் போதாது. முதலில் நான் வவுனியாவிற்குச் செல்லவேண்டும். அங்கு ஒருநாள் தங்கியிருந்துவிட்டு பின்னர் ஏனையவர்களுடன் இணைந்து வாகனமொன்றை ஒழுங்குசெய்து வெலிக்கந்தைக்குச் செல்லவேண்டும். சென்று திரும்பி வருவதற்கு நான்குநாள் ஆகும்" என்கிறார் இவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவளது கணவனை காவல்துறையினரோ அல்லது இராணுவத்தினரோ அல்லது புலனாய்வாளர்களோ இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தவுமில்லை, எந்தவிதமான &lt;br /&gt;குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவுமில்லை. "இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனது கணவனிடமிருந்து கடிதம் கிடைக்கும். இவ்வாறு தடுப்பிலுள்ளவர்களை விடுவிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிகளோ உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை" என இவர் முறையிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;போர் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை ஆதரித்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது கொழும்பு ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறது. இவ்வாறு தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் விடுதலைக்காக எந்தவிதமான போராட்டங்களையும் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும் அல்லது அவர்கள் உடனடியாகவே விடுவிக்கப்படவேண்டும் என அதிபர் ராஜபக்சவுடனும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனும் தாங்கள் உரையாடியிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சுக்களின் விளைவாக ஆக்கபூர்வமாக எதுவுமே இடம்பெறவில்லை. அத்துடன் தடுப்பிலுள்ளவர்களின் விடுதலையினை விரைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு வேறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் கணவன் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஒரு நடுத்தர வயதினையுடைய பெண்ணொருவர் இவ்வாறு கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"போர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினை விட்டு தப்பிச்செல்வதற்காக நாங்கள் முயற்சித்துக் கொண்டிருந்தோம். இந்த நிலையில் நானும் எனது கணவரும் ஒருவரையொருவர் பிரிந்துவிட்டோம். எறிகணைத் தாக்குதலின் விளைவாக காயமடைந்த எனது கணவர் இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதாக நான் பின்னர் அறிந்தேன்". &lt;br /&gt;&lt;br /&gt;"மோசமான வறுமையில் தாங்கள் வாடுகிறோம். எனது உறவினர் ஒருவரின் வீட்டில் இணைந்து வாழும் நாங்கள் உண்ணுவதற்கு எதுவுமற்ற நிலையில் சிலசமயம் பட்டினி &lt;br /&gt;கிடந்திருக்கிறோம். என்னிடம் போதிய பணவசதி இல்லாதமையினால் பல மாதங்களாக தடுப்பிலுள்ள எனது கணவனைச் சென்று நான் பார்க்கவில்லை" என தனது பரிதாப &lt;br /&gt;நிலையினை விபரிக்கிறார் இந்தப் பெண். தடுப்பிலுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுவிப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையினையும் எடுக்காத தமிழ்க் கட்சிகள் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இவர் தனது கடுமையான ஆதங்கத்தினை வெளிப்படுத்துகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;2006ம் ஆண்டு நான் வேலை தேடி வன்னிக்குச் சென்றபோது போர் மீளவும் மூண்டுவிட பாதைகள் மூடப்பட்ட நிலையில் நான் அங்கு அகப்பட்டதாகக் கூறுகிறார் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கும் இன்னொருவர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்திரட்டலுக்கு இவர் உட்பட்டிருக்கிறார். "அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் நான் களமுனைக்கு அனுப்பப்பட்டேன். காலில் பலமாகக் காயமடைந்த நிலையில் எனது காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் நான் மூன்று மாதங்களாச் சிகிச்சை பெற்றேன். அந்த வேளையில் மருத்துவமனையினை இலக்குவைத்து சிறிலங்கா அரச படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்" என அவர் தனது கதையினை விபரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இறுதி யுத்தத்தின் போது இந்த நபர் படையினரிடம் சரணடைந்திருக்கிறார். "யூன் 14ம் நாளன்று நான் இராமநாதன் முகாமிலிருந்து ஏனையோருடன் அழைத்துச் செல்லப்பட்டேன். நான் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்ட கதையினை படையினருக்குக் கூறுமிடத்து அவர்கள் என்னை உடனடியாகவே விடுவித்துவிடுவார்கள் என நம்பினேன். ஆனால் வெலிக்கந்தை பகுதியிலுள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட நான் அண்மையில் விடுவிக்கப்படும் வரைக்கும் அங்கு ஒன்றரை ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டேன்" என்கிறார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப் புலிகள் போராடுகிறார்கள் என்ற நிலையில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்தோம். புலிகளமைப்பு ஒரு முதலாளித்துவ அமைப்பு என்பது தொடர்பாக அப்போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. அமெரிக்கா தமிழர்களுக்கு உதவும் என்ற பெரு நம்பிக்கை இறுதிக் காலத்தில் புலிகளிடத்தே காணப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை பொய்யாகிவிட்டது. சிங்களவர்களுடன் இணைந்து வாழவேண்டும் என்ற உங்களது நோக்கம் எனக்கு புதிதாகவே தெரிகிறது. முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ் மற்றும் சிங்களவர்கள் ஒன்றிணைவது நல்லதொரு விடயம்தான். இரண்டு சமூகங்களின் மத்தியிலும் காணப்பட்ட இதுபோன்ற ஒற்றுமை போரினால் பெரிதும் சிதைந்து விட்டது. இதனை மீளவும் கட்டியெழுப்புவது அவசியமானது" என அவர் தனது கருத்தினை எங்களிடம் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கிறது. விசாரணைகள் எதுவுமின்றி ஒருவரை காலவரையின்றித் தடுத்துவைக்க உதவும் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் இவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் 30 பெண்கள் உள்ளிட்ட 700 பேர் வரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுச் சிறிலங்காவினது சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். போர் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயத்தின் பெயரில் வேறு வழியின்றித் தான் வழங்கியதொரு வாக்குமூலத்தின் விளைவாக கடந்த 13 ஆண்டுகளாகத் தான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் தமிழ் கைதி ஒருவர் பி.பி.சி செய்திச் சேவையிடம் குறிப்பிட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும் மறுக்கப்படுவதானது நாட்டின் ஏனைய மக்களுக்கு தெளிவான எச்சரிக்கையினை வழங்குவதாக அமைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவிலுள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த மதம் மற்றும் மொழியினைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுமிடத்து மகிந்த அரசாங்கம் அவர்களை அடக்கும் வகையில் இதுபோன்ற கடுமையான உத்திகளைக் கையாளுவதற்கு ஒருபோதும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-6266721789217150702?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/6266721789217150702/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6266721789217150702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/6266721789217150702'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2011/01/blog-post.html' title='சிறிலங்கா: தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பேசுகிறார்கள்'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TSdhGyI0HDI/AAAAAAAAAdU/ZPUpZLlgSXM/s72-c/20100610_Defsec2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-1105932928899433805</id><published>2010-12-17T13:43:00.003-05:00</published><updated>2010-12-17T13:48:57.571-05:00</updated><title type='text'>பிராந்திய அரசியல் ஆய்வு: இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் சிக்கியுள்ள சிறீ லங்கா...............?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQuvqYMngqI/AAAAAAAAAcw/cZl-Hw2D9cw/s1600/wold_army_20090805.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQuvqYMngqI/AAAAAAAAAcw/cZl-Hw2D9cw/s400/wold_army_20090805.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551724108249006754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் இலங்கை சிக்கியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் எதனுடனும் பகையைப் பேண இலங்கை தயாரில்லை. மூன்று நாடுகளுடனும் ஒரே நேரத்தில் உறவுகளைப் பேண அது விரும்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகவே இந்த நாடுகளுடன் அவ்வப்போது வளைந்து கொடுத்து வருகிறது. ஆனால் இந்த நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற நட்புறவை இப்போது ஓரளவுக்கு மதீப்பீடு செய்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அதிகபட்சமாக சீனாவின் நட்பையே விரும்புகிறது. &lt;br /&gt;இரண்டாமிடத்தில் தான் இந்தியாவை வைத்திருக்கிறது. &lt;br /&gt;மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது, &lt;br /&gt;இது இந்தியாவுக்கு நன்றாகவே புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சீனா பக்கம் சாய்ந்து விடாதிருப்பதற்காகவே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் இந்தியா வளைந்து போகிறது.  இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் இலங்கை யாரை அதிகம் நம்புகிறது என்று பார்ப்பதே இந்தப் பத்தியின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கையின் மிகநெருங்கிய நண்பன் இந்தியாவா சீனாவா பாகிஸ்தானா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியா சென்றிருந்த போது "ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்குமே கடற்படைத்தளம் அமைக்க இடம்கொடுக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை இந்திய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவர் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் இலங்கை சிக்கலானதொரு இராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடித்து நகர்ந்து செல்கிறது. இதற்குள் இப்போது பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் இலங்கை யாரை அதிகம் நம்புகிறது என்று பார்ப்பதே இந்தப் பத்தியின் நோக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடத்தின் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஒஸ்லோவில் கடந்த 10 ந் திகதி நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் பங்கேற்க நோர்வேயில் உள்ள 65 நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் 44 நாடுகள் தான் அழைப்பை ஏற்றுக் கொண்டன. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய நாடுகள் அழைப்பைப் புறக்கணித்ததற்குக் காரணம் சீனா. &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் ஜனநாயகம் கோரும் மனிதஉரிமை செயற்பாட்டாளர் லியூ சியாவோபோவுக்குத் தான் இந்த வருடத்துக்கான நோபல் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்டது. 11 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் லியூ சியாவோபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக சீனா தனது நட்பு நாடுகளுக்கு நோபல் பரிசு வழங்கும் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு கோரியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணும் நாடுகள், வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் இதற்குச் செவி சாய்த்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தவகையில் இலங்கையும் இந்த நிகழ்வைப் புறக்கணித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 20 நாடுகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கியமானது. சீனாவுக்காக இந்த நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர் லியூ சியாவோபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே இலங்கை அரசாங்கம் அதுபற்றி வாய் திறக்கக் கூட இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக சீனா இருப்பதாலேயே அது அமைதியாக இருந்து கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அமைச்சர் சரத் அமுனுகம நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் கடவுளாக சீனா இருப்பதாகக் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் சீனா தட்டிக் கழிக்காமல் வழங்கி உதவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட நண்பனை இழக்க இலங்கை ஒருபோதும் தயாராக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்ட போது அதை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தது சீனா. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகளும் அப்போது இலங்கைக்கு உதவின. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சீனாவின் உதவியே இலங்கைக்கு மிகப்பெரியதாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு சர்வதேச அளவில் செல்வாக்கும் பலமும் இருந்தாலும் அதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சீனாவுக்கு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் எந்த நகர்வு எடுக்கப்படாலும் அதை முறியடித்து உதவ சீனா தயாராக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நோபல் பரிசு நிகழ்வைப் புறக்கணித்ததன் மூலம் சீனாவுக்கு தனது விசுவாசத்தையும், நன்றியையும் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு நிச்சயம் எரிச்சலைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் சீனாவின் நகர்வுகள் விடயத்தில் இந்தியா கடும் அதிருப்தி கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு எதிராகப் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை என்று ஒரு முத்துமாலை வியூகத்தை சீனா வகுப்பதாக இந்தியா கருதுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் இலங்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா அமைப்பதும், அதிகளவிலான முதலீடுகளைச் செய்வதும் இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சீனாவின் முதலீடுகள் இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள இந்தியா விரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சீனாவின் நகர்வுகளைக் கண்காணிக்கும் நோக்கில் அம்பாந்தோட்டையில் ஒரு துணைத் தூதரகத்தை இந்தியா திறந்து வைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை எப்போதும் தன் காலடிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது இந்தியா. &lt;br /&gt;ஆனால் இலங்கையோ சீனாவின் நட்பைத் துறந்து விடும் நிலையில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கேட்பதையெல்லாம் கொடுக்கும் கடவுளாக சீனா இருப்பதால் இந்தியாவுடன் ஒட்டிக் கொள்ள இலங்கை தயாராக இல்லை.  இந்தியாவையும் பகைக்காமல் சீனாவுடன் உறவைப் பேண இலங்கை முனைகிறது, ஆனால் எல்லா வேளைகளிலும் அது சாத்தியமாகாது. &lt;br /&gt;சீனாவின் மனிதஉரிமை செயற்பாட்டாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை இலங்கை புறக்கணித்தது சீனாவுக்கு சார்பான ஒரு விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இந்தியாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நோபல் பரிசு பெற்ற சீனாவின் மனிதஉரிமை செயற்பாட்டாளர் அங்கு ஜனநாயகத்தைப் கோருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தம்மை ஜனநாயக நாடுகள் என்று கூறிக் கொள்ளும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அந்த நிகழ்வைப் புறக்கணித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து ஜனநாயகம் என்பது கேள்விக்குரியதொரு விடயமாக மாறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் வர்த்தக நலன்களை முன்னிறுத்திய ஜனநாயகமே இப்போது முதன்மை பெற்றுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முரண்பட்ட நிலைக்குள் இலங்கையும், சீனாவும் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவது சிக்கலானதொரு நிலை தான். &lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்வது கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மீது அழுத்தங்களைக் கொடுத்து அதை சீனா பக்கம் சாய விடுவதற்கு இந்தியா தயாராக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் அது தமிழர் நலனுக்கு விரோதமான பல விடயங்களைக் கூட சகித்துக் கொண்டிருக்கிறது, &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை பாகிஸ்தான் அதிபர் அண்மையில் இலங்கை வந்திருந்த போது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடைச் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இந்தியா நிச்சயம் விரும்பாது என்பது இலங்கைக்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானை நட்பு நாடாக இலங்கை கருதுகிறது. ஆனால் இந்தியாவை மீறும் வகையில் அதனுடன் நட்பைப் பேணத் தயாரில்லை. இதனால் தான் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ள இலங்கை தயாராக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்வது குறித்து பேசப்படவில்லை என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு செயலர். இதன் மூலம் இந்தியாவை அவர் திருப்திப்படுத்த முனைகிறார். ஆனால் பாகிஸ்தானுடன் நட்புறவை துண்டிப்பதற்கு இலங்கை தயாரில்லை. அதனுடனான வர்த்தக, பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து அதிகரிப்பதற்கு இலங்கை விரும்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் இலங்கை சிக்கியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் எதனுடனும் பகையைப் பேண இலங்கை தயாரில்லை. மூன்று நாடுகளுடனும் ஒரே நேரத்தில் உறவுகளைப் பேண அது விரும்புகிறது. அதற்காகவே இந்த நாடுகளுடன் அவ்வப்போது வளைந்து கொடுத்து வருகிறது. ஆனால் இந்த நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற நட்புறவை இப்போது ஓரளவுக்கு மதீப்பீடு செய்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அதிகபட்சமாக சீனாவின் நட்பையே விரும்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாமிடத்தில் தான் இந்தியாவை வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது, &lt;br /&gt;&lt;br /&gt;இது இந்தியாவுக்கு நன்றாகவே புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சீனா பக்கம் சாய்ந்து விடாதிருப்பதற்காகவே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் இந்தியா வளைந்து போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் புதுடெல்லியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் அரசியல் தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று தெரிவித்த கருத்தை இந்தியாவின் தனிப்பட்ட கருத்தாகக் கருத முடியாது. உலக ஒழுங்குக்கு அமைய இந்தியா எடுத்துள்ள முடிவே அது. இந்த உலக ஒழுங்கை இலங்கை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதன் காரணமாகவே எத்தகைய அழுத்தங்களையும் அதனால் சுலபமாக சமாளித்துக் கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் கபிலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-1105932928899433805?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/1105932928899433805/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post_17.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/1105932928899433805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/1105932928899433805'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post_17.html' title='பிராந்திய அரசியல் ஆய்வு: இந்தியா ,சீனா, பாகிஸ்தான் என்று சிக்கல் நிறைந்த ஒரு வட்டத்துக்குள் சிக்கியுள்ள சிறீ லங்கா...............?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQuvqYMngqI/AAAAAAAAAcw/cZl-Hw2D9cw/s72-c/wold_army_20090805.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-5240106830895846895</id><published>2010-12-12T13:24:00.002-05:00</published><updated>2010-12-12T13:29:36.550-05:00</updated><title type='text'>வன்னி இறுதிப்போர்:  வெளிவராத சங்கதிகளையும் வெளியிடுமா விக்கிலீக்ஸ்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQUT2-UIJ8I/AAAAAAAAAck/GUj1Sf5F_AU/s1600/wikileaks-cartoon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQUT2-UIJ8I/AAAAAAAAAck/GUj1Sf5F_AU/s400/wikileaks-cartoon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549863950965286850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகெங்கும் அடித்துக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் அலையில் இருந்து இலங்கையும் தப்பிக் கொள்ளவில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட சுமார் 3000 இற்கும் அதிகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் கைப்பற்றியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் சிலவே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்துக்கள், போர்க்குற்ற விசாரணைகள் பற்றி அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள், லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையில் காலூன்ற முனைவது பற்றிய விடயம், வடகொரியாவில் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியது என்று பல்வேறு விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் குறித்த அமெரிக்காவின் தகவல் பரிமாற்றங்கள் வெளியானதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்து போயிருந்தது. கடந்த வாரம் லஷ்கர் ஈ தொய்பா இலங்கையில் இயங்குவது பற்றிய ஒரு தகவலும், வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியது பற்றிய தகவலும் வெளியாகின. லஷ்கர் ஈ தொய்பா இந்தியாவில் பல்வேறு குண்டுவெடிப்புகள், தாக்குதல்களை மேற்கொண்ட ஒரு தீவிரவாத அமைப்பு. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படும் இந்த்த் தீவிரவாத அமைப்பு இலங்கையில் பயிற்சி முகாம்களைக் கொண்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிமாயத் பெக் என்ற தீவிரவாதி கொழும்பிலேயே வெடிபொருட்களைப் பொருத்தும் பயிற்சியைப் பெற்றதாகக் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கப் புலனாய்வு அமைப்பும் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்துவதாக இந்தியாவை எச்சரித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்கள் இப்போது விக்கிலீக்சிலும் வெளியாகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையைத் தளமாகப் பயன்படுத்துவதாக ஏற்கனவே வெளியாகிய தகவல்களை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ ஏற்கனவே மறுத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் புலிகள் உள்ளிட்ட எந்தவொரு பயங்கரவாத அமைப்புமே கிடையாது என்று அவர் அடித்துக் கூறியிருந்தார். ஆனால் இப்போது புனே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஹிமாயத் பெய்க் கொழும்பிலேயே வெடிபொருட்களை ஒருங்கிணைத்து வெடிக்க வைப்பதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற ஒரு விவகாரம். &lt;br /&gt;&lt;br /&gt;ல்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பு தெற்காசியாவில் பல்வேறு நாடுகளில் இயங்குகிறது. ஆனால் அதன் அடிப்படை நோக்கம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதாகும். அத்துடன் மேற்கு நாடுகளின் உல்லாசப் பயணிகளையும் அது குறி வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவும் பாகிஸ்தானும் வெளிப்படையாக அவ்வப்பேர்து பேசிக் கொண்டாலும் மறைமுகமாக ஒரு பனிப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பது வெளிப்படையான விடயம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்பு தமது நாட்டுக்குள் வன்முறைகளைத் தூண்டி விடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கட்டத்தில் ஐ.எஸ்.ஐக்கும் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் இருக்காது என்று நம்ப முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் இவையிரண்டினதும் அடிப்படை நோக்கங்கள் இந்தியாவைச் சிதைப்பதேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இலங்கை உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் இந்தியாவுடனும் அது நெருக்கமான உறவை வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்புக்கு இலங்கை தளம் அமைத்துக் கொடுத்தால் அது இந்தியாவை வெறுப்படைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இலங்கை அரசின் ஆசீர்வாதம் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வருகை வீசாவுடன் பாகிஸ்தானில் இருந்து வரக் கூடிய எந்தவொரு லஷ்கர் தீவிரவாத அமைப்பினரையும் இலங்கை கண்டு கொள்ளாமல் விடுவதற்கு சாத்தியம் உள்ளது. அதேவேளை இலங்கையில் லஷ்கர் தீவிரவாத அமைப்பினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்தாலும் அதற்கான வாய்ப்புகள் முற்றாக இல்லை என்று கூற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் வெடிபொருட்கள் தொடர்பாகப் பரிச்சயமுள்ள பல ஆயிரக்கணக்கானோர் இலங்கையில் உள்ளனர். அரசபடைகளில் இருந்தவர்கள், இருப்பவர்கள், தப்பி ஓடியவர்கள் ஏனைய ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று வெடிபொருட்களைக் கையாளுவது பற்றிய அறிவு ஏராளமானோருக்கு இருக்கிறது. இவர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கபட்டிருக்கலாம். அதற்காக பெருந்தொகைப் பணம் கைமாறியிருக்கலாம். இதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்கத்தால் உறுதியளிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு சந்தேகம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பயிற்சிகளையும் பாகிஸ்தானில் பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளுக்கு அங்கேயே வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சி மட்டும் வழங்கப்படாதது ஏன் என்பது தான் புதிராக உள்ளது. அங்கு எல்லா வசதிகளும் இருக்கும் போது கொழும்பில் வைத்து இந்தப் பயிற்சியைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளை, இந்தியாவுக்குள் நுழைவதற்கான தளமாக இலங்கை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த வகையில் பார்த்தாலும் இது இலங்கைக்குத் தலைவலியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலும் இலங்கைக்கு நெருடிக்கடியைக் கொடுத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகிலே தனித்து விடப்பட்ட ஒரு நாடு தான் வடகொரியா. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் உலகில் சீனாவை விடவும், ஈரானை விடவும் அதிகம் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வடகொரியாவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் அந்த நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்ற விபரங்களே வெளிவருவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வடகொரியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அந்த நாட்டுடன் பெரும்பாலான நாடுகள் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகளைத் தவிர்த்தே வந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் தான் விக்கிலீக்ஸ் வடகொரியாவிடம் இருந்து 2009இன் தொடக்கத்தில் இலங்கை அரசு றொக்கட் லோஞ்சர்களை வாங்கியதாக தகவல் வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி உரையாடல் மூலமும் ஆயுதங்கள் வாங்கப்பட்டதாகக் கூறிப் பெருமைப்பட்டிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் அடங்கியுள்ளதா என்பது தான் இப்போதுள்ள கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே வடகொரியாவிடம் இருந்து புலிகள் ஆயுதங்களை வாங்கியதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சீனாவே வடகொரியா ஊடாகப் புலிகளுக்கு ஆயுதங்கள் விற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;சீனா புலிகளுக்கு ஆயுதங்களை விற்ற விவகாரத்தை அவ்வளவாக இலங்கை அரசு கண்டுகொள்வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் அது இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே வடகொரியாவுக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போட்டது இலங்கை அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதே வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கியதாக இலங்கை மீது குற்றச்சாட்டு விழுந்துள்ளது. ஆனால் ஆயுதக் கொள்வனவுகளுக்குப் பொறுப்பாக இருந்த மூத்த அரச அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;1971 இல் மேற்கொள்ளப்பட்ட ஜேவிபி கிளர்ச்சிக்கு வடகொரியா உதவியதாக சந்தேகிக்கப்பட்டதை அடுத்து அந்த நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை முறித்துக் கொண்டது என்றும் வடகொரியாவிடம் ஆயுதங்களை வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தென்கொரியாவிடம் இருந்து கடற்படைக்கான அதிவேகத் தாக்குதல் படகுகள் சிலவற்றை 1980களில் வாங்கியிருந்தது இலங்கை. &lt;br /&gt;&lt;br /&gt;தென்கொரியாவுடன் இலஙகை நெருக்கமான வர்தக உறவுகளையும் பேணி வருகிறது. வடகொரியாவுடன் இலங்கை இரகசிய உறவை வைத்திருந்தது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதால் தென்கொரியா தன்னை விடப் போய் விடுமோ என்ற அச்சமும் இலங்கைக்கு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காக ஆயுதங்களை வாங்கிக் குவித்த அரசாங்கம் அது எங்கிருந்து, எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயத் தயாராக இருக்கவில்லை. &lt;br /&gt;ஆனால் போரின் முடிவுக்குப் பிறகு வெளியாகும் தகவல்கள் அவற்றை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வடகொரியாவிடம் ஆயுதங்களை வாங்கிய விவகாரத்தை விட, லஷ்கர் ஈ தொய்பா பற்றிய விவகாரத்தை விட இலங்கை அரசு அதிகம் அச்சம் கொள்ளும் பல விவகாரங்கள் இன்னமும் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறுதிப்போரின்போது போர்க்களத்திலும் அதற்கு வெளியே அரசியல், இராஜதந்திரக் களங்களிலும் மறைமுகமாக நடந்த பல சம்பவங்கள் பற்றிய ஆவணங்களும் விக்கிலீக்சிடம் உள்ளதா என்பதே இலங்கை அரசின் கவலை.  அவை வெளியானால் இலங்கை அரசு அதிகளவிலான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் சுபத்ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-5240106830895846895?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/5240106830895846895/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post_12.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5240106830895846895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5240106830895846895'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post_12.html' title='வன்னி இறுதிப்போர்:  வெளிவராத சங்கதிகளையும் வெளியிடுமா விக்கிலீக்ஸ்?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TQUT2-UIJ8I/AAAAAAAAAck/GUj1Sf5F_AU/s72-c/wikileaks-cartoon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-2423421031537130991</id><published>2010-12-01T14:08:00.002-05:00</published><updated>2010-12-01T14:11:10.801-05:00</updated><title type='text'>சிறிலங்காவின் 'முள்ளிவாய்க்கால்': பர்மா இராணுவ அரசுக்கு முன்மாதிரி?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPadmIynejI/AAAAAAAAAcU/83BDaiGjdZY/s1600/Burma-refugee.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPadmIynejI/AAAAAAAAAcU/83BDaiGjdZY/s400/Burma-refugee.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545793269673720370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்ட வழிவகைகள்தான் என்ன என்பதை அறிந்து அந்த &lt;br /&gt;முறைமையினத் தானும் கைக்கொள்ளும் முனைப்புக்களில் பர்மிய அரசாங்கம் [Myanmar] ஈடுபட்டிருப்பதைக் காட்டும் சம்பவங்கள் இடம்பெறுகிறது' என அண்மையில் தனது &lt;br /&gt;ஆய்வறிக்கையில் கிம் ஜொலிவ் [Kim Joliffe] என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு The Irrawaddy இணையத்தளத்தில் SIMON ROUGHNEEN எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் திவண்ணமதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்தினுள் போரின் காரணமாக கிழக்கு பர்மாவிலிருந்து [Myanmar] தாய்லாந்தின் தக் மாகாணத்திற்கு ஆயிரம் அகதிகள் வந்துசேர்ந்துள்ள நிலையில், தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறுதேசிய இனத்தினர் [ethnic minority ] வசிக்கும் கிழக்கு பர்மாவின் பகுதிகளில் போர் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;30,000 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய வா அரச இராணுவம் [United Wa State Army - UWSA] போன்ற சிறுதேசிய இனத்தவரின் ஆயுதக்குழுக்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்வதற்கு வழங்கப்பட்ட பல காலக்கெடுக்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதும் இனப்பிரச்சினையில் கவனஞ் செலுத்தப்படும் என நம்பப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 13 அன்று விடுதலை செய்யப்பட்ட பர்மிய [Myanmar] எதிர்க்கட்சித் தலைவியான Aung San Suu Kyi பர்மாவின் ஆட்சி தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறுதேசியங்களின் [ethnic minority] கோரிக்கைக்கு அமைய கூட்டாட்சி முறையிலமைந்த தீர்வு திட்டம்பற்றிக் [federal-type solution] கலந்துரையாடுவதற்கான இரண்டாவது பான்லோங் மாநாடு ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எது எவ்வாறிருப்பினும், பர்மாவினது [Myanmar] அமைதிக்கும் அபிவிருத்திக்குமான சபையானது 24 ரசியத் தயாரிப்பு தாக்குதல் உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்திருப்பதும் சல்வீன் ஆற்றுக்கு அருகாக உலங்குவானூர்திகளுக்குமான தளத்தினை அமைதிருப்பதும் நாட்டினது இனப்பிரச்சினைக்கு 'இராணுவ வழித் தீர்வை' ஏற்படுத்தும் நோக்கிலேயே பர்மிய இராணுவம் செயற்படுகிறது என்பதைக் காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவில் புதிய மோதல்கள் வெடிக்கலாம் என எழுந்த அச்சத்தினையடுத்து, அங்கு செயற்பட்டுவரும் ஆறு சிறுதேசிய இன ஆயுதக் குழுக்களும் ஒரு புரிந்துணர்வு பாதுகாப்பு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குழுக்களில் ஏதாவதொருகுழு 'டட்மடோ' [Tatmadaw ] என அழைக்கப்படும் பர்மிய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகுமிடத்து ஏனைய அனைத்துக் குழுக்களும் இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தொடுக்கும் என்பதே அது. &lt;br /&gt;&lt;br /&gt;குறித்த இந்த ஆயுதக் குழுக்கள் தம்மிடத்தே 60,000 போராளிகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறிருப்பினும், இந்த ஆறு ஆயுதக் குழுக்களும் இணைந்து இராணுவ அணியொன்றை உருவாக்கி படைச்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;"இங்குள்ள பலதரப்பட்ட ஆயுதக்குழுக்களும் ஒன்றுடனொன்று பிரித்தே வைக்கப்பட்டிருப்பதனால் இவை அனைத்தும் இணைந்து இராணுவ ரீதியிலான கூட்டணி ஒன்றை அமைத்துக் கொள்ளவதற்கான வாய்ப்பு பெரிதாக இல்லை" என 'தேர்தலுக்குப் பின்னான பர்மா' என்ற அரங்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆங் நாய்ங் ஓ [Aung Naing Oo ] கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவில் [Myanmar] மீண்டும் மோதல்கள் வெடித்துவிடுமோ என்ற அச்சம் இந்தப் பிராந்தியத்தின் ஊடாக போதைப்பொருட்கள் அதிகம் கடத்தப்படுவதற்கு வழிசெய்கிறதாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நாவின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவியல் செயற்பாடுகளுக்கான செயலகத்தின் [UN Office on Drugs and Crime (UNODC] அறிக்கை கடந்தவாரம் பாங்கொக்கில் வெளியிடப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;2009ம் ஆண்டு தாய்லாந்து நோக்கி போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது என இதன்போது குறிப்பிட்ட இந்த செயலகத்தின் பணியாளரான கறி லூயிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதானது ஆயுதக்குழுக்கள் தமக்குத் தேவையான ஆயத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்காக &lt;br /&gt;தம்மிடமுள்ள போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் வழிசெய்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2009ம் ஆண்டு செப்ரெம்பரில் இடம்பெற்ற கொஹங் பிராந்தியத்தின் மீதான பர்மிய இராணுவத்தின் தாக்குதல் தொடர்பில் சீனா தனது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்தின் விளைவாக 40,000 அகதிகள் சீனாவின் யுனான் பிராந்தியத்தினை நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக இடம்பெயர்ந்த மக்களில் பொரும்பான்மையானவர்கள் சீன இனத்தைச் சேர்ந்தவர்களென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இறுதிப் போரின்போது சீனா போர்த்தளபாட மற்றும் இரசதந்திர ஆதரவினைச் சிறிலங்காவிற்கு வழங்கிநின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இறுதிப்போரின் போது சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதலை நடாத்தியதாகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சீனா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முன்னெடுக்கும் 'முத்துமாலைத்' திட்டத்தில் பர்மாவினைப் [Myanmar] போலவே சிறிலங்காவும் ஓர் அங்கமே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர், பங்களாதேசின் சிற்றகொங், பர்மாவின் ஸ்ரூவே மற்றும் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை ஆகிய இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா துறைமுகங்களைப் புதிதாக அமைத்து வருகிறது அல்லது ஏற்கனவே உள்ள துறைமுகங்களைத் திருத்தியமைத்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி வலிந்த தாக்குதலைச் சிறிலங்கா அரசபடையினர் தொடுத்த அதேவேளையில் சீனா சிறிலங்காவினது தென்முனையில் &lt;br /&gt;அம்பாந்தோட்டைப் பகுதியில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்கும் பணியினை ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கொழும்புக்கான மேற்கு நாடுகளின் கடனுதவிகள் வற்றிச்சென்ற நிலையில் கொழும்புக்கு அதிகளவிலான நிதியுதவியினை வழங்கும் நாடாக சீனா மாறியது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்பட்ட கையோடு பர்மாவிற்கு [Myanmar] பயணம் செய்திருந்த சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச பர்மிய இராணுவ அரசாங்கத்தின் தலைவர் தான் ஸ்வேவை [Than Shwe] சந்தித்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவிற்கும் பர்மாவிற்கும் [Myanmar] இடையிலான 60 ஆண்டுகால இராசதந்திர உறவினைப் பூர்த்திசெய்யும் வகையில் கடந்த யூன் 2009ம் ஆண்டு பர்மிய இராணுவத் தலைவர் தான் ஸ்வெ மற்றும் அந்த நாட்டின் முதன்மையான ஜெனரல்களை உள்ளடக்கிய குழுவொன்று சிறிலங்காவிற்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவில் விடுதலைப் புலிகளமைப்பு முன்னெடுத்த சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தின் போது பர்மிய ஜெனரல்களுக்கு சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருநாட்டு அரசாங்கங்களும் தேரவாத பௌத்தச் சிந்தனையின் [Theraveda Buddhism] அடிப்படையிலேயே செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த விடுதலைப் புலிகளுக்கெதிரான போரைச் சிறிலங்கா வென்றது எவ்வாறு என்பதை பர்மிய இராணுவத்தினர் அறிய விரும்புவதாக வெளிபடையாக தெரிவத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இரண்டு நாடுகளும் தமக்கிடையே பரஸ்பர படைத்துறைசார் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;"தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்ட வழிவகைகள்தான் என்ன என்பதை அறிந்து அந்த &lt;br /&gt;முறைமையினத் தானும் கைக்கொள்ளும் முனைப்புக்களில் பர்மிய [Myanmar] அரசாங்கம் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் சம்பவங்கள் இடம்பெறுகிறது" என அண்மையில் தனது &lt;br /&gt;ஆய்வறிக்கையில் கிம் ஜொலிவ் [Kim Joliffe] என்ற ஆய்வாளர் கூறியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்த சிறிலங்காவின் இராணுவ அரசயில் மூலேபாயத்தின் அடிப்படையில், ஹரன் தேசிய விடுதலை இராணுவம் [Karen National Liberation Army - KNLA] என்ற அமைப்புடன் முதலில் போர்நிறுத்தத்தினை ஏற்படுத்துவதன் ஊடாக அந்த அமைப்பினைப் பலவீனமடையச் செய்வதுதான் பர்மாவினதும் மூலோபாயம். &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட இந்த அமைப்புத்தான் பர்மிய இராணுவ அரசாங்கத்துடன் இன்னமும் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்தவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பதிலளிக்கும் வகையில் செயற்பட்ட ஹரன் தேசிய விடுதலை இராணுவம் [Karen National Liberation Army - KNLA] என்ற அமைப்பு தங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு நாடுகளைச் சேர்ந்த படை வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தூரத்திலிருந்து இயக்கப்படும் வீடியோ கமராக்கள், உளவு நடவடிக்கைக்கான கமராக்கள் மற்றும் உணரிகளை பர்மாவினது கிழக்குப் பகுதிக் காடுகளில் பொருத்தியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பர்மாவின் கிழக்குப் பகுதியில் பர்மிய அரச படைகளின் 237 பற்றாலியன்கள் நிலைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்தப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக 73,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வசிப்பதாகவும் பர்மிய சமூக அமைப்புக்களின் அவையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் க்நியோ பா கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பர்மிய நகரங்களான மியாவடி மற்றும் திறீ பகொடாஸ் பாஸ் ஆகியவற்றுக்கு அருகே இடம்பெற்ற மோதல்களின் விளைவாக 30,000க்கும் அதிகமான பொதுமக்கள் எல்லையினைக் கடந்து அகதிகளாகத் தாய்லாந்திற்குச் சென்றிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்வாறிருக்க உள்நாட்டில் 446,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து வசிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுதேசிய இனங்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் சிறுதேசிய இனத்தினருக்கு எதிரான பல்வேறுபட்ட குற்றச்செயல்களில் பர்மிய இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டாய வேலை, கட்டாய இடப்பெயர்வு மற்றும் பாலியல் வல்லுறவுகள் போன்றவை இவற்றுள் அடங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக பர்மிய இராணுவத்தினர் புரிந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான சுதந்திர ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் வாதிட்டுவருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஹரன் Karen இனத்தினைச் சேர்ந்த மக்கள் செறிவாக வாழும் கிழக்குப் பர்மாவில் அதிக வன்முறைகள் வெடிக்கலாம் என ஜொலிவ் [Kim Joliffe] தனது அறிக்கையில் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுத்ததைப் போல, "சிறுதேசிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களைப் படுகொலைசெய்தல், ஹரன் தேசிய விடுதலை இராணுவம் என்ற அமைப்பினது முக்கிய தளங்களை இலக்குவைத்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளுதல், பொதுமக்களை கொலை வலயத்திற்குள் கவர்ந்திழுத்தல் போன்ற செயற்பாடுகள் இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்துக் காணப்படும்". &lt;br /&gt;&lt;br /&gt;"ஈற்றில் சிறிலங்காவில் இடம்பெற்றதைப் போல கொலைவலயத்திற்குள் கவர்ந்திழுக்கப்படும் அனைவரும் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி செறிவான எறிகணைத் தாக்குதல்களின் ஊடாகப் படுகொலைசெய்யப்படுவார்கள்" என ஜொலிவ் [Kim Joliffe] தனது ஆய்வு அறிக்கையில் கூறுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-2423421031537130991?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/2423421031537130991/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2423421031537130991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/2423421031537130991'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/12/blog-post.html' title='சிறிலங்காவின் &apos;முள்ளிவாய்க்கால்&apos;: பர்மா இராணுவ அரசுக்கு முன்மாதிரி?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPadmIynejI/AAAAAAAAAcU/83BDaiGjdZY/s72-c/Burma-refugee.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-3402387984030826645</id><published>2010-11-30T14:30:00.003-05:00</published><updated>2010-11-30T14:33:26.220-05:00</updated><title type='text'>அரசியல் பார்வை:  தனது வலைக்குள் தாமே மாட்டிக் கொண்ட மகிந்தர்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPVRHSj28AI/AAAAAAAAAcM/eb2bTt41GKQ/s1600/raja-paksa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPVRHSj28AI/AAAAAAAAAcM/eb2bTt41GKQ/s400/raja-paksa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545427701859807234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையை முழுமையாகச் சீனாவிடம் விட்டுவிட இந்தியாவோ அமெரிக்காவோ தயாராக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிலரைச் சில காலம் ஏமாற்றலாம் : பலரைப் பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்ற உலகறிந்த உண்மையை சகலரும் அறிவர். ஆனால் ஏமாற்றும் எவரும் இந்த விதியை நினைவில் கொள்வது கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியேனும் தமது காரியத்தைச் சாதித்து விடும் வெறியோடு எவர் தலையில் என்றாலும் மிளகாய் அரைத்து சிலர் வெற்றி பெற்று விடுவர். இந்த விடையத்திலும் வல்லவனுக்கு வல்லவன் என்ற உலக இயங்கியல் தத்துவம் செயற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே உலகின் பல வேறு எதிரி நாடுகளை ஒரே நேரத்தில் ஏதோ காரணத்துக்காக நம்ப வைத்து தனது காரியத்தைச் சாதித்துக் கொண்ட மகிந்தர் இப்போது அந்த நாடுகளுக்குக் கூலி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் ஒவ்வொருவரும் அவரிடம் விலையாகக் கேட்பது அவரது கள்ளம் இல்லாத உள்ளத்தை. அவரால் கொடுக்க முடியாத விலையாக இருப்பதும் அதுவே. ஏன் என்றால் அவரிடம் அப்படியான ஒரு உள்ளம் கிடையவே கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;இனி இலங்கை பற்றிய உலக நாடுகளின் பார்வையும் அவற்றின் செயற்பாடுகளும் பற்றிய பார்வையைக் கவனத்தில் எடுப்பது அவசியமாக உள்ளது. கடல் வழிப் பயணம் மேற்குலக நாடுகளின் வாழ்வாதார முக்கியத்துவம் பெற்ற நாளில் இருந்து இலங்கை தென் கிழக்கு ஆசியாவில் ஒரு கேந்திர மையமாக உருவாகி விட்டது. இலங்கையும் அதன் வழியாக இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்துக்கு உள்ளான நிலைக்கு இதுவே முதற் காரணியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;1948ல் பிரித்தானிய அரசு இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து என்ற பாதிச்சுதந்திரம் வழங்கவும் திரிகோணமலைத் துறைமுகத்தை தன்னிடமே வைத்துக் கொண்டதும் கடல் வழிப் பாதையில் அதன் முக்கியத்துவம் கருதிய வெளிப்பாடே ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிங்கள அரசியல் வாதிகளைப் பொறுத்த வரை இலங்கையைப் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள இனம் நாட்டின் அதிகாரத்தைத் தமிழர் பிரதி நிதிகளுக்குப் பதவி பணம் கொடுத்தே நாட்டின் அதிகாரத்தைத் தானே எடுத்துக் கொண்டு விட்டது. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் முழு இலங்கைத் தீவின் இறையாண்மையும் சிங்கள இனத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக மாற்றி விட்டது. இன்று புது வகையான இன வெறி ஜனநாயக அரசியலை உலகுக்கே அறிமுகம் செய்து தமிழ் இனப் படுகொலையை உலகறிய நடத்தி அதனை நியாயப் படுத்தியும் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;1956 ல் சிங்கள இனவெறி அரசியலை முன்னெடுத்துப் பதவிக்கு வந்த பண்டார நாயக்காவுக்கு தேர்தல் கூட்டாக அமைந்த பிலிப் குணவர்த்தனா போன்ற இடது சாரிகளின் செல்வாக்கு மற்றும் ஆங்கில அறிவற்ற சாதாரண சிங்கள விவசாயிகள் ஏழைகள், தொழிலாளிகளின் நலன் கருதியும் முதலாளித்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். அன்றே சீனாவுடன் அரிசி றப்பர் வர்த்தக ஒப்பந்தம் செய்து தனது மேற்குலக எதிர்ப்பை நேருவுடன் சேர்ந்து அணி சேராக் கொள்ளை என்ற சொல்லாடல் மூலம் வெளிப்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தமும் தனிச் சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கும் நாடு முகம் கொடுத்தது. இப்படியான ஒரு சூழ் நிலை வெளிநாடுகளின் சதி வேலைகளுக்கு மிகவும் சிறந்த தருணத்தை ஏற்படுத்தின. &lt;br /&gt;&lt;br /&gt;உலக வல்லரசுகளின் இராஜீய நடை முறையில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு துருப்புச் சீட்டும் உள்ளது. இது முக்கியமாக இரண்டாவது உலகப் போரின் பின்னர் உலகம் ரஷியாவின் தலைமையிலும் அமெரிக்காவின் தலைமையிலும் கிழக்கு மேற்காக அணி வகுத்து நின்ற போது நடைமுறைக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவும் ரஷியாவும் உலக ஆதிக்கப் போட்டியில் சிறிய நாடுகளை தம்வசப்படுத்தும் போரில் ஈடுபட்டன. இதன்படி தமக்குத் தேவையான நாட்டின் ஆட்சி பீடத்தைத் தமக்குள் வளைத்துப் போடுவதற்குச் சாம, பேத, தான, தண்டம் என்ற வழி முறையில் செயற்படுத்துவர். தண்டம் என்பது ஆட்சியில் உள்ள ஆளைப் போட்டுத் தள்ளுவது. இதனையே பனிப்போர் என வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுவர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பனிப் போரில் இலங்கையில் முதல் பலியாக விழுந்தவர் பண்டாரநாயக்கா ஆவர். பேருக்கு நீதி விசாரணை நடத்தி சோமராம தேரோ என்ற பிக்குவும் மரண தண்டனை பெற்றுத் தூக்கில் இடப் பட்டார். அந்த வழக்கில் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க எந்த வித விசாரணையும் இல்லாது விடப்பட்டார் என்பது இந்த வழக்கின் ஒரு சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சிறப்பு முக்கிய சந்தேகநபராகப் பேசப்பட்ட இரவு விடுதி சொந்தக்காரரான ஒசி கொரேயா என்பவர் எதுவித தண்டனையும் இல்லாது தப்பித்துக் கொண்டார். இவருக்கு அமெரிக்கப் பின்புல ஆதரவு இருந்தது எனப் பலமாகப் பேசப்பட்டது. எனவே பண்டார நாயக்கா ஒரு வெளி நாட்டுச் சதியால் இலங்கையில் விழுந்த முதல் பலி என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது. &lt;br /&gt;&lt;br /&gt;1959ல் பண்டாரநாயக்கா தலை உருண்டு இன்று 51 ஆண்டுகள் போய் விட்டன. இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் அதன் அதிபர் கென்னடி ,பாக்கிஸ்தான் ஷியாவுல் ஹக், வங்கத்தில் முஜிபுர் றஃமான், இந்தியாவில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, இலங்கையில் பிரேமதாசா எனப் பல அரசியல் கொலைகளை உலகம் கண்டு விட்டது. ஷியாவுல் ஹக் சென்ற விமானம் வானில் வெடித்துச் சிதறியது. ஆயினும் அதில் வெளிநாடு ஒன்றின் கரங்கள் இருக்கக் கூடிய சாத்தியப்பாடு அதிகம் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி இருவரது கொலைகளும் முழுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளுக்கு உட்பட வில்லை என்பதும் இரண்டிலுமே வெளிநாடுகளின் கை இருக்கப்பலமான காரணங்களும் நிறையவே உண்டு. அரசியல் கொலைகளில் ஒரு சிறப்பு அதன் விசாரணை நேர்மையாக இடம் பெறாது. முக்கிய சந்தேக நபர் பகிரங்கமாகவே கென்னடி கொலையில் நடந்தது போன்று இன்னொருவர் அப்பாவிபோல் சந்தேகநபரைக் கொன்று விசாரணைக்கு முற்றுப் புள்ளி போட்டு விடுவார். அல்லது இந்திரா காந்தி ராஜீவ் காந்தி கொலைகளில் நடந்தது போன்று விசாரணை வேண்டும் என்றே திசை திருப்பப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்டு விடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இக்கொலைகள் எதிர்பார்த்த அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறுவதில்லை. ராஜீவ் காந்தி கொலையால் நேரடிப் பயனாக இலங்கை அரசு இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க முடிந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலக அரங்கில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் அரசு நோக்கிய தமிழீழத் தனி அரசின் தலைவராக விளங்கிய பிரபாகரனின் தலையை சிங்களம் எடுக்கவும் வகை செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் கடைசியாக இடம்பெற்ற ஆட்சி மாற்ற வேலைத் திட்டத்தால் பிரபாகரனும் அவருக்கு மாற்றீடாக வரக் கூடிய தமிழர் தலைமைகளும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டன. இதில் இந்தியா அமெரிக்கா சீனா முழுமனதோடு ஈடுபட்டதற்கான ஏது நிலைகள் நிறையவே காணப்படுகின்றன. இந்தியாவின் விருப்பம் யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் அமெரிக்கா எமது நண்பன் இல்லை என்பதற்கு 2008ல் அமெரிக்க வெளிவிவகாரத் துறையின் வேலைத் திட்டம் ஒன்றில் இலங்கையில் இரண்டு அதிகாரமையம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஓன்றை இல்லாது ஒழிக்க வேண்டும். அதை நாம் செய்யாது நட்பு நாடுகளைக் கொண்டு செய்து முடிக்க வேண்டும். திருகோணமலைத் துறைமுகம் முக்கியமானது அதற்குத் தடையாக விடுதலைப்புலிகள் உள்ளனர் எனவும் கூறப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா பாகிஸ்தான் மூலமாக ஆயுதம் வழங்கியும் இந்தியாவையும் இலங்கையையும் ஊக்குவித்ததோடு 7 நாடுகளின் இராணுவ ஆலோசகர்களில் ஒருவராக வன்னிப்போர் முனையில் இலங்கைப் படைகளுக்கு உதவி அளித்தும் தமிழின அழிப்புக்கு உதவி ஒத்தாசை வழங்கியது. எனவேதான் இன அழிப்பு என்ற குற்றுச்சாட்டை முன்னிறுத்தக் கூடாது எனத் தமிழர் தரப்புக்கு அமெரிக்கா அன்புக்(?) கட்டளை போடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நடைமுறையில் எந்த நாடும் இன்னொரு நாட்டின் மீது தனித்துப் போர் தொடுக்கும் நிலை இல்லை. ஈராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்கா போர் தொடக்கிய போதும் தனது போரை நியாயப் படுத்த பிற நாடுகளை அணி சேர்த்தே நடத்தி வருகிறது. ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வலிந்து பல பொய்களையும் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயருக்கு அழுத்தம் கொடுத்தும் அமெரிக்கா போரைத் தொடக்கியது. அமெரிக்கா தனது முட்டாள் தனத்தால் படைகளையும் பெரும் பணச் செலவையும் இழந்து அவமானப் பட்டுக்கிடக்கிறது. ஈராக்கிலும் ஆப்கானிலும் ஒரே நேரத்தில் போர் நடக்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவை இன்று ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போர்களால் சீனாவிடமே பெருந்தொகைக்குக் கடனாளியாகி விட்ட நிலையில் இலங்கை விடையத்தில் இந்தியாவோடு சேர்ந்து தானும் அணில் ஏற விட்ட நாய் போல ஏமாந்து நிற்கிறது. இலங்கை இப்போது சீனாவின் செல்லப் பிள்ளையாகத் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டது. இன்றைய உலகில் போர் மூலம் வர்த்தக பொருளாதார நலன்களைப் பெறுவது முடியாத படிக்கு உலகில் பல நாடுகளும் அணு ஆயுதப் போட்டியில் இறங்கியும் ஏனைய போர்த் தளபாடங்களை பெற்றும் பலம் பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;லெபனான் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தால் இஸ்ரவேல் மூக்குடைபட்டு நிற்பதும் ஈராக் ஆப்கானில் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளும் மூச்சு விடத்தவிப்பதும் உலகில் போர் என்பது கைக்குதவாத பொருளாகி விட்டதையே காட்டுகிறது. ஆனாலும் நாடுகளுக்குள் மோதல் ஏற்படும் காரணிகள் ஏராளம். அதுவும் இலங்கையைப் பொறுத்த வரை அதன் கேந்திர முக்கியத்துவம் சீனாவின் வளர்ச்சியால் பெருமளவு அதிகரித்து விட்டது. சீனாவின் வல்லரசுக் கனவு உறுதியாகி விட்ட அளவுக்கு அதன் பொருண்மிய இராணுவ பலம் உலகின் முதல் தரத்துக்கு ஏறிவிட்டது எனலாம். இதேவேளையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவால் சீனாவின் பலத்தைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. அதே வேளை இந்தியாவின் எல்லைகளை பல முறை கபளீகரம் செய்து வரும் சீனாவை இந்தியாவால் எதுவும் செய்ய முடியாத நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை முழுமையாகச் சீனாவிடம் விட்டுவிட இந்தியாவோ அமெரிக்காவோ தயாராக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கட்டுக் கடங்காது திமிறி நின்ற மகிந்தரை விழுத்திவிட்டு அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள சரத் பொன்சேகா மூலம் தமது ஆசையை அடைய இந்தியாவும் அமெரிக்காவும் போட்ட திட்டம் மகிந்தரின் சாதுரியத்தால் தவிடு பொடி ஆக்கப்பட்டு அவர் முன்னரிலும் அதிக பலமும் வளமும் பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறி விட்டார். முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இருந்த அதே மரணச்சனி இப்போ எங்கே போயிருக்கிறது என்பதை வாசகர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. உலகச் சதுரங்கப் போட்டியில் அடுத்த தலை விரைவில் மான்புமிகு மகிந்தரின் தலையாக இருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.................? &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் த.எதிர்மன்ன சிங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-3402387984030826645?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/3402387984030826645/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/11/blog-post_30.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3402387984030826645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/3402387984030826645'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/11/blog-post_30.html' title='அரசியல் பார்வை:  தனது வலைக்குள் தாமே மாட்டிக் கொண்ட மகிந்தர்!'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPVRHSj28AI/AAAAAAAAAcM/eb2bTt41GKQ/s72-c/raja-paksa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-5966353399343751188</id><published>2010-11-28T06:18:00.001-05:00</published><updated>2010-11-28T06:22:11.138-05:00</updated><title type='text'>அச்சுறுத்தும் பேரினவாதம்: குறைந்தபட்ட ஜனநாயக சூழல் என்பது கூட; "எட்டாக்கனியாகவே" உள்ள யாழ்ப்பாணம்.........?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPI6738pBvI/AAAAAAAAAcE/kZQuYcsPA2w/s1600/yarl_boy_2010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPI6738pBvI/AAAAAAAAAcE/kZQuYcsPA2w/s400/yarl_boy_2010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5544558891551491826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிலங்கையில் வலுவிழந்து போயுள்ள ஜேவிபி இப்போது தமிழ்மக்களின் முதுகில் சவாரி செய்யத் தொடங்கியுள்ளது புதுக்கதை. முன்னர் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் பெயரால் மேற்கொண்ட ஜேவிபி இன்று காணாமற்போனதடுப்புக்காவலில் உள்ள தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் தான் சர்ச்சைக்குரியவை. இப்போதும் வடக்கில் இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. முன்னர் இராணுவ நிர்வாகத்தில் யாழ்ப்பாண மக்கள் நெருக்கடிகளை துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம் ஜேவிபியினருக்கு இது தெரியவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே இராணுவ நிர்வாகத்தினால் தாம் வஞ்சிக்கப்படும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்கிறது. எது எப்படியோ ஜேவிபி போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகள் இப்போதாவது வடக்கில் ஜனநாயக சூழல் இல்லை இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று சொல்ல முன்வந்திருக்கின்றனவே அதுபோதும். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இனி&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்ச ஜனநாயக சூழல் கூட இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்ச ஜனநாயக சூழல் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியுள்ள நிலையிலும் ஜனநாயக சூழல் என்பது யாழ்ப்பாணத்தில் எட்டாக்கனியாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவ்வப்போது வந்து போகிறவர்களுக்கு மறைமுகமாக இருந்து வரும் அழுத்தங்கள் வெளியே தெரிவதில்லை. இராணுவ நிர்வாகத்தின் அழுத்தமான பிடியில் இருந்து யாழ்ப்பாணம் இன்னமும் விலக முடியாத நிலையில் தான் இருக்கிறது. இது தான் உண்மையான நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தமாகவே, இலங்கையில் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரமே கோலோச்சுகிறது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் யாழ்ப்பாணத்தில் குறைந்தபட்சமான ஜனநாயகம் கூட கிடையாது என்பதையும், ஜனநாயக ரீதியாக அங்குள்ள மக்கள் எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதையும் இப்போது தான் பலராலும் புரிந்து கொள்ள முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியின் ஒரு அங்கமான ""நாம் இலங்கையர்"" என்ற அமைப்பு ஒரு போராட்டத்தை நடத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;காணாமற்போனவர்களின் நிலையை கண்டறிந்து வெளிப்படுத்தக் கோரியும் சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும், அவர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று கோரியும் யாழ்.பஸ் நிலையம் முன்பாக அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜேவிபி எம்.பியான சுனில் ஹந்துநெற்றி கந்தர்மடத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அதன் பின்னர் மறுநாள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கற்கள், முட்டைகள், தக்காளிப் பழங்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. இவையெல்லாமே பொலிசாரினதும் படையினரினதும் கண் முன்னாலேயே நடந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;"நாம் இலங்கையர்" அமைப்பு ஏற்கனவே கோட்டே ரயில் நிலையம் முன்பாகவும் இதுபோன்ற போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. தென்னிலங்கையில் வலுவிழந்து போயுள்ள ஜேவிபி இப்போது தமிழ்மக்களின் முதுகில் சவாரி செய்யத் தொடங்கியுள்ளது புதுக்கதை. முன்னர் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனநாயகத்தின் பெயரால் மேற்கொண்ட ஜேவிபி இன்று காணாமற்போனதடுப்புக்காவலில் உள்ள தமிழருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யாருக்காக, யார் போராட்டம் நடத்துவதென்பதல்ல பிரச்சினை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் தான் சர்ச்சைக்குரியவை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம் என்பது அனைவருக்கும் பொதுமையானது. &lt;br /&gt;&lt;br /&gt;அது ஆளும்கட்சிக்கு ஒன்றாகவும், எதிர்க்கட்சிக்கு இன்னொன்றாகவும் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தெற்கில் அதன் பொருள் ஒன்றாகவும் வடக்கில் வெறொன்றாகவும் இருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழருக்கும் சிங்களவருக்கும் தனித்தனியானதாக இருக்க முடியாது. &lt;br /&gt;அரசாங்கம் சொல்கிறது இப்போது தேவேந்திர முனை தொடக்கம் பருத்தித்துறை முனை வரைக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் தான் என்று. ஆனால் உண்மையில் இப்போதுள்ள ஜனநாயக சூழல் என்பது இடத்துக்கிடம் வேறுபட்டதாக, இனத்துக்கினம் வேறுபட்டதாக, கட்சிக்குக் கட்சி வேறுபட்டதாகவே இருக்கிறது. ஜேவிபியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் வடக்கில் இன்னமும் ஜனநாயகம் துளிர்விடக் கூட இல்லை என்பதும், மாற்று அரசியல் என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என்பதும் வெளிப்படையாகியுள்ளது. இப்போதும் வடக்கில் இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; முன்னர் இராணுவ நிர்வாகத்தில் யாழ்ப்பாண மக்கள் நெருக்கடிகளை துன்பங்களைச் சந்தித்த போதெல்லாம் ஜேவிபியினருக்கு இது தெரியவேயில்லை. ஆனால் அதே இராணுவ நிர்வாகத்தினால் தாம் வஞ்சிக்கப்படும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்கிறது. எது எப்படியோ ஜேவிபி போன்ற தென்னிலங்கை அரசியல் சக்திகள் இப்போதாவது வடக்கில் ஜனநாயக சூழல் இல்லை இராணுவ ஆட்சி தான் நடக்கிறது என்று சொல்ல முன்வந்திருக்கின்றனவே அதுபோதும். &lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்களாகின்ற போதும் வடக்கைத் தமது இறுக்கமான இராணுவக் கட்டப்பாட்டில் இருந்து விடுவிக்க அங்கு ஜனநாயக சூழலை உருவாக்க அரசாங்கம் மறுத்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு பிபிசி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தது அரசாங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்ல நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிப்போரும் கண்காணிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் அர்த்தம் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரமான கருத்துக்கள் எதுவும் வடக்கில் இருந்து வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவே உள்ளது என்பதே அது. &lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுக் கருத்துக்களும் போராட்டங்களும் தான் ஜனநாயக்கத்தின் அடிப்படை. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் காலத்தில் ஜனநாயகம் இல்லை மாற்றுக் கருத்தை வெளிப்படுத்த முடியாது நிலை என்றெல்லாம் முன்னர் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நின்றவர்கள் எல்லோரும் இப்போது மௌனமாக உள்ளனர். அதே ஜனநாயக மறுப்பு சூழலை வடக்கில் ஏற்றுக் கொண்டு அவர்களும் தலைகுனிந்து வாழப் பழகிக் கொண்டுள்ளனர். இல்லையேல் அவர்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல் வந்து விடும். இது எந்தவகையிலான ஜனநாயகம் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜேவிபியினர் மட்டுமன்றி வடக்கில் யாரும் எதிர்ப்புப் போராட்டங்கள், பேரணிகளில் இறங்கக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகக் கவனமாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மனிதஉரிமைகள் தினத்தன்று நடத்தப்படவிருந்த பேரணி ஒன்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு நிறுத்த வைக்கப்பட்டது பலரும் அறிந்த ஒன்று தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இனி எந்த வகையிலான அரசியல் போராட்டமும் நடக்கக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு. அதற்காகவே தான் ஜேவிபியையும் அதேவழியில் அடக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. &lt;br /&gt;இந்தநிலையில்,&lt;br /&gt;&lt;br /&gt; சுனில் ஹந்துநெற்றி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யாழ்ப்பாண மக்கள் மீது பழியைப் போட்டது அரசாங்கம். ஆவேசம் கொண்ட யாழ்ப்பாண மக்கள் தாக்கியிருக்கலாம் என்று அங்குள்ள மக்களை வன்முறையாளராக அரசாங்கம் சித்திரிக்க முற்பட்டது தான் மிகமோசமான செயல். இப்படியான கருத்து இன வன்முறைகளைத் தூண்டி விடக் கூடிதென்பதைத் தெரிந்திருந்தும் கூட அரசாங்கம் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இவையெல்லாம் அரசாங்கம் வடக்கில் ஜனநாயக சூழல் திரும்புவதில் விரும்பம் கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுக் கருத்தும், ஜனநாயகமும், அரசியல் போராட்டங்களும் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் தான் உள்ளன. இந்தநிலை நீடிக்கும் வரை வடக்கில் நிரந்தரமான அமைதி தோன்ற முடியாது. அரசாங்கம் நிரந்தர அமைதியையும் ஜனநாயக ஆட்சியையும் விரும்புவது உண்மையானால் முதலில் வடக்கின் மீது கவிந்துள்ள இராணுவ சூழலைத் தளர்த்த வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், அரசியல் பிரசாரங்களைத் தடங்கலின்றி சுதந்திரமான முறையில் மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும். இதைச் செய்யாமல் எத்தனை தடவைகள் மாகாணசபைத் தேர்தலையோ உள்ளூராட்சித் தேர்தலையோ நடத்தினாலும் உண்மையான சிவில் நிர்வாகம் என்பது ஏற்படப் போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையாளர் சத்திரியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6627846492256800924-5966353399343751188?l=mykathiravan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mykathiravan.blogspot.com/feeds/5966353399343751188/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/11/blog-post_28.html#comment-form' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5966353399343751188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6627846492256800924/posts/default/5966353399343751188'/><link rel='alternate' type='text/html' href='http://mykathiravan.blogspot.com/2010/11/blog-post_28.html' title='அச்சுறுத்தும் பேரினவாதம்: குறைந்தபட்ட ஜனநாயக சூழல் என்பது கூட; &quot;எட்டாக்கனியாகவே&quot; உள்ள யாழ்ப்பாணம்.........?'/><author><name>mykathiravan.com</name><uri>http://www.blogger.com/profile/13445953249719780776</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='22' src='http://3.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/SzaYgyfHyMI/AAAAAAAAABo/16-S1db15N0/S220/K.Logu+1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TPI6738pBvI/AAAAAAAAAcE/kZQuYcsPA2w/s72-c/yarl_boy_2010.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6627846492256800924.post-7552257154700984856</id><published>2010-11-24T13:24:00.003-05:00</published><updated>2010-11-24T13:27:29.121-05:00</updated><title type='text'>அச்சத்தில் சிறீலங்கா:மகிந்த ராஜபக்ஸவினால் பிரித்தானியாவுக்கு செல்ல முடியுமா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TO1Yj4Zi5_I/AAAAAAAAAb8/oYs_Fvz9o1c/s1600/Rajapaksa_visits_london.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://1.bp.blogspot.com/_uGcaQ6XZlwk/TO1Yj4Zi5_I/AAAAAAAAAb8/oYs_Fvz9o1c/s400/Rajapaksa_visits_london.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543184089821145074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிரித்தானியச் சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்ஸவை கைது செய்வது ஒன்றும் இலகுவான விடயமாக இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பேரவையின் எச்சரிக்கையை இலங்கை அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் கருத முடியவில்லை. ஏனென்றால் தம் மீது எத்தகைய போர்க்குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று பிரித்தானியாவிடம் இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது அச்சத்தின் விளைவாக எழுப்பட்ட கேள்வி தான். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை லண்டனில் வைத்து கைது செய்வதானால் அதற்கு முந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். அத்தகைய முயற்சிகள் இன்னமும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் அதுவும் இதுவரை நடக்கவில்லை. பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த மிரட்டல் வெளியான போது அதையிட்டுப் பலரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தைக் கைவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான போது தான் இதன் தீவிரத்தைப் பலரும் புரிந்து கொண்டனர். மனிதஉரிமைச் சட்டங்களின் படி பிரித்தானிய மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் பிடியாணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டியது முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;[போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கொள்கையில், ஈழம் வெல்லும்வரை எம் பேனா முணை உண்மையயே எழுதும்]  "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி, &lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்றது பிரித்தானியா. &lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரித்தானியாவின் ஆதிக்கம் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தான் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கம் மெல்ல மெல்ல உடைந்து போகத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியா பல நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள் இன்னமும் அங்கு நடைமுறையில் இருக்கின்றன. அதைவிட பிரித்தானியா எழுதப்படாத அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு. மரபுகள் தான் அதன் அடிப்படையாக உள்ளன. எனவே காலனித்துவ காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களை பிரித்தானியா இப்போதும் பின்பற்றுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் எப்பாகத்திலும் ஒருவர் படுகொலை அல்லது ஏதுதேனும் மனிதஉரிமை மீறலை புரிந்திருந்தால் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுத்து விசாரணை நடத்தும் வசதிகள் இருந்தன. இதற்குக் காரணம் பிரித்தானிய அரசின் ஆதிக்கம் உலகம் முழுவதிலும் விரிந்து கிடந்தது. இதனைக் கருத்தில் கொண்ட உருவாக்கப்பட்ட சட்டம் தான் இப்போது இலங்கை அரசுக்கு நெருடிக்கடியாக மாறியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பிரித்தானியாவுக்கான பயணத்தை பிற்போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. &lt;br /&gt;&lt;br /&gt;இதை அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னதாகவே சர்வதேச ஊடகங்களில் கதை வேறு விதமாக வந்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒக்ஸ்போட் யூனியனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த மாத இறுதியில் உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் லண்டனுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவிருந்தார். இந்தக் கட்டத்தில் தான் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்கப் போவதாக தமிழர் பேரவை அறிவித்தது. பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த மிரட்டல் வெளியான போது அதையிட்டுப் பலரும் கண்டு கொள்ளவில்லை.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கான பயணத்தைக் கைவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான போது தான் இதன் தீவிரத்தைப் பலரும் புரிந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மனிதஉரிமைச் சட்டங்களின் படி பிரித்தானிய மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகப் பிடியாணையைப் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களுடன் அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டியது முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;சிலியின் சர்வாதியாக இருந்த அகஸ்ரோ பினோசே 1998ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக பிரித்தானியா சென்றிருந்த போது அங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார். சிலியில் ஸ்பானியர்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்காகவே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அச்சத்தில் தான் மகிந்த ராஜபக்ஸ லண்டன் செல்லவில்லை என்றும் கூட கதைகள் அடிபட்டன. சிலியின் சர்வாதிகாரி பினோசே லண்டனில் கைது செய்யப்பட்டிருந்தாலும் பிரித்தானிய நீதிமன்றத்தின் பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்படவில்லை. ஸ்பானிய நீத
